O Panneerselvam [File Image]
ADMK : அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் ஏற்பட்ட பிளவு காரணமாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் பிரிந்தனர். இதில் இபிஎஸ் பக்கம் அதிக ஆதரவு இருந்த காரணத்தால் நீதிமன்றங்கள், தேர்தல் ஆணையம் என அனைத்தும் தற்போது வரையில் இபிஎஸ்க்கு ஆதரவாகவே உத்தரவு வழங்கியுள்ளனர். மேலும், நீக்கப்பட்ட ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிமுக சின்னம், கொடி பயன்படுத்தவும் உயர் நீதிமன்றம் தடை விதித்து விட்டது.
இப்படியான சூழலில் தான் , வரும் மக்களவை தேர்தலில் எடப்படி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக தங்கள் தலைமையில் கூட்டணி அமைத்து தேர்தலில் களம் காண்கிறது. ஓ.பன்னீர்செல்வம் பாஜக ஆதரவுடன் சுயேட்சையாக ராமநாதபுரம் தொகுதியில் மட்டும் போட்டியிடுகிறார்.
சுயேட்சையாக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திற்கு ஓர் கோரிக்கை வைத்துள்ளர். அதில் , தாங்கள் தான் உண்மையான அதிமுக என்றும், எங்களுக்கு தான் இரட்டை இலை சின்னம் ஒதுக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் இரட்டை இலை சின்னத்தை முழுவதுமாக முடக்க வேண்டும் என்றும், ராமநாதபுரத்தில் சுயேட்சையாக போட்டியிடும் தனக்கு வாளி சின்னம் ஒதுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…