தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 34 வயது இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், இதுவரை 9 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 60-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில், இன்று அதிகாலை 5 மணியளவில், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த கடலாடியை சேர்ந்த, 34 வயது இளைஞர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
நேற்று ஒருவர், கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில், தற்போது தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.
தூத்துக்குடியில், மொத்தம் 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், 11 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகிற நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38 ஆக உள்ளது. இந்த 38 பேரில் 2 பேர் மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…