தொடர்ந்து நடைபெற்று வரும் சரி செய்யும் பணி ! புதுச்சேரியில் 144 தடை நீட்டிப்பு!

In Pondicherry, 144 restraining orders have been extended due to ongoing work to repair the damage caused by the Nivar storm.

புதுச்சேரியில்,நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தென் தமிழகத்தில் உள்ள தமிழகம் ,புதுவை  உள்ளிட்ட மாநிலங்களை கடந்த இரண்டு நாட்களாக அச்சமடைய செய்த புயல் நிவர்.புயல் புதுச்சேரி அருகே கரையை கடந்த நிலையில் ,தற்போது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து சென்றது.ஆனால் புயலின் காரணமாக சென்னை,புதுச்சேரி,விழுப்புரம் ,கடலூர் உள்ளிட்ட பட இடங்களில் கன மழை பெய்துள்ளது.இதன் விளைவாக சாலைகளிலும்,வீடுகளிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளது.மேலும் மரங்களும் ஆங்காங்கே சரிந்துள்ளது.தேங்கியுள்ள நீர்,மரங்களை அகற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தான் புதுச்சேரியில்,புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது.இன்று மாலை 6 மணி வரை 144 தடை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இன்று காலை 6 மணி வரை 144 தடை அமல் படுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.