I.N.D.I.A : இந்தியா கூட்டணி வென்றால் மட்டுமே நாட்டை காப்பாற்ற முடியும்.! முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!

Published by
மணிகண்டன்

நேற்று நெய்வேலி எம்.எல்.ஏ சபா. ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார். அமைச்சர்கள் பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், செஞ்சி மஸ்தான், காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக பங்கேற்று திருமண மக்களை வாழ்த்தி வரும் நாடாளுமன்ற தேர்தல் குறித்தும் பேசினார். அவர் கூறுகையில், வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வென்றால் மட்டுமே மத்திய அமைச்சரவையில் திமுக முக்கிய பங்காற்ற முடியும் என கூறினார்.

நேற்று காணொளி வாயிலாக முதல்வர் பேசுகையில், தனது தொகுதிக்கு தேவையானவற்றை கேட்டு பெறுவதில் எம்எல்ஏ சபா ராஜேந்திரன் எப்போதும் கண்ணும் கருத்துமாக இருப்பார்.  முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அதிகாரத்தில் இருக்கும் போது, நெல்லிக்குப்பம் பகுதியில் மலட்டாறு திட்டத்தை நிறைவேற்றி அப்பகுதி மக்களுக்கு பயன்பெறும் வகையில் நிலத்தடி நீர் மட்டம் உயர காரணமாக இருந்தவர் சபா ராஜேந்திரன் என கூறினார்.

அடுத்து, திருமண விழாவின் போது நான் வைக்கும் கோரிக்கைகள் இரண்டு தான். ஒன்று குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்க வேண்டும். இன்னொரு கோரிக்கை மணமக்கள் வீட்டுக்கு விளக்காகவும்,  நாட்டுக்கு நல்ல தொண்டர்களாகவும் விளங்க வேண்டும். நம்முடைய வீடு மட்டுமல்ல. நாடும் நன்றாக இருக்க அதற்காக பங்களிக்க வேண்டும் இதுதான் தனது கோரிக்கை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

6 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

46 minutes ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

2 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

3 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

4 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

4 hours ago