புதுச்சேரியில் இன்று முதல் காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மார்ச் மாதம் முதல் நான்கு கட்டங்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து சேவைகளும் முடக்கப்பட்டன. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சகம் இந்த நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதனை மாநில அரசுகளே சூழ்நிலைக்கேற்ப முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்தது. அந்த தளர்வுகளின் அடிப்படையில் தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.
இந்நிலையில், புதுச்சேரியில் இன்று முதல் மதுபானக்கடைகள் திறக்கப்படும் என்று அம்மாநில கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். இன்று காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களில் இருந்து மதுபானம் வாங்க வரக்கூடாது என்று கூறியுள்ளார். மதுபானம் வாங்க வருபவர்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியை பின்பற்றி வாங்கி சேலை வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும், மதுபானங்கள் மீது உயர்த்தப்பட்ட வரிகள் 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…