நிர்வாகம் என்ற நாணயத்தின் மறுபக்கம் எதிர்க்கட்சி – ஓபிஎஸ், இபிஎஸ் அறிக்கை

Published by
பாலா கலியமூர்த்தி

வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என்று அதிமுக அறிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக தனி பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. திமுக கூட்டணி 159 இடங்களில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளில் வென்று, வரும் 7ம் தேதி தமிழக முதலமைச்சராக முக ஸ்டாலின் பொறுப்பேற்கவுள்ளார்.

இந்த தேர்தலில் அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் முதல்வர் பதவியை எடப்பாடி பழனிசாமி ராஜினாமா செய்தார். இதன்பின் முதல்வராக பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

அதில், அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு வாக்குகளை அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தொடர்ந்து 10 ஆண்டுகளாக நடைபெற்ற அதிமுக அரசு, தமிழக வளர்ச்சிக்காக ஆற்றியிருக்கும் யாரும் பணிகளை மக்கள் நன்கு அறிவர்.

நிர்வாகம் என்ற நாணயத்தின் ஒருபக்கம் ஆளும் கட்சி, மறுபக்கம் எதிர்க்கட்சி. ஆட்சி தேர் சரியாக செலுத்தப்படுவதை உறுதி செய்யும் அட்சணியாக செயல்பட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. தமிழக சட்டமன்றத்திலும், ஆட்சி நிர்வாகத்திலும் எதிர்க்கட்சி எனும் பெரும் பொறுப்புடன் என்னென்ன பணிகளை ஆற்ற வேண்டுமோ அவை அனைத்தையும் மன தூய்மையுடனும், கழக கொள்கை வழி நின்றும் செவ்வனே நிறைவேற்றுவோம்.

அதிமுக தொடர்ந்து மக்கள் பணிகளை ஆற்றுவதற்கும், கழகத்தை கட்டிக்காக்கும் கடமையில் தோளோடு தோள் நின்று உழைப்பதற்கும், கழக உடன்பிறப்புகள் அனைவரும் உறுதி ஏற்க வேண்டுமாய் அன்போடு கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளனர்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சிதம்பரம் கோயில் தரிசன விவகாரம் – அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.!

கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…

13 hours ago

தென்மேற்கு பருவமழை இயல்பிற்கு அதிகமாக மழை பெய்யும் – இந்திய வானிலை மையம்.!

சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…

13 hours ago

தி.மு.க-வுடன் கூட்டணியா? – ஓபிஎஸ் அளித்த பதில் என்ன?

சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…

14 hours ago

சூடு பிடிக்கும் அரசியல் களம்: ஒரே நாளில் 2வது முறையாக முதல்வர் ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு.!

சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…

15 hours ago

5-வது டெஸ்ட் போட்டி: தடுமாறும் இந்திய அணி.., ஜெய்ஸ்வால் – கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் அவுட்.!

ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…

15 hours ago

ஆணவக் கொலை வழக்கு : ஆவணங்களை சிபிசிஐடியிடம் ஒப்படைத்தது காவல்துறை.!

நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…

16 hours ago