madurai High Court [file image]
ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பல மாவட்டங்களில் நடந்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு (2024) பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜனவரி 15ம் தேதியும், பாலமேட்டில் வரும் 16-ஆம் தேதியும் அலங்காநல்லூரில் 17-ஆம் தேதி என ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது. இதேபோல, அவனியாபுரத்திலும் அமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் மதுரையைச் சேர்ந்த முனியசாமி என்பவர் மனு கொடுத்து இருந்தார்.
இந்த நிலையில், மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் அனைத்து சமூகத்தினரையும் ஒன்றிணைத்து கமிட்டி அமைக்க உத்தரவிடக் கோரிய இந்த வழக்கில், அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவசர வழக்காக மாறும் ஜல்லிக்கட்டு.! உச்சநீதிமன்றம் சொல்வதென்ன.?
அது மட்டுமின்றி, நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் பேச்சு வார்த்தையை வீடியோ பதிவு செய்து செய்து ஓர் அறிக்கையாக தாக்கல் செய்யவும், அமைதி பேச்சுவார்த்தைக்கு அனைத்து தரப்பினரையும் முறையாக அழைக்க வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.
மேலும், இதைப்போலவே, ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது காளைகளை அவிழ்க்கும் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் குறிப்பிடப்பட்டு காளைகள் அவிழ்த்து விட படுகிறது அதற்கு தடை செய்யவேண்டும் என ஒருவர் மனுகொடுத்த வழக்கில் ஜல்லிக்கட்டு போட்டிகளின் போது அதன் உரிமையாளர்களின் பெயரோடு சாதி பெயர் சொல்லி அவிழ்க்க கூடாது என்ற உத்தரவை முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…