ராஜஸ்தானை தலைமையிடமாக கொண்டு இயங்கிய PACL நிறுவனமானது, சாமானிய மக்களிடம் பணம் பெற்று வட்டி அதிகமாக பயனர்களுக்கு பெற்று தந்தது. ஆரம்பித்த 30 ஆண்டுகளில் எந்தவித பிரச்னையும் இன்றி பணம் முதலீட்டர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்தது.
அதன் பிறகு முதலீட்டாளர்களுக்கு சரிவர பணம் திரும்ப கிடைக்காமல் இருந்ததால் முதலீட்டாளர்கள், செபியிடம் புகார் செய்தது. செபி என்பது, அரசாங்க நிறுவனமான இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் ஆகும்.
பின்னர் இந்தியா முழுவதும் சுமார் 6 கோடிக்கும் அதிகமான முதலீட்டர்களிடம் இந்த மாதிரியான பணம் திரும்ப வராமல் 70 ஆயிரம் கோடி பணம் திரும்ப வராததால் இந்த புகார் நீதிமன்றம் சென்றது.
இதனை விசாரித்த நீதிபதி, PACL நிறுவனத்தின் சொத்துக்களை விற்று அனைவருக்கும் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டது. இதனை செபி ஏற்று கொண்டது.
இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள செபி அலுவலகத்தில், தமிழ்நாட்டில் உள்ள ஆயிரகணக்கான முதலீட்டாளர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தை தொடர்ந்து, செபி இணையதளத்தில், முதலீடு பத்திரங்கள், பான் எண் முதலியவற்றை பதிவு செய்ய சொல்லப்பட்டுள்ளது.
இம்மாதம் 31ஆம் தேதிக்குல் தங்கள் முதிர்வு தொகையை முதலீட்டர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடுவதாக செபி தெரிவித்துள்ளது.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…