பணியிலிருக்கையில் உயிரிழந்த நெல்லை காவலர் – 21 குண்டு முழங்க அஞ்சலி!

Published by
Rebekal

நெல்லை மாவட்டம் பணக்குடி பகுதியை சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படை தலைமை காவலராக பெங்களூரில் பணியாற்றி வந்தவர் தான் உதயகுமார். இவருக்கு மீனா என்ற மனைவியும் ஐஸ்வர்யா, முரளிதரன் ஆகிய இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு பணியில் இருந்த உதயகுமார் நெஞ்சுவலி ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனை தொடர்ந்து அவரது சொந்த ஊரான பணகுடிக்கு இன்று காலை ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் கொண்டுவரப்பட்டது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பணகுடியில் உள்ள மயானத்தில் உதயகுமாருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது சப்-இன்ஸ்பெக்டர் பிரதீப் ஆகியோர் உயிரிழந்த காவலரின் உடலை சுமந்து சென்றுள்ளனர். மேலும், எல்லைப் பாதுகாப்புப் படையை சேர்ந்த வீரர்கள், உயிர் இழந்த உதயகுமார் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அஞ்சலி செலுத்தினர். அதன்பின் அவர் மீது போர்த்தப்படும் இந்த தேசியக் கொடியானது அவர் மகன் முத்தையா முரளியிடம் ஒப்படைக்கப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.

Published by
Rebekal

Recent Posts

ஜெய்ஷ்வால் எத்தனை முறை கேட்ச் விடுவ? செம கடுப்பான கம்பீர்..கில்!

லீட்ஸ் : இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 4…

6 hours ago

ஈரானில் தமிழக மீனவர்கள் – மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஈரான்-இஸ்ரேல் மோதலால் பதற்றமான சூழலில் சிக்கித் தவிக்கும் தமிழக மீனவர்களை பாதுகாப்பாக மீட்க வேண்டுமென…

7 hours ago

INDvsENG : நீங்க நிறுத்திக்கோங்க நான் ஆடுறேன்! போட்டியின் நடுவே விளையாடிய மழை!

லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், விறுவிறுப்பான தருணத்தில் மழை…

8 hours ago

ஈரான் தொடங்கினாலும் இஸ்ரேல் அமைதியா இருந்திருக்கணும்! டிரம்ப் அதிருப்தி!

வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…

8 hours ago

போதைப் பொருள் வழக்கு : ஸ்ரீகாந்த் கைது..அடுத்து கிருஷ்ணாவுக்கு சம்மன்?

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…

9 hours ago

எங்களுக்கு ஜடேஜா தான் தொல்லையா இருப்பாரு! இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பேச்சு!

லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…

9 hours ago