தமிழ்நாடு

#Breaking:அதிர்ச்சி சம்பவம்…வீட்டுக்கூரையை துளைத்தப்படி மேலும் ஒரு துப்பாக்கிக் குண்டு!

பெரம்பலூர்:மருதடிஈச்சங்காடு பகுதியில் சுப்பிரமணி என்பவரது வீட்டுக் கூரையின் மற்றொரு பகுதியில் மேலும் ஒரு துப்பாக்கிக்  குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் அருகே மருதடிஈச்சங்காடு கிராமத்திற்கு அருகே துப்பாக்கி சூடு பயிற்சி மையம் உள்ளது.அங்கு அவ்வ்வப்போது துப்பாக்கிசூடு பயிற்சி நடைபெற்று வரும் நிலையில்,நேற்று முன்தினம் அந்த மையத்தில் பயிற்சி நடைபெற்றபோது, சுப்பிரமணி என்பவரது வீட்டில் மேற்கூரையை துளைத்துக் கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டிற்குள் விழுந்தது. இதுகுறித்து காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்ட நிலையில்,துப்பாக்கிக் குண்டை கைப்பற்றி போலீசார் […]

#House 4 Min Read
Default Image

ஞாயிற்று கிழமைகளில் முழுஊரடங்கு நீட்டிப்பு? – முதல்வர் நாளை ஆலோசனை..!

தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி முழு ஊரடங்கை அமல்படுத்துவது, வரும் 31-ஆம் தேதிக்கு பின் இரவு ஊரடங்கை அமல்படுத்துவது தொடர்பாக நாளை காலை அதிகாரிகரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் வரும் 30-ஆம் தேதி முழு […]

#MKStalin 2 Min Read
Default Image

பரபரப்பு…தமிழ்த்தாய் வாழ்த்திற்கு எழுந்து நிற்காத ரிசர்வ் வங்கி அதிகாரிகளால் சர்ச்சை!

சென்னை:குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்திற்கு ரிசர்வ் வங்கி அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்தாத விவகாரம் சர்ச்சையானதை அடுத்து,உரிய புகார் அளிக்கும் பட்சத்தில்,வீடியோ ஆதாரங்களை ஆய்வு செய்து, தமிழக அரசின் உத்தரவின்படி விசாரணை நடத்தப்படும் என சென்னை காவல்துறை தகவல். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,நாடு முழுவதும் குடியரசு தின விழா இன்று சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,தமிழகத்திலும் இன்று  அரசு சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில்,சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி […]

chennai police 4 Min Read
Default Image

#BREAKING: மேலும் 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை..!

தரமற்ற உணவுகளை கூடுதல் விலைக்கு விற்றதால் விக்கிரவாண்டி அருகே 5 உணவகங்களில் அரசு பேருந்துகள் நிற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.  இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 25.01.2022 அன்று பொது மக்களின் புகார்களை ஒட்டி மாமண்டுர் பயணவழி உணவகத்தில் தரமற்ற உணவு வழங்கப்பட்டது கண்டறிந்து அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் நிறுத்தத் தடை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் இளங்கோவன் தலைமையில் போக்குவரத்துக் கழக அலுவலர்கள் குழு, போக்குவரத்துக் கழக […]

#TNGovt 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:தமிழகத்தில் இன்று முதல் ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வருகின்ற ஜனவரி 30 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை அய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி,தமிழகத்தில் கடலோர மாவட்டங்கள்,ராணிப்பேட்டை,வேலூர், காஞ்சிபுரம்,கள்ளக்குறிச்சி,பெரம்பலூர்,திருப்பத்தூர்,திருவண்ணாமலை, அரியலூர்,திருச்சி, சிவகங்கை,மதுரை,விருதுநகர்,தேனி,தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் […]

#Chennai Meteorological Department 3 Min Read
Default Image

தேசத்தின் மண்வளம் காப்போம் – குடியரசு தின கொண்டாட்டத்தில் சத்குரு..!

ஈஷா யோக மையத்தில் தேசிய கொடியேற்றினார் சத்குரு கோவை ஈஷா யோகா மையத்தில் 73-ம் ஆண்டு குடியரசு தின விழா இன்று (ஜனவரி 26) மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 112 அடி ஆதியோகியை தரிசிக்க செல்லும் நுழைவு வாயிலான மலைவாசல் முன்பு இவ்விழா நடைபெற்றது. கொண்டாட்டத்தில் கொடியேற்றி பேசிய சத்குரு, “தமிழ்மக்கள் அனைவருக்கும் 73-வது குடியரசுதினநல்வாழ்த்துக்கள். நம் பாரததேசம் நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் உலகிலேயே மிகவும் பழமையானது; ஈடு இணையற்றது. பொதுவாக ஒரு நாடு வளம் பெற வேண்டுமென்றால், […]

- 3 Min Read
Default Image

மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே..! உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது – ஜோதிமணி எம்.பி

மாண்புமிகு நரேந்திரமோடி அவர்களே, எங்கள் வீரவரலாற்றை, விடுதலைப்போரில் எமது தலைவர்களின் மகத்தான பங்களிப்பை, தியாகத்தை நாங்கள் தொடர்ந்து காட்சிப்படுத்துவோம். உங்களால் அதை ஒருபோதும் தடுக்கமுடியாது என ஜோதிமணி எம்.பி ட்வீட்.  இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டதையடுத்து, சென்னையில் நடைபெற்ற குடியரசு […]

#Congress 4 Min Read
Default Image

10, 11, 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..? – அமைச்சர் அன்பில் மகேஷ்

10,11,12ம் வகுப்புகளுக்கு பிப்ரவரியில் பள்ளிகளை திறக்க முதல்வரிடம் பரிந்துரை செய்துள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஓமைக்ரான் மற்றும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னையில்  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த […]

#Corona 3 Min Read
Default Image

“மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை உறுதி செய்வோம்” – முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்!

சென்னை:அரசியலமைப்பின் மதச்சார்பற்ற நெறிமுறைகளை நிலைநிறுத்துவதை இந்த குடியரசு தினத்தில் மீண்டும் உறுதி செய்வோம் என மக்களிடம் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். இதனைத் தொடர்ந்து,பல்வேறு பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கங்கள் உள்ளிட்ட பதக்கங்களை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் வழங்கினார். […]

#CMMKStalin 3 Min Read
Default Image

தமிழகம் முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் இவ்வளவா? – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகம் முழுவதும் 2356 கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்த நிலையில்,கடந்த சில தினங்களாக குறைந்து காணப்பட்டது.ஆனால்,இன்று மீண்டும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. அதே சமயம்,தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வந்த நிலையில்,படிப்படியாக குறைந்து வருகிறது.அதன்படி,கடந்த 3 நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்து காணப்படுகிறது.அதே சமயம்,கொரோனா இறப்புகள் அதிகரித்து வருவதாக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும்,மாநிலம் முழுவதும் கொரோனா […]

- 3 Min Read
Default Image

அனைவருக்கும் 73-வது இந்தியக் குடியரசு தின வாழ்த்துகள் – கனிமொழி எம்.பி

குடியரசு தினத்தை முன்னிட்டு கனிமொழி எம். பி அவர்கள் வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘அனைவருக்கும் 73வது […]

73rd Republic Day 3 Min Read
Default Image

குடியரசு தினத்தை முன்னிட்டு ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்..!

இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட்.  இந்தியா முழுவதும் இன்று 73-வது குடியரசு தினவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவலுக்கு மத்தியில், கொரோனா கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்து, குடியரசு தின நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியல் பிரபலங்கள் பலரும் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் […]

#OPS 3 Min Read
Default Image

“இதுவே நம் ஒவ்வொருவரின் பலம்;நாம்தான் இதன் பாதுகாவலர்கள்” – ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன்!

நமது நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு,இந்திய அரசியலமைப்புச் சட்டமே நம் ஒவ்வொருவரின் பலம் எனக் கூறி,மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் குடியரசு தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். நமது இந்திய நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.அந்த வகையில்,குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது. ஆனால்,கொரோனா பரவல் காரணமாக,பொதுமக்களுக்கு அனுமதி […]

#MNM 4 Min Read
Default Image

தமிழகத்தை சேர்ந்த 7 பேருக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் அறிவிப்பு…! யார் யாருக்கு தெரியுமா..?

இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தை 7 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படவுள்ளது.  குடியரசு தினத்தை முன்னிட்டு கல்வி, சமூக சேவை, பொது நிர்வாகம், அறிவியல்,  தொழில்நுட்பம், இலக்கியம் ,விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் சிறந்த  முறையில் பணி புரிந்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு 128 பேருக்கு பத்மஸ்ரீ விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பத்ம ஸ்ரீ விருதுகள் […]

padmasree award 2 Min Read
Default Image

முதல்முறையாக தேசியக் கொடி ஏற்றிய ஆளுநர்;30 நிமிடங்களில் நிறைவு பெற்ற குடியரசு தினவிழா!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினார். நாட்டின் 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் குடியரசு தின விழா சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நடைபெற்றது.விழா தொடக்கத்தில்,மெரினாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றியது இதுவே முதல்முறை. […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#73rdRepublicday:8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம்;ரூ.1 லட்சம் காசோலை – வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின்!

சென்னை:குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று வழங்கப்படவுள்ளது. நாட்டின் 73 வது குடியரசு தினத்தையொட்டி,தமிழகத்தில் 8 பேருக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணா பதக்கம் முதல்வர் ஸ்டாலின் அவர்களால் இன்று சென்னையில் நடைபெறும் குடியரசு தினவிழாவில் வழங்கப்படவுள்ளது.அதன்படி, உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கி சென்ற டி.பி.சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது. திருவொற்றியூர் கட்டட விபத்தின்போது,அப்பகுதி மக்களை காப்பாற்றிய திமுகவின் தனியரசுக்கு விருது. விழுப்புரம்,திருவெண்ணெய்நல்லூரில் வெள்ளத்தில் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

#Breaking:73-வது குடியரசு தினவிழா – தமிழகத்தில் முதல்முறையாக கொடியேற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

சென்னை:நாட்டின் 73-வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மெரினாவில் தேசியக் கொடியை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்றி வைக்கிறார்.தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் முதல் முறையாக ஆளுநர் ஆர்என் ரவி அவர்கள் தேசியக் கொடியை ஏற்றுகிறார். நாட்டின் 73-வது குடியரசு தினவிழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி,டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றுகிறார்.இதனைத் தொடர்ந்து,முப்படைகளின் அணிவகுப்பு, சாகசங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக,டெல்லி முழுவதும் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,குடியரசு […]

73-வது குடியரசு தினவிழா 4 Min Read
Default Image

#Breaking:தமிழக மீனவர்கள் மீது மீண்டும் தாக்குதல்;தொடரும் இலங்கை கடற்கொள்ளையர்களின் அட்டூழியம்!

நாகை:ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். நாகையில் இருந்து நான்கு மீனவர்கள் மீன்பிடிக்க நேற்று கடலுக்கு சென்றுள்ளனர். இந்த நிலையில்,மீனவர்கள்,ஆறுகாட்டுத்துறை கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது,அதிவேக எஞ்சின் பொருத்தப்பட்ட இரண்டு படகுகளில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 8 பேர்,அரிவாள்,ரப்பர் பைப்,கட்டை உள்ளிட்ட பொருட்களால் மீனவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர். அதன்பின்னர்,படகில் இருந்த ஜிபிஎஸ் கருவி,செல்போன்,மீன்கள் உள்ளிட்ட ரூ.2 லட்சம் மதிப்பிலான பொருட்களை எடுத்து விட்டு,மீனவர்களை […]

#Attack 3 Min Read
Default Image

பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா? – இன்றைய நிலவரம் இதோ!

சென்னை:83-வது நாளாக மாற்றமின்றி இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு. ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது. இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது. இந்நிலையில்,சென்னையில் […]

#Petrol 3 Min Read
Default Image

தமிழகம் முழுவதும்…இன்று இதற்கு தடை – தமிழக அரசு அதிரடி உத்தரவு!

கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக இன்று (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]

coronavirus in tamilnadu 3 Min Read
Default Image