சென்னை : காற்றழுத்த தாழ்வு மண்டலம் தொடர்ந்து வலுவாக இருப்பதால், சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களுக்கு, அதி கனமழைக்கான, ‘ரெட் ன அலர்ட்’ வாபஸ் பெறப் படவில்லை என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார். அதன்படி, இந்தாண்டு வட கிழக்கு பருவமழை துவங்கி, சென்னையில் மழை பெய்து வருகிறது. வரும், டிசம்பர் வரை மழை பொழிவு இருப்பதால், மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன் தினம் பெய்த […]
சென்னை : தற்போது வெடிகுண்டு மிரட்டல்களானது, இ-மெயில், குறுஞ்செய்தி, தொலைபேசி என பல்வேறு வழிகளில் விமான நிலையம், பள்ளிகளுக்கு அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. அடிக்கடி இதுபோன்ற போலி மிரட்டல்கள் வந்தாலும், காவல்துறையினர் தொடர்ந்து உரிய சோதனை மேற்கொண்டு, விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் உள்ள கழிவறை பகுதியில் சக்திவாய்ந்த வெடிகுண்டு இருந்ததாக காவல்துறை கட்டுப்பட்டு அறைக்கு தொலைபேசி வாயிலாக குறுந்செய்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வெடிகுண்டு மிரட்டல் செய்தியை […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , சென்னையை நோக்கி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு நேற்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. நேற்று முன்தினமே சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டிதீர்த்தது. அதனால், நேற்று பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது. ஆனால், நேற்று , ரெட் அலர்ட் விடுக்கப்பட்ட நிலையில் மழையின் அளவு வெகுவாக குறைந்து இருந்தது. இருந்தாலும், கனமழையால் மக்கள் […]
சென்னை : தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்ற நிலையில் சென்னைக்கு மிக அருகில் கரையைக் கடக்கும் என்று முதலில் கணிக்கப்பட்டது. இதனால், அதற்கான முன்னேற்பாடுகளை தமிழக அரசு நேற்று தீவிரமாக மேற்கொண்டது. இதனால், சென்னை உட்பட 4 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து தெற்கு ஆந்திராவை நோக்கி தாழ்வு மண்டலம் நகர்ந்தது. இதனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் படிப்படியாக நேற்று காலை […]
சென்னை : வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், ரெட் அலெர்ட்டும் நேற்றைய தினம் கொடுக்கப்பட்டது. ஆனால், நேற்று முழுவதும் சென்னையில் அந்த அளவிற்கு மழை பொழிவு என்பது இல்லாமல் இருந்தது. இதனால், நேற்று இரவு ரெட் அலெர்ட்டை வானிலை ஆய்வு மையம் திரும்ப பெற்றுக் கொண்டது. மேலும், சென்னையில் உள்ள பள்ளி மற்றும் கல்லுரிகளும் இன்று வழக்கம் போல செயல்படும் என்று மாவட்ட […]
சென்னை : நேற்று முன்தினம் வங்கக்கடலில் நிலைபெற்றிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அன்றிரவு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இதனால், சென்னை உட்பட வடக்கு மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிகை விடுக்கப்பட்டது. ஆனால், காற்று வீசும் திசை போன்றவற்றால் தெற்கு ஆந்திர பகுதிகளில் புதுச்சேரி நெல்லூர் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதனால், சென்னையிலும் கனமழை குறைந்து நேற்று காலை முதல் லேசான மழைப் பொழிவு இருந்தது. மேலும், ஒரு சில இடங்களில் […]
சென்னை : கனமழை காரணமாக விடுக்கப்பட்டிருந்த ரெட் அலெர்ட்டை வானிலை ஆய்வு மையம் நேற்று இரவு ‘வாபஸ்’ பெற்றுக் கொண்டது. இதனால், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று (17-10-2024) பள்ளி மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல இயங்கும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன்தினம் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. மேலும், சென்னை நோக்கி நகர்ந்து வந்த அந்த தாழ்வு மண்டலம் […]
சென்னை : வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள காரணத்தால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, எந்தெந்த மாவட்டங்களில் என்னென்ன மழை எச்சரிக்கை என்பது குறித்து வானிலை தொடர்பான தகவலைச் சென்னை வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாகத் தெரிவித்து வருகிறது . குறிப்பாகச் சென்னையில் கனமழை பெய்து வந்த நிலையில், சென்னைக்கு ரெட் அலர்ட் கொடுப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. ஆனால், இன்று மழைபெய்யவில்லை. இந்த சூழலில், வானிலை அறிவிப்புகள் மேலும் […]
திருவள்ளூர் : சென்னையைப் போலவே திருவள்ளூர் மாவட்டத்திலும் பல இடங்களில் கனமழை பெய்து மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. அங்கு தற்போது தேங்கி இருக்கும் மழை நீர்களை அகற்றும் பணிகளும், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு கொடுக்கும் பணிகளும் மும்மரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், மழை நீர் தேங்கி இருப்பதால் நேரடியாகச் சென்று வேகமாக உணவுகளை வழங்குவது சிரமம் என்பதால் ட்ரோன் மூலம் நிவாரண பொருட்களை வழங்கும் புதிய முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாகவே, […]
சென்னை : மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாகப் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டது. இதன் பல பகுதிகளில் காரணமாக, தெருக்களிலும், வீடுகளிலும் தண்ணீர் தேங்கிச் சமைத்துச் சாப்பிட முடியாத அளவுக்கு மக்களின் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. உடனடியாக, தமிழக அரசு தேங்கி இருக்கும் தண்ணீரை அகற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு பல இடங்களில் தேங்கி இருந்த நீரை அகற்றவும் செய்தது. மற்றொரு பக்கம் அரசியல் தலைவர்கள் பலரும் களத்தில் இறங்கி தண்ணீர் அதிகமாகத் தேங்கி இருக்கும் இடங்களைப் […]
மதுரை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் சென்னையில் பல இடங்களில் பெய்த கனமழை சென்னையையே புரட்டி போட்டது. தற்போது சென்னையில் மழை குறைந்துள்ள நிலையில், மற்ற மாவட்டங்களான திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப்போல, வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது எனவும் இதுவரை இயல்பை விட 94% அதிக மழை பெய்துள்ளது என வானிலை […]
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 17.10.2024) பவியாழன் கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்… கோவை 1.சீரநாயக்கன்பாளையம் 2.பி.என்.புதூர் 3.வடவள்ளி 4.வேடப்பட்டி 5.வீரகேரளம் 6.தெலுங்குபாளையம் 7.வேலாண்டிபாளையம் 8.சாய்பாபா காலனி 9.சுண்டபாளையம்(பகுதி) 10.செல்வபுரம். 11. அண்ணா நகர் வீட்டுவசதி பிரிவு. 12. காந்தி நகர் […]
சென்னை : சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை (17.10.2024) முதல் வார நாள் அட்டவணையின் படி, வழக்கம்போல் இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, பச்சை வழித்தடத்தில் புரட்சித் தலைவர் டாக்டர். எம்.ஜி.ராமச்சந்திரன் சென்ட்ரல் மெட்ரோவில் இருந்து கோயம்பேடு, வடபழனி வழியாக விமான நிலையம் மெட்ரோவுக்கு நேரடியாக செல்லும் மெட்ரோ இரயில்சேவைகள் வழக்கம் போல் இயக்கப்படுகிறது. மெட்ரோ ரயில் சேவை நேரம்: முதல் மெட்ரோ ரயில் அனைத்து முனையங்களிலிருந்தும் காலை 5 […]
சென்னை : வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், நிவாரணப் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலும், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளிலும் நடைபெற்ற மீட்பு பணிகளை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முதல் அமைச்சர்கள் வரை களத்தில் இறங்கி ஆய்வு மேற்கொண்டனர். சென்னையில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உடன் சென்னை மாநகராட்சி மேயர் கள பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், ரிப்பன் மாளிகையில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்தித்து இதுவரை நடந்த பணிகளை பற்றி […]
சென்னை: தென்மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளிலிருந்து நிறைவு பெற்று, வடகிழக்கு பருவ மழை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் தொடங்கியுள்ளது எனவும், இந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக உள்ளது என முன்னதாகவே இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்து இருந்தது. இந்த நிலையில், அதனைத்தொடர்ந்து, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ள வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் “வடகிழக்கு பருவ மழை தீவிரமாக உள்ளது. இதுவரை இயல்பை விட 94% அதிக […]
சென்னை : வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததை தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்து பல இடங்களில் நீர் தேங்கியது. இதன் காரணமாக, மக்களுடைய இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. தேங்கி இருக்கும் மழை நீரை அகற்ற தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதைப்போல, மக்கள் அதிகமாக வாங்க கடைக்கு செல்லும் பால் தடையின்றி கிடைக்க ஆவின் நிறுவனமும் கடந்த இரண்டு நாட்களாக, மழையால் பால் விநியோகத்தில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படாமல் இருக்க, ஆவின் நிறுவனம் […]
சென்னை : கடந்த சில நாட்களாகவே பெய்த கனமழை சென்னையை புரட்டி போட்டது. இதனால் நகரின் சில இடங்களில் நீர் தேங்கி மக்கள் இயல்பு வாழ்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பிறகு, மெல்ல மெல்ல மழை குறைந்துள்ளது. முன்னதாக, காணாமலைக்கான ரெட் அலர்ட் சென்னைக்கு கொடுக்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், மிக கனமழைக்கான வாய்ப்பு சென்னைக்கு குறைந்துள்ளதாக தனியார் வானிலை நிபுணர்கள் கணித்துள்ளனர். “இன்றிலிருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் […]
சென்னை: வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை சென்ட்ரல் மற்றும் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் மழைநீர் தேங்கி இருந்ததால், மாற்று ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது. ஆனால், நேற்றிரவு முதல் மழை படிப்படியாக குறைந்து வருகின்றது. இந்நிலையில், வியாசர்பாடி – பேசின்பிரிட்ஜ் ரயில் நிலையங்களில் தேங்கி இருந்த மழைநீர் அகற்றப்பட்டது. இதனால், ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மற்றும் வழித்தடம் மாற்றப்பட்ட ரயில்கள் மற்றும் சென்ட்ரலில் இருந்து இயங்கும் அனைத்து ரயில்களும் வழக்கம்போல் இயக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. […]
சென்னை : வடகிழக்கு பருவமழை , வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முதல் கனமழை கொட்டித்தீர்த்தது. இன்றும் கனமழை பெய்யும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று மழையின் அளவு வெகுவாக குறைந்தது. கனமழை பெய்தவுடன் சென்னை புறநகர் பகுதியில் மழைநீர் தேங்கியது. இதனால் பெரும்பாலான இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புறநகர் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்ததால் அங்குள்ள மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு […]
சென்னை : வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. முன்னதாக 12 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது 15 கி.மீ ஆக அதிகரித்து உள்ளது. தற்பொழுது, தாழ்வு மண்டலம் சென்னைக்கு கிழக்கு தென்-கிழக்கே 320 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக, இன்றைய தினம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது. ஆனால், கணிப்பின்படி, கனமழை ஏதும் பெரிதும் இல்லாமல், […]