எங்களது தனி கருத்துக்களை நாங்கள் ஆய்வு அறிக்கையில் முன் வைக்கவில்லை, ஆய்வு திருப்தியாக இருந்தது என நீதிபதி ஏ.கே.ராஜன் பேட்டி. நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்த ஆய்வறிக்கையை முதலமைச்சர் முக ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் தலைமையில் குழு இன்று சமர்ப்பித்தது. இந்த நிலையில், நீட் தேர்வு தாக்கம் குறித்த ஆய்வு அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பித்த […]
தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும் என புதிய மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக பாஜக உருவெடுக்கும். வயது முக்கியமல்ல, மூத்த, இளம் தலைவர்கள் என அனைவரையும் அரவணைத்து செல்வேன். மற்ற கட்சிகள் தனிநபர் கட்சிகள், பாஜகவைப் பொறுத்தவரை கூட்டுமுயற்சிதான். வயது, அனுபவம் என பல்வேறு விஷயங்களைக் கொண்டு பாஜக பொறுப்பளித்து வருகிறது என்றும் பாஜக தனி மனிதரை முன்னிருத்தும் கட்சியல்ல, அனைவருடன் […]
தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து, வரும் 16-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா தலைமையில், தமிழகத்தில் […]
நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆராய்வதற்கு கடந்த ஜூன் 10-ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு இதுவரை 4 முறை கூடி நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இதுவரை நீட் தேர்வுக்கு ஆதரவாகவும்,எதிராகவும் 86,342 பேர் ஏ.கே.ராஜன் குழுவிடம் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வு ஆய்வுக்குழுவுக்கு எதிரான மனு தள்ளுபடி ஆனதால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம், ஏ.கே.ராஜன் குழு நீட் தேர்வு தொடர்பான ஆய்வறிக்கையை தாக்கல் […]
நீலகிரி மாவட்டம் உதகை மண்டலத்தில் உள்ள அரசு கலைக் கல்லூரி விலங்கியல் துறை ஆராய்ச்சி மாணவி முப்ஸிபா துனிசா. இவர் நன்மை பயக்கும் புதிய நுண்ணுயிரியை கண்டுபிடித்து தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் அந்த புதிய நுண்ணுயிரிக்கு தமிழிலான்ஸிஸ் என்று தமிழிலேயே பெயர் சூட்டியுள்ளார். இந்த நுண்ணுயிரி செழிப்பான புல்வெளிகளில் காணப்படும் குப்பைகளை மக்கச் செய்து, மண்ணை தரம்வாய்ந்த உரமாக மாற்றும் ஆற்றல் கொண்டதாக செயல்படுகிறது. அரசு கலை கல்லூரியில் மூலக்கூறு பல்லுயிர் ஆய்வகத்தில் 5 […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,505 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,505 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,23,943 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 160 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 48 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,502 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,058 பேர் […]
டெங்கு தடுப்பு பணியில் சென்னை மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. கொசுக்கள் வளரும் வகையில் தண்ணீர் தேக்கம் இருந்தால் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் டெங்கு தடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதனால் கொசுக்கள் வளரும் விதமாக தண்ணீர் தேங்கி இடங்களை கண்டால் அவற்றிற்கு அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அபராதம் ரூ.100 முதல் ரூ.10 லட்சம் வரை விதிக்கப்படும். அதனால் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு 4 புதிய உறுப்பினர்களை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி முனியநாதன், பேராசிரியர் ஜோதி சிவஞானம், முனைவர் அருள்மதி, ராஜ் மரியசூசை ஆகிய நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்களாக பொறுப்பேற்றுள்ள 4 உறுப்பினர்களும், உறுப்பினர்களாக பொறுப்பேற்ற நாள் முதல் 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்காக்கும் மருந்துகளுக்கு வரி விலக்கு கேட்டு நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொழுது சுங்கவரி, ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி., மற்றும் இதர வரிகள் மீது விலக்கு அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கு மரபணு சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. இந்த […]
நீட் தேர்வு தாக்கம் குறித்த அறிக்கையை முதல்வரிடம் நாளை நீதியரசர் ஏ.கே ராஜன் குழு சமர்ப்பிக்கிறது. நீட் தேர்வு எழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா..? என்பது குறித்து ஆராய்வதற்காக கடந்த ஜூன் 10 ஆம் தேதி ஏ.கே ராஜன் தலைமையில் குழுவை தமிழக அரசு அமைத்தது. நீட் ஆய்வு குழு நியமனத்திற்கு எதிராக பாஜகவின் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழங்கு தொடந்தார். நீட் ஆய்வுக் குழு அமைத்தது உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது என்று மனுதாரர் […]
தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறப்பது குறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக நடப்பு ஆண்டில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதனால், மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால், பள்ளி, கல்லூரிகள் திறக்க தொடர்ந்து தடை நீடித்து வருகிறது. மாநிலத்தில் […]
புதுச்சேரியை போலவே கொரோனா பரவலை பொறுத்து தமிழகத்திலும் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வர் முடிவெடுப்பார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கூறியுள்ளார். கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதுமுள்ள பல மாநிலங்களில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இன்னும் திறக்கப்படாத நிலையிலேயே உள்ளது. இந்நிலையில் புதுச்சேரியில் தற்பொழுது கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளதையடுத்து அங்கு 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 16 ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணமாக தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவக்காற்று தீவிரமடைந்துள்ள காரணத்தால் தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் ஓரிரு மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும், விழுப்புரம், திருவண்ணாமலை, ஈரோடு, மதுரை, தேனி, புதுக்கோட்டை, நாமக்கல், திண்டுக்கல், […]
நீதிமன்றத்தை அவதூறாக பேசியதாக முன்னாள் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 2018 ஆம் ஆண்டு திருமயம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற கோவில் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற பொழுது மேடை அமைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் திருமயம் காவல் ஆய்வாளர் மனோகரன் தன் மீது அளித்த புகாரின் அடிப்படையில் திருமயம் காவல் நிலையத்தில் நான் உட்பட பல நபர்கள் […]
ஏ.கே.ராஜன் குழு அமைத்ததில் எந்த சட்ட விதி மீறல்களும் இல்லை சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே ராஜன் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவுக்கு எதிராக பாஜகவை சேர்ந்த கரு.நாகராஜன் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆராய ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்தது செல்லும். ஏ.கே. ராஜன் குழு அமைக்கப்பட்டதில் எந்த […]
விவாதத் தலைப்புகளை வைத்து நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்துவது மனதிற்கு வருத்தத்தையும், வேதனையையும் அளிக்கிறது என்று அதிமுக தலைமை அறிக்கை. இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், எம்.ஜி.ஆர். அவர்களால் அடித்தட்டு மக்களுக்காகவும், அவர்களின் வாழ்க்கை மேம்பட வேண்டும் என்பதற்காகவும் தொடங்கப்பட்ட மாபெரும் பேரியக்கம் தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய இறுதிக் காலம் வரை மக்களுக்காகவும், அதிமுகவுக்காகவும், வாழ்ந்து மறைந்த […]
கல்விக்கென தனி வானொலி தொடங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒளி உமிழும் திரையைத் தொடர்ச்சியாகப் பார்த்துக்கொண்டும். ஹெட்செட்டுகளை நெடுநேரம் காதில் மாட்டிக்கொண்டும் இருப்பதால் மாணவர்களின் கண்பார்வை, செவி கேட்கும் திறனில் பிரச்னை ஏற்படுகிறது என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். தலைவலி, கண் எரிச்சல், கண்களைச் சுற்றி கருவட்டம், சரியான தூக்கமின்மை போன்ற ஆன்லைன் வகுப்புகளின் விளைவுகளை எல்லா குடும்பங்களும் […]
நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக அரசு தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு […]
வெளிநாட்டு சொகுசு காருக்கு வரி விதிக்க தடை கோரிய நடிகர் விஜய்க்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. நடிகர் விஜய் இங்கிலாந்தில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்த விவகாரத்தில் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அபராதத் தொகை ரூ.1 லட்சத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு […]
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதுகொலும்பு தடை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது சுங்க வரி, ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘முதுகெலும்பு தசை செயலிழப்பு சிகிச்சைக்கான உயிர் காக்கும் மருந்துகளை இறக்குமதி செய்யும்போது, விதிக்கப்படும் சுங்கவரி ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி. மற்றும் இதர வரிகளுக்கு விலக்கு அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள […]