தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில் கொரோனா காரணமாக கடந்த ஒரு ஆண்டிற்கு மேலாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில், பள்ளிகள் திறப்பு தொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் […]
ராணுவத்தில் பணியாற்றி வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த 4 ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு தலா 20 லட்சம் ரூபாயை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கியுள்ளார். மதுரையை சேர்ந்த பாலமுருகன், கிருஷ்ணகிரியை சேர்ந்த சந்தோஷ், குமரியை சேர்ந்த ஆனந்த், திருப்பத்தூரை சேர்ந்த சபரிநாதன் ஆகிய 4 ராணுவ வீரர்களின் வாரிசுதாரர்களை நேரில் அழைத்து ஆறுதல் தெரிவித்ததோடு, கார்கில் போராட்ட வீரர்கள் நிவாரண நிதியிலிருந்து அவர்களது குடும்பத்தினருக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிதி வழங்கி உள்ளார்.
நாகூர் தர்காவிற்கு 45 கிலோ சந்தனக்கட்டைகளை வழங்க உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சுற்றுசூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், நாகூர் தர்கா இடைக்கால நிருவாக குழுவினரிடமிருந்து பெறப்பட்ட கடிதத்தில், 11-07-2021-ல் நடைபெறவிருக்கும், சின்ன ஆண்டவர் கந்தூரி மற்றும் ஜனவரி 2022-இல் நடைபெறவுள்ள பெரிய ஆண்டவர் கந்தூரி திருவிழாவிற்கு கடந்த ஆண்டுகளில் இலவசமாக சந்தனக்கட்டைகள் வழங்கப்பட்டது. அதனைப்போன்று சிறப்பினமாக கருதி 45 கிலோ சந்தனக்கட்டைகளை நாகூர் தர்காவிற்கு விலையின்றி (இலவசமாக) வழங்கும்படி […]
தமிழகத்தில் 4 மாநகராட்சியின் நிர்வாக வசதிக்காக அதன் ஆணையர்கள் இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் புதிதாக திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிரடியாக ஐபிஎஸ், ஐஏஎஸ், காவல் ஆய்வாளர், ஐஏஎஸ் உள்ளிட்ட அதிகாரிகள் தொடர்ந்து பணியிட மாற்றம் செய்து வருகிறது. சமீபத்தில் மாநகராட்சி ஆணையர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், தஞ்சை, திருச்சி, திண்டுக்கல், ஆவடி உள்ளிட்ட 4 மாநகராட்சியின் ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து […]
நீட் நுழைவு தேர்வு செப்.12-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. மேலும், இதுதொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இணையத்தில் வெளியிட்டுள்ளார். அதன்படி, நீட் தேர்வு விண்ணப்பத்தை இன்று மாலை 5 மணி முதல் இணையதளத்தில் பதிவிறக்கி விண்ணப்பிக்கலாம் என்றும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த முறை 198 நகரங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று நீட் தேர்வு பாதிப்பை ஆய்வு செய்யும் குழு […]
ராமநாதபுரம், முதுகுளத்தூரில் தனியார் பள்ளியில் அறிவியல் ஆசிரியராக பணியாற்றியவர் ஆசிரியர் ஹபீப் முகமது. பள்ளி மாணவிகளிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட ஆசிரியர் ஹபீப் முகமது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 22-ம் தேதி போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட இவரிடம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை மேற்கொண்ட நிலையில், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து, ராமநாதபுரம் காவல் கண்காணிப்பாளர் கார்த்திக், […]
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமித்தது. இந்நிலையில், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ.லியோனி நேற்று பொறுப்பேற்றார். அப்போது கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடனிருந்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், 2011 ஆம் ஆண்டு ஆசிரியர் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்று கீழே வைத்த பாடப்புத்தகத்தை 10 ஆண்டுகளுக்குப்பின் 2021ல் மீண்டும் கையிலெடுத்து உள்ளேன். பாடநூல்களை மாணவர்கள் விரும்பி மகிழ்ச்சியாக படிக்கும் வண்ணம் மாற்றுவதே […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,652 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,652 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,21,438 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 165 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 36 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,454 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,104 பேர் […]
தலைக்கவசம், உயிர்க்கவசம் என அஜித் படத்தை காவல்துறை உயரதிகாரி ஒருவர் டேக் செய்துள்ளார். நடிகர் அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. அதில் நடிகர் அஜித் இருசக்கர வாகனத்தின் கவச உடையோடு இருக்கும் படத்தை ஒருங்கிணைத்த குற்றப் புலனாய்வு பிரிவு எஸ்.பி. அர்ஜுன் சரவணன் டேக் செய்து “தலைக்கவசம் உயிர்கவசம்” என்று குறிப்பிட்டுள்ளார். இருசக்கர வாகன விபத்தை தடுக்கும் விதத்தில் இந்த கருத்தை அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தலைக் கவசம் உயிர் கவசம்.#Powerisstateofmind#Wearhelmet pic.twitter.com/nW8tus8TCW […]
இரு மாநில உறவுகளை சீர்குலைக்கும் வகையிலான கர்நாடக அமைச்சரின் இந்தக் கருத்து கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து. மேகதாதுவில் அணையை கட்டியே தீருவோம் என செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருந்தார். அணை கட்டுவதில் 100% உறுதியாக உள்ளோம் என்றும் அணை கட்ட உச்சநீதிமன்றம் எந்த தடையையும் விதிக்கவில்லை எனவும் கூறியிருந்தார். தொடர்ந்து பேசிய அவர், குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. கர்நாடகாவின் கோரிக்கையை மத்திய […]
தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு. நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும், தெற்கு ஓடிசா ஒட்டிய கடற்பகுதியில், நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக தமிழகத்தில் நாளை 13 முதல் 15 ஆம் தேதி வரை தமிழகத்தில் சில மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் […]
தமிழ்நாடு-கேரளா எல்லையில் 2,660 வீடுகளில் ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கேரளாவில் கொரோனா வைரஸ்களுக்கு அடுத்தப்படியாக ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 15 பேருக்கு தொற்று உறுதியாக்கிருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு-கேரளா எல்லையில் பரிசோதனை அதிதீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொசுக்கள் மூலம் பரவும் வைரஸ் என்பதால் இந்த வைரசுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளை வேகமாக எடுத்து வருகின்றனர். இது குறித்து தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் […]
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும், தெற்கு ஓடிசா ஒட்டிய கடற்பகுதியில், நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கும், ஏனைய மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராணிப்பேட்டை, […]
தமிழகத்தில் உள்ள மாநகரப் பேருந்துகளில் இன்று முதல் மகளிருக்கான இலவச பயண சீட்டு விநியோகம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தால் அரசு பேருந்தில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணம் திட்டம் அமல்படுத்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, திமுக வெற்றி பெற்று மு.க ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்ற அன்றைய தினமே பெண்கள் இலவசமாக பயணிப்பதற்கான கோப்பில் கையெழுத்திட்டு, அத்திட்டம் அமலுக்கு வந்தது. கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் […]
தமிழக போக்குவரத்துத்துறை, இலவசமாக அரசு நகர பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு இன்று முதல் கட்டணமில்லா பயணசீட்டு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். பதவியேற்ற அன்றே தேர்தல் வாக்குறுதிகளில் சிலவற்றை தொடங்கினார். அதன் படி மகளிர் அரசு போக்குவரத்துகழகத்திற்கு கீழ் உள்ள நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று உத்தரவு பிறப்பித்தார். அதிலிருந்து பெண்கள் நகர பேருந்துகளில் இலவசமாக […]
தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவது மக்களிடையே கலக்கத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததை அடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனை அடுத்து தொற்று குறைந்திருக்கும் மாவட்டங்களில் தளர்வுகளை அறிவித்தது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் தொற்று அதிகமாக பாதித்த மாவட்டங்களில் ஒன்றான தஞ்சாவூரில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. கொரோனாவின் அலை வேகமாக பாதித்த நாட்களில் தஞ்சாவூரில் நாளொன்றுக்கு 1000 தொற்று பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் எடுக்கப்பட்ட […]
மேகதாது அணை கட்டப்பட்டால் நமது விவசாயிகளின் நிலை மோசமானதாக மாறும் என்று அனைத்துக்கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உரை. கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்துள்ளனர். அதன் அடிப்படையில் ஒருமனதாக 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே, இந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் […]
கர்நாடகாவில் மேகதாது அணை கட்டப்படக்கூடாது என்பதே அதிமுகவின் நிலைப்பாடு என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். கர்நாடக மேகதாது அணை தொடர்பாக இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த அனைத்து கட்சி கூட்ட ஆலோசனையில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டு மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பை பிரதிபலிக்கும் […]
கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேட்டி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழகத்தின் அமைதி பாதிக்கும் என்றும் நாடு பலமாக இருக்காது எனவும் தெரிவித்துள்ளார். கொங்குநாடு என்ற சிந்தனை விஷமத்தனமானது. சென்னை முதல் குமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர். ஆகையால், கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம். கொங்குநாடு […]
மேகதாது தொடர்பாக நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டது. கர்நாடக முதல்வர் எடியூரப்பா மேகதாது அணையை கட்டியே தீருவோம் என கூறி வரும் நிலையில் இன்று அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த கூட்டத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் ஒருமனதாக 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதுகுறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், […]