தமிழகத்தின் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்..!

தமிழகத்தின் 11 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.
நேற்று நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று வடக்கு ஆந்திரா மற்றும், தெற்கு ஓடிசா ஒட்டிய கடற்பகுதியில், நிலவுகிறது. இந்த நிலையில், தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை, ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கும், ஏனைய மேற்கு தொடர்ச்சி ஒட்டியுள்ள தேனி, தென்காசி, திண்டுக்கல் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ராணிப்பேட்டை, வேலூர், சென்னை , வேலூர், திருவள்ளூர், செங்கல்பட்டு காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரூ இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு என்றும், தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை :
தெற்கு வங்கக்கடல் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025