மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு வயது 60. இவர் தெற்கு ஒன்றிய பாஜக செயலாளராக உள்ளார். இவர் ஒரு கிராமத்தை சேர்ந்த 4 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்துள்ளார். மேலும் அதனை காண்பித்து அதேபோல தன்னிடம் பாலியல் சில்மிஷம் செய்ய வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து, இதுகுறித்து ஒரு சிறுமியின் பெற்றோர், மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]
கேரளாவில் இருந்து தமிழகம் வரும் மக்களுக்கு ஜிகா வைரஸ் பரிசோதனை செய்யப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஜிப்ஸி காலனியில் தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொசு மூலம் ஜிகா வைரஸ் பரவுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். கேரள எல்லை பகுதிகளில் உள்ள வீடுகளில் நேரில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. கேரள எல்லை பகுதியில் உள்ள யாருக்கும் ஜிகா வைரஸ் பாதிப்பு இல்லை என்றும் கேரளாவில் […]
தமிழ்நாடு பாடநூல் கழக தலைவராக திண்டுக்கல் ஐ லியோனி பொறுப்பேற்றார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம், இதன் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு இலவசமாகவும், தனியார் பள்ளிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலும் வழங்கிவருகிறது. சமீபத்தில் தமிழ்நாடு பாடநூல் கழக […]
மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், மக்கள் மன்றம் கலைக்கப்படுவதாக ரஜினிகாந்த் அறிவிப்பு. சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். ரஜினிகாந்த், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்தித்துள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், ரஜினி மக்கள் […]
மதுரை புறநகர் மாவட்ட பாஜக செயற்குழுக் கூட்டம் சோழவந்தானில் நடைபெற்றது. மாவட்டத் செயலாளர் மகா சுசீந்திரன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் பேசிய மதுரை மாவட்ட பாஜக செயலாளர் மகா சுசீந்திரன் அவர்கள், அதிமுக ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் நிறைந்து காணப்பட்டதால், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் உள்ளிட்டோர் திமுக அரசுக்கு எதிராக செயல்பட மாட்டார்கள். எனவே, திமுகவை எதிர்த்து ஒரு அறிக்கை கூட விடமுடியாது என தெரிவித்துள்ளார். மேலும், திமுகவை எதிர்த்து அவர்கள் செயல்பட்டால் சிறை […]
முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் தலைமை செயலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். சட்டசபை தேர்தலுக்கு முன் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தொகுதிகளில் வைக்கப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு திமுக ஆட்சிக்கு வந்தால் 100 நாட்களில் தீர்வு காணும் என தெரிவிக்கப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் “உங்கள் தொகுதியில் முதல்வர்” என்ற தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கு சிறப்பு அதிகாரியாக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமிக்கப்பட்டார். உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்தின் […]
மேகதாது அணை குறித்து விவாதிக்க முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற கட்சிகளின் கூட்டம் தொடங்கியது. சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். விவசாயிகளின் நலனை காக்க அனைத்து தரப்பினரின் கருத்தை பிரதிபலிப்பதற்காக அனைத்து கட்சி கூட்டம் நடைபெறுகிறது. சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்து கட்சிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜக, மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட 13 கட்சிகளின் […]
கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று தமிழக பாஜக செய்தி தொடர்பாளர் ஏஎன்எஸ் பிரசாத் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற யூனியன் பிரதேசத்தை உருவாக்க மத்திய பாஜக அரசு முயற்சிப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. இதனைத்தொடர்ந்து, கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் கொங்கு நாடு என்பது பாஜகவின் கருத்து இல்லை என்று […]
சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முன்னாள் அதிமுக அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் அவர்கள் திமுகவில் இணைந்தார். அதனைத் தொடர்ந்து அவருடன் அதிமுக-வின் முன்னாள் எம்.பி.-யான பி.ஆர்.சுந்தரம் அவர்களும் திமுகவில் இணைந்தார். இந்நிலையில் திமுகவில் இணைந்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் எம்.பி.சுந்தரம் அவர்கள், அதிமுக ஜாதி கட்சியை போல் மாறிவிட்டது. ஓபிஎஸ் வெறும் ரப்பர் ஸ்டாம்பாக மாறிவிட்டார். பதவி கிடைத்தால் போதும் என்ற நினைப்பில் ஓபிஎஸ் செயல்படுகிறார், எடப்பாடி சர்வாதிகாரியாக இருக்கிறார் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவுள்ளார். இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த் அவர்கள் சந்திக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசியலுக்கு வரலாமா? வேண்டாமா? என ஆலோசிக்கவுள்ளதாகவும், எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா என ரசிகர்களிடம் […]
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் காலை 10:30 மணி அளவில் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற உள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும், இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இக்கூட்டத்தில் 13 கட்சிகள் கலந்து கொள்கின்றன. தமிழக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் […]
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடைபெற்ற தனியார் மருத்துவமனை திறப்பு நிகழ்ச்சியில், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டார். ஆளுநர் அவர்கள், ரிப்பன் அகற்றி, குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மேலும், இந்த நிகழ்ச்சியில் பால்வளத்துறை அமைச்சர் நாசர், குமிடிபூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜே.கோவிந்தராசன், மாவட்ட ஆட்சியர் ஆல்வின் ஜான் வர்கீஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். அதன்பின் இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பொதுமக்கள் முறையாக கடைபிடிக்க […]
தமிழகத்தில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வந்த நிலையில், தமிழக அரசு ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி ஜூலை 19-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் புதிய தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் இன்றுமுதல் புதிய தளர்வுகள் அமலுக்கு வந்ததால், தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு பேருந்து […]
கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம். தமிழ்நாட்டை இரண்டாகப் பிரித்து கொங்கு நாடு என்ற ஒரு தனி யூனியன் பிரதேசத்தை மத்திய பாஜக அரசு உருவாக்க முயற்சிப்பதாக நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, இவ்விவகாரம் விவாதப்பொருளாக மாறியுள்ளது. கொங்கு நாடு குறித்த சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இதுகுறித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,775 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,775 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,18,786 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 171 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 47 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,418 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,188 பேர் […]
ஈரோடு மாவட்டத்தில் பேருந்தை இயக்கிய ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் பயணிகளை காப்பாற்றிய பிறகு உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் மணியன் காட்டூர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது வயது 52. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் கவுந்தபாடியிலிருந்து பெருந்துறைக்கு பேருந்தில் பயணிகளோடு புறப்பட்டுள்ளார். சென்று கொண்டிருக்கும் பொழுது வெள்ளாங்கோயில் நிறுத்தத்தில் பயணிகளை இறக்கி விட்டு மீண்டும் பேருந்தை இயக்கும் பொழுது அவருக்கு […]
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக,முன்னதாக தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில விவசாயிகளின் நலன் காக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். அவரைத் தொடர்ந்து,தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், அண்மையில் மத்திய நீர்வளத் துறை அமைச்சரை சந்தித்து,மேகதாது அணை பிரச்சினையில் மத்திய அரசு தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் […]
சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில்,காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசை வலியுறுத்தல்,குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 தருவதாக அறிவித்ததை உடனடியாக திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக […]
தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து எம்.பி கனிமொழி மரியாதை செலுத்தினார் .அப்போது அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதா கிருஷ்ணன், கலெக்டர் செந்தில்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: “ தமிழக மண் மற்றும் மண்ணின் பெருமைகளை பாதுகாப்பதற்காக தன் இன்னுயிரைத் தந்த சுதந்திர போராட்ட வீரர்களின் பெருமைகளை தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சியில் தொடர்ந்து காப்பாற்றப்படும். தமிழ் மண்ணின் பெருமைகளை எந்தவொரு காலகட்டத்திலும் முதல்வர் […]
நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். தென்மேற்கு பருவக்காற்று காரணமாக நீலகிரி, கோவை ஆகிய இரண்டு மாவட்டத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு என்றும், தேனியில் கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் […]