பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா மீது 3 வழக்குகளில் 2 வழக்குகள் போக்சோ பிரிவின் கீழ் பதிவான நிலையில் முதல் போக்சோ வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில்,மாணவிகளை சுற்றுலா அழைத்து சென்றபோது சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிபிசிஐடி தகவல் தெரிவித்திருக்கும் நிலையில்,அவர் மேலும் ஒரு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து,அவரை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் […]
தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமை வாய்ப்பு வழங்கவில்லை. அதற்கு பதிலாக ஜெயக்குமார் என்பவர் போட்டியிட்ட நிலையில், தோப்பு வெங்கடாசலம் பெருந்துறை தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்து தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், அவர் 9 ஆயிரத்து 791 வாக்குகளை மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார். இந்நிலையில், இன்று காலை 10:30 மணியளவில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் […]
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 150-க்கும் மேற்பட்டவர்களிடம் ரூ.5 கோடி ரூபாய் பணமோசடி செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆனந்தி என்பவர் திருவான்மியூர் அருகே உள்ள கொட்டிவாக்கத்தை சேர்ந்தவர். இவர் வயது 35. இவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி செய்தவர்கள் மீது புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு அரசு துறையான அச்சுத்துறை, எழுதுபொருள் துறை மற்றும் மின்வாரியத்தில் உதவி பொறியாளர், சத்துணவு அமைப்பாளர் போன்ற […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 2,913 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 2,913 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,16,011 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 174 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 49 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,371 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,321 பேர் […]
கேரள மாநிலத்தில் இருந்து வரும் பயணிகளுக்கு தமிழக எல்லையில் இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்ததையடுத்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு காரணமாக தற்போது கொரோனா பாதிப்பு சற்று குறைய தொடங்கியுள்ளது. இருந்தபோதிலும், கோவையில் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த வகையில் குறையாத காரணத்தால், கேரளாவில் இருந்து வரும் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இ-பாஸ் இல்லாமல் வரும் வாகனங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றது. கேரளாவை ஒட்டியுள்ள 13 தமிழக எல்லைகளிலும் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கேரளாவில் இருந்து […]
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.அந்த வகையில், தற்போது 13 நகராட்சி ஆணையர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் காஞ்சிபுரம், மறைமலைநகர், தாம்பரம், பல்லாவரம், கொடைக்கானல் உள்ளிட்ட 13 நகராட்சி ஆணையர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி,கீழ்க்கண்ட மாவட்டங்களுக்கு நியமனம் செய்யப்பட்டவர்கள் பின்வருமாறு: பல்லாவரம் நகராட்சி ஆணையர் – காந்திராஜ், காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக – லட்சுமி மறைமலை நகர் – ராஜாராம், பொள்ளாச்சி – தாணு மூர்த்தி, […]
ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களை வரும் 12ம் தேதி திங்கட்கிழமை ரஜினிகாந்த் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின், முதல் முறையாக மக்கள் மன்ற நிர்வாகிகளை ரஜினிகாந்த சந்துக்கவுள்ளார். தான் அரசியலுக்கு வரவில்லை என கூறிய பின் மக்கள் மன்ற நிர்வாகிகள் வேறு கட்சியில் இணையும் நிலையில், இந்த சந்திப்பு நிகழவுள்ளது. மாவட்ட செயலாளர்கள் மட்டும் சென்னைக்கு வரும்படி தொலைபேசி வாயிலாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என கூறப்படுகிறது.
கடன் தவணையைச் செலுத்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்தும், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வாகன உரிமையாளர்களிடமிருந்து வாகனத்தை பறிமுதல் செய்கிறது. எனவே,தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி,நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் : சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதை : கொரோனா நோய்த் தொற்று காரணமாக கடன் தவணைச் செலுத்துதலை மூன்று மாத காலத்திற்கு ஒத்திவைக்க, […]
சமூக வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பரப்பிய கிஷோர் கே சுவாமியின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கிஷோர் கே சுவாமி சென்னையை அடுத்த பம்மலை சேர்ந்தவர். இவர் சமூக வலைத்தளத்தில் அவதூறாக பெண்களை பற்றியும், முன்னாள் முதல் அமைச்சர் அண்ணாதுரை, முதல் அமைச்சர் ஸ்டாலின் ஆகியோரை பற்றியும் விமர்சனம் செய்து வந்துள்ளார். இதன் காரணமாக இவரை குண்டர் சட்டத்தில் ஜூன் 26 ஆம் தேதி கைது செய்தனர். இதனையடுத்து இவருக்கு ஜாமீன் கோரி தாம்பரத்தில் இருக்கும் குற்றவியல் […]
பெரம்பலூர் மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட முனைவர் சோ.சத்திய சீலன் (88), கடந்த சில ஆண்டுகளாக திருச்சி டிவிஎஸ் டோல்கேட் சேதுராமன் பிள்ளை காலனியில் வசித்து வந்தார். இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று இரவு தனது வீட்டில் காலமானார்.இன்று அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து,சத்திய சீலன் அவர்களது மறைவிற்கு அரசியல் பிரமுகர்கள் மற்றும் மொழிப் பற்றாளர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில்,அவரது மறைவிற்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இரங்கல் தெரிவித்துள்ளார்.மேலும்,இது […]
தமிழகத்தில் புதிய ஆளுநர் நியமனம் செய்யப்படுகிறாரா? அவ்வாறு நடந்தால் மத்திய அரசு எப்படி கலந்தாலோசிக்க வேண்டும் என்று காங்கிரஸ் பிரமுகர் பீட்டர் அல்போன்ஸ் அவரது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஆளுநர் பன்வாரிலால் புரோஹிட் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். தற்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற பின்னர், தற்போது முதன் முதலாக தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். இன்று மாலை 4 […]
அதிமுகவின் 50ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவின் 50 ம் ஆண்டு பொன் விழாவை சிறப்பாக கொண்டாடுதல் என்ற சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிமுக […]
இரண்டு நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்,குடியரசு தலைவர் மற்றும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை இன்று காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில்,பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் ஆளுநர் சந்தித்து உள்ளார். தமிழகத்தின் ஆளுநர் மாற்றப்படலாம் என தகவல் வெளியாகி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியத்தும் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை, நீட் தேர்விலிருந்து விலக்கு உள்ளிட்ட விவகாரங்கள் […]
மதுரை மாவட்டத்தில் சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக ரூ.4,000 லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர் லஞ்ச ஒழிப்பு துறையால் நூதன முறையில் பிடிபட்டு கைதாகியுள்ளார். மதுரை மாவட்டம் அழகப்பன் நகர் பகுதியை சேர்ந்தவர் பரிமளா, இவரின் மகன் ஈசுவரபிரசாத். ஈசுவரப்பிரசாத்திற்கு(46) அந்த பகுதியில் சொந்தமாக 2 கடைகள் இருக்கிறது. மேலும் இவரது தாயார் பரிமளாவின் பெயரில் ஒரு குடோன் உள்ளது. அதனால் இவற்றை சொத்துவரி மதிப்பீடு செய்வதற்காக மதுரை தெற்கு மண்டல அலுவலகத்திற்கு சென்றுள்ளார். […]
12ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் இந்த மாதம் இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் ஏற்கெனவே ரத்து செய்யப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித் துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக் கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் […]
மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை 15 நாட்களில் தொடங்க இருப்பதாக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்களை தேடி மருத்துவம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் விரைவில் அமல்படுத்துவார். நீரிழிவு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்க்கப்படும். இத்திட்டத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் வீடு தேடி மருந்துகள் வரும் என்றார். மேலும் இந்த திட்டம் 15 நாட்களில் தொடங்க உள்ளதாகவும், முதற்கட்டமாக 20 லட்சம் […]
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு வரும்பொழுது அங்கிருந்த தொண்டர்கள் ஒற்றை தலைமை ஓபிஎஸ் என முழக்கமிட்டதால் அவ்விடத்தில் சில சலசலப்புகள் ஏற்பட்டது. நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலுக்கு பின் முதலாவது மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை நேற்று நடத்தினர். சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் இந்தக்கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகளின் கூட்டத்தில் முக்கியமாக சில முடிவுகள் எடுக்கவும், வருகின்ற உள்ளாட்சி தேர்தலை குறித்து கலந்தாலோசிக்கவும் செய்துள்ளனர். இந்நிலையில், இந்த […]
தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 […]
சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார். பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே […]
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசு அறிவித்துள்ளது.அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் […]