தமிழ்நாடு

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யக்கூடும்- வானிலை மையம்..!!

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் நாளை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நாளை வரை மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலை 35 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 […]

#Rain 3 Min Read
Default Image

சாலை விபத்தில் சிக்கிய இளைஞர்..!வேஷ்டியை கிழித்து முதலுதவி செய்த திமுக எம்.எல்.ஏ..!

சாலை விபத்தில் கால் முறிவுற்ற நிலையில் வலியால் துடித்த இளைஞருக்கு தனது வேஷ்டியை கிழித்து திமுக எம்.எல்.ஏ. ஆன மருத்துவர் முதலுதவி செய்துள்ளார். பனங்குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெயக்குமார். இவர் விழுப்புரம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்த பொழுது ராகவன்பேட்டை எனும் இடத்தில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய இளைஞருக்கு கால் முறிவுற்று வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக சென்றுகொண்டிருந்த விழுப்புரம் திமுக எம்.எல்.ஏ டாக்டர் லட்சுமணன் வலியால் துடித்த இளைஞரை கண்டுள்ளார். உடனே […]

#DMK 3 Min Read
Default Image

கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் – அரசு அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6 மணி வரை தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,நோய்த் தொற்றை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து அரசு அறிவித்துள்ளது.அதன்படி, நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் […]

corona infection 7 Min Read
Default Image

#Breaking:மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! இவற்றிற்கெல்லாம் தொடர்ந்து தடை…?

தமிழகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸின் இரண்டாம் அலை பரவலைக் கட்டுப்படுத்த கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில்,நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு 12-7-2021 முதல் 19-7-2021 காலை 6.00 மணி வரை தொடர்ந்து தடை விதிக்கப்படுகிறது.அதன்படி, மாநிலங்களுக்கிடையே தனியார் […]

ban 3 Min Read
Default Image

கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்…!

தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு உடல் வெப்ப நிலை பரிசோதனை […]

#Corona 4 Min Read
Default Image

#BigBreaking:ஊரடங்கு நீட்டிப்பு; அரசு தேர்வுகள் நடத்த அனுமதி…!

தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-7-2021 அன்று காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த் தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு 19-7-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளின் படி,மத்திய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்புகள் தொடர்பான எழுத்துத் தேர்வுகள் அரசு வழங்கியுள்ள வழிகாட்டுநெறிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. இதுகுறித்த விவரங்களை தேர்வு நடத்தும் அமைப்புகள் முன்னதாகவே மாவட்ட ஆட்சியாளர்களிடம் […]

government exams 2 Min Read
Default Image

தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…! எவற்றிற்கெல்லாம் கூடுதல் தளர்வுகள்…?

தமிழகத்தில் ஜூலை 12-ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில், ஜூலை 19-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீடித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, ஏற்கனவே இரவு 8.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் செயல்பாடுகள் 12-7-2021 முதல் இரவு 9.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், பின்வரும் கூடுதல் செயல்பாடுகளும் அனுமதிக்கப்படுகின்றன. புதுச்சேரிக்கான பேருந்து சேவை தொடங்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் […]

Chief Minister MKStalin 3 Min Read
Default Image

#BREAKING: தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீடித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கொரோளா நோய்த் தொற்று பரவலைக் குறைக்கத் தேவையான கட்டுப்பாடுகளை 31-7-2021 வரை நொடர்ந்து அமல்படுத்த ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. தற்போது தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு 12-1-2021 அன்று காலை 6 […]

#CMMKStalin 7 Min Read
Default Image

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைகிறார்.!

அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நாளை திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான முக ஸ்டாலின் முன்னிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உள்பட 300 பேருடன் நாளை காலை 10:30 மணிக்கு திமுகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதி எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலத்திற்கு நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட அதிமுக […]

#AIADMK 3 Min Read
Default Image

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் – அமைச்சர் சேகர்பாபு

தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் பணிபுரிவர்களுக்கு பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். திருச்சி ஸ்ரீரங்கம், சமயபுரம் உள்ளிட்ட திருக்கோவில்களை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக கோயில்களில் 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணி புரிபவர்களின் பணி, ஒரு மாதத்திற்கு நிரந்தரம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருப்பவர்கள், வாடகைக்கு இருப்பவர்கள் அதை ஒத்துக்கொண்டு திருக்கோவிலுக்கு உரிய மனுவினை […]

#TNGovt 4 Min Read
Default Image

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்தார். அவர், கட்டுமானம் மற்றும் ஆக்சிஜன் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், கடந்த ஆட்சியில் சுகாதாரத் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும், தவறுகள் நடந்திருந்தால், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். அதன் அடிப்படையில் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், […]

#ADMK 2 Min Read
Default Image

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் நீட்டிப்பு – தமிழ்நாடு அரசு உத்தரவு.!

அரசு பேருந்துகளின் ஆயுட்காலம் மற்றும் கண்டம் செய்யும் வயதை அதிகரித்து உத்தரவிட்டு தமிழக அரசு அரசாணை வெளியீடு. தமிழக அரசு விரைவு பேருந்துகளின் ஆயுட்காலம் தற்போது 3 ஆண்டுகள் அல்லது 7 லட்சம் கிலோ மீட்டர் என உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனை இனி வரும் காலங்களில் அரசு விரைவு பேருந்துகள் 7 ஆண்டுகள் வரை இயங்கலாம் அல்லது 12 லட்சம் கி.மீ. தூரம் பயணிக்கலாம் என போக்குவரத்துத்துறை செயலாளர் தயானந்த கட்டாரியா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஏற்கனவே விரைவுப் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி ரூ.25 கோடி விடுவிப்பு – தமிழக அரசு

ஓய்வூதியதாரர்களுக்கு குடும்பநல நிதி தர முதற்கட்டமாக ரூ.25 கோடியை விடுவித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு குடும்ப நல நிதி வழங்குவதற்காக ரூ.25 கோடியை விடுவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 13,746 ஓய்வூதியதாரர்களின் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளதால் முதல்கட்டமாக ரூ.25 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

#TNGovt 1 Min Read
Default Image

#BREAKING: இனி நியாய விலை கடைகளில் புகார் பதிவேடு – தமிழக அரசு உத்தரவு!

அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடு பதிவு முறை அமலுக்கு வருகிறது என்று தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் எழுத்து மூலம் புகார் தெரிவிக்க, புகார் பதிவேடு முறையை அமலபடுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவெளியில் புகாரை தெரிவிக்க பல்வேறு சிரமங்கள் உள்ளதாக, ஆய்வு கூட்டத்தில் எம்எல்க்கள் கூறியதால் புகார் பதிவேடு முறையை கடைபிடிக்க உத்தரவிட்டுள்ளனர். இணையவழியில் புகார் நடைமுறையும் அமலில் இருக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. […]

#RationShop 2 Min Read
Default Image

திராவிட மாடல் என்பது இது தான்…! முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்…!

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. இந்த குழுவின் உறுப்பினர்களான எஸ்தர் டஃப்லோ, ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன், ஜீன் டிரீஸ், எஸ்.நாராயண் ஆகியோர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேலும், தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தலைமைச் செயலாளர் இறையன்பு, நிதித்துறை கூடுதல் செயலர் கிருஷ்ணன் ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் […]

#DMK 5 Min Read
Default Image

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மாற்றம்? – ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் சந்திப்பு!

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்தார். டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்க உள்ள நிலையில், ராஜ்நாத் சிங்குடன் ஆளுநர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இதனிடையே, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை ஆளுநர் சந்திக்க உள்ளார். […]

#BanwarilalPurohit 3 Min Read
Default Image

முட்டை விலை 10 காசுகள் குறைந்து ரூ.4.80க்கு விற்பனை..!

நாமக்கலில் முட்டை கொள்முதல் விலை 10 காசுகள் குறைந்து லிருந்து 10 காசுகள் குறைந்து, ரூ.4.80 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  கடந்த வருடம் கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட துவக்கத்தில் அதிகளவில் அடி வாங்கிய வியாபாரம் என்றால் அது முட்டை வியாபாரம். முட்டை விலை கிட்டத்தட்ட 1 ரூபாய்க்கும் கீழ் குறைந்து விற்பனை செய்யப்பட்டது. அதற்கு பிறகு முட்டை விலை ஏற்றம் மற்றும் இறக்கத்தை கண்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 3- ஆம் தேதியிலிருந்து […]

#Chennai 3 Min Read
Default Image

பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார்!

தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் வயது முதிர்வால் இன்று திருச்சியில் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான சத்யசீலன் திருச்சியின் அடையாளங்களில் ஒருவர் ஆவார்.

ripSSatyaseelan 1 Min Read
Default Image

தமிழகத்திற்கு மாதம் 2 கோடி தடுப்பூசிகள் தேவை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது  அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், […]

coronavaccine 3 Min Read
Default Image

தமிழக அரசுக்கு எச்சரிக்கை: அதிமுக மாவட்டக் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]

#AIADMK 8 Min Read
Default Image