தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் உடல்நலக்குறைவால் காலமானார். தமிழ்நாடு அரசின் கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளை பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் முனைவர் சோ.சத்யசீலன் வயது முதிர்வால் இன்று திருச்சியில் காலமானார். மூத்த தமிழறிஞரும், சிறந்த இலக்கியவாதியுமான சத்யசீலன் திருச்சியின் அடையாளங்களில் ஒருவர் ஆவார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் சமீப நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள், ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை நேரில் ஆய்வு செய்த அவர், […]
அதிமுகவின் தலைமை நிர்வாகிகள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் 6 தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றம். சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அதிமுகவின் மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 6 முக்கிய தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட […]
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகள்,கட்சியின் வளர்ச்சி பணிகள் போன்றவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும்,குடும்பத் தலைவிகளுக்கு மாதம்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகையை […]
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆறுமுக பாண்டியன் தலைமையில், அதிமுகவின் மாவட்ட, ஒன்றிய, கிளை பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட அதிமுக-வின் அனைத்து பிரிவுகளின் நிர்வாகிகள் மற்றும் அதிமுக-விலிருந்து நீக்கப்பட்ட நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும், அதிமுகவிலிருந்து ஓபிஎஸ்-இபிஎஸ் நீக்கப்படவேண்டும், அதிமுகவின் பொது செயலாளராக சசிகலா பொறுப்பேற்க வேண்டும் என்றும், சசிகலாவுடன் தொலைபேசியில் பேசியவர்களை அதிமுக-வில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
உண்மையான திராவிடர்கள் செல்ல வேண்டிய இடம் அண்ணா அறிவாலயம் என்று அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் எம்.பி விஜிலா சத்யானந்த் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிடர் முன்னேற்ற கழகத்தில்(திமுக) இணைந்துள்ளார். இவர் அதிமுகவில் நெல்லை மாநகராட்சி மேயர், மாநிலங்களவை எம்.பி ஆகிய பதவிகளிலும் தற்போது அதிமுக-வில் மாநில மகளிரணி செயலாளர் பதவியிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில், திடீரென இவர் திமுகவில் இணைந்துள்ளார். இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய விஜிலா சத்யானந்த், ‘முன்னாள் […]
தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 3,039 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,039 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,13,098 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 180 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,322 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,411 பேர் […]
தென்பெண்ணையாற்றின் குறுக்கே பிரம்மாண்ட அணைகட்டியுள்ள கர்நாடக அரசு மீது சட்டரீதியான நடவடிக்கைகளை எடுக்காது தமிழ்நாடு அரசு அமைதி காப்பது ஏன்? என சீமான் அறிக்கை. இதுதொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்பெண்ணையாற்றின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டி முடித்துள்ள கர்நாடக அரசுக்கு எதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது பெரும் ஏமாற்றமளிக்கிறது. தடுப்பணை அமைப்புக்குச் சிறிதும் […]
சாலை விபத்தில் காயமடைந்த சிறுவன் தையல் போடுவதற்கு மறுத்ததால் விஜய் நடித்த பிகில் படம் வலிநிவாரணியாக மாறிய சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மயிலாப்பூர் கணேசபுரத்தை சேர்ந்த சிறுவன் ஷிவர்ஷன். இவனுடைய வயது 10. இந்த சிறுவன் கடந்த 6 ஆம் தேதியன்று பற்றுலா சாலை வழியாக தனது உறவினர் அரவிந்தனுடன் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். தூக்க கலக்கத்தில் பின்னால் அமர்ந்திருந்த ஷிவர்ஷன் திடீரென கீழே விழ மூக்கு மற்றும் நெற்றி பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. […]
குடும்ப அட்டை வேண்டி விண்ணப்பிப்பவர்களுக்கு 15 நாட்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் கடைகளில் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது, உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு ஏதுவாக புகார் புத்தகம் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் காலாவதியான பொருட்களை வழங்கினால், பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். ரேசனில் தரமான பொருட்கள் தடையின்றி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்படும் […]
தமிழகத்தில் கொரோனா வைரஸின் 2 வது அலையானது கடந்த இரண்டு மாதங்களாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், மக்களிடம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளும் எண்ணம் தற்போது அதிகரித்துள்ளது. இதனால்,போதுமான அளவு தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லாமல், பல மாவட்டங்களில் தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதற்காக,தமிழக அரசானது,மத்திய அரசிடம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்துக்கு தேவையான தடுப்பூசிகளை வழங்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரில் வலியுறுத்துவதற்காக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,டெல்லி சென்றுள்ளார். அதன்படி,மத்திய […]
தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் என்று சென்னை உய்ரநீதிமன்றம் கருத்து. டெல்லியில் முதன்மை அமர்வு பிறப்பிக்கும் உத்தரவுதான் நாடு முழுவதும் பொருந்தும் என கூற முடியாது என்றும் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் 5 அமர்வுகளில் பிறப்பிக்கும் உத்தரவுகள் நாடு முழுவதும் பொருந்தும் எனவும் சென்னை உய்ரநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. நிலக்கரி இறக்குமதிக்கு சுற்றுசூழல் தாக்க மதிப்பீடு தேவையில்லை என்ற அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது. தென்மண்டல தேசிய பசுமை […]
கேரளாவின் பாடசாலை பகுதியில் கர்ப்பிணி ஒருவருக்கு நேற்று ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மேலும் 14 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு உறுதியானதால், மொத்தம் பாதிப்பு 15 ஆக உயர்ந்துள்ளது. திருவனந்தபுரத்தில் புதிதாக கண்டறியப்பட்ட 15 பேரில் பெரும்பாலானவர்கள் சுகாதார ஊழியர்கள் என கூறப்படுகிறது. இந்நிலையில், சென்னையில் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், ஜிகா […]
சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தற்போது தொடங்கியுள்ளது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள நிலையில், தேர்தலுக்கான ஆயத்த பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்வி குறித்தும், கூட்டணி பற்றியும் […]
கல்லூரி தொடங்காததால் வீட்டில் சும்மா தான இருக்க, அதற்கு எங்களோடு வந்து பருத்தி எடு என்று பெற்றோர் கண்டித்ததால் பூச்சி மருந்து குடித்து உயிரிழந்துள்ளார் மாணவன். திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே கோவில்பத்து கிராமத்தை சேர்ந்தவர் வீரையன். இவர் மாதாகோவில் தெருவை சேர்ந்தவர். இவரது மகன் சுரேஷ்குமார் தனியார் பாலிடெக்னீக் கல்லூரியில் படித்து வருகிறார். தற்போது தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளது. இதனால் இவர் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் வீட்டில் இருக்கும் இவரது […]
தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 12 மாவட்டங்கள், புதுச்சேரியில் ஒரு மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகம் உள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கேரளா, மகாராஷ்டிராவில் கொரோனா அதிகரித்து வருவது கவலையளிக்கிறது என்றும் கூறியுள்ளனர். இரண்டுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு உள்ள மாநிலங்களில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இதனிடையே, தமிழகத்தில் நேற்று […]
அடுத்த 2 மணி நேரத்திற்கு தமிழகத்தின் 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் வேலூர், திருவள்ளூர், ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, பெரம்பலூர், கடலூர் , மதுரை ஆகிய 8 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஏனைய மாவட்டங்கள் […]
டெல்லியில் பிரதமர் மோடியை நாளை மாலைசந்திக்க உள்ளார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை சந்திக்கிறார் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். தமிழகத்தின் அரசியல் சூழல், கொரோனா நிலவரம் உள்ளிட்டவை குறித்து பிரதமருடன் ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தைப் பாலைவனமாக்கும் கர்நாடக அரசின் நயவஞ்சக முயற்சிகளை முறியடிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: தமிழக அரசு வேடிக்கை: தென்பெண்ணையாற்றின் துணையாறான மார்க்கண்டேய நதியின் குறுக்கே தெதடு தடுப்பணை என்ற பெயரில் மதகுகளின்றி மிகப்பெரிய அணையைக் கட்டி முடித்துள்ள கர்நாடக அரசுக்கெதிராக எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்காது தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது […]
தமிழ்நாட்டில் இருந்து மீண்டும் வெளிநாடுகளுக்கு பூக்கள் ஏற்றுமதி தொடங்கியது. கடந்த நிதியாண்டி மட்டும் 66 கொடியே 28 லட்சம் ரூபாய் மதிப்பிலான மதுரை மல்லிகை அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தங்களது வீடுகளிலும், கோவில்களிலும் மலர் அலங்காரம், பூஜை மற்றும் முக்கிய விஷேச தினங்களுக்கு பயன்படுத்த தமிழ்நாட்டில் இருந்து பூக்கள் அனுப்பப்படும். கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்துக்கு நிறுத்தப்பட்டதால் பூக்கள் […]