தமிழ்நாடு

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் தொடக்கம் – நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்

தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளம் அறிமுகம் செய்து வைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தனி இணையதளத்தை தொடங்கிவைத்தார் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், முதலாமச்சரின் பொது நிவாரண நிதிக்கு வரும் தொகையை வெளிப்படையாக அறிவிக்க இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. மே 6ம் தேதிக்கு முன்பு வந்த நிதியை தனிக்கணக்காக வைக்கவும், மே […]

#TNGovt 4 Min Read
Default Image

திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் – அரசாணை வெளியீடு!

திருநங்கைகளுக்கு இரண்டாம் தவணை இரண்டாயிரம் ரூபாய் வழங்குவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஏற்கனவே தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களால் அறிவிக்கப்பட்ட நான்காயிரம் ரூபாய் நிவாரணத் தொகை இரண்டு தவணையாக வழங்கப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள மூன்றாம் பாலினத்தவருக்கும் நிவாரண தொகையாக 2000 ரூபாய் ஏற்கனவே முதல் தவணையில் வழங்கப்பட்டிருந்த நிலையில் […]

#Transgender 3 Min Read
Default Image

மகளிரணி தலைவியின் காலை வாரிய மாட்டு வண்டி..!-பதற்றத்தில் தலைவி..!

பெட்ரோல் விலையுயர்வை கண்டித்து நடந்த போராட்டத்தில் மகளிரணி தலைவி மாட்டு வண்டியில் ஏறமுற்பட்டபோது மாடுகள் வண்டியை பின்பக்கம் தள்ளியதால் தலைவி கீழே விழும் நிலைக்கு தள்ளப்பட்டார். நெல்லை மாவட்டம் வள்ளியூரில் பெட்ரோல், டீசல், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் மகளிரணி தலைவி அமுதாவுடன் திரளாக சேர்ந்த மகளிர் கூட்டம் சாலையில் வைத்திருந்த சிலிண்டருக்கு மாலை அணிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் மகளிரணி தலைவியை மாட்டுவண்டியின் மீது ஏறி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். அதனால் […]

#Congress 4 Min Read
Default Image

“பாஜகவின் சித்தாந்தத்தை ஒவ்வொரு வீட்டிற்கும் எடுத்துச் செல்லும் வரை ஓயமாட்டோம்” – மாநில தலைவர் அண்ணாமலை….!

பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் விரிவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து,தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமனம் செய்து பாஜக தேசிய […]

#Annamalai 5 Min Read
Default Image

கரூரில் போலீசாருடன் பாஜகவினர் வாக்குவாதம்!

மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை தொடர்ந்து கரூரில் போலீசாரும் பாஜகவினர் வாக்குவாதம். தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றத்தை தொடர்ந்து பாஜகவின் மாநிலத் துணை தலைவராக இருந்த அண்ணாமலை தலைவராக செயல்படுவார் என்று பாஜக தேசிய தலைவர் ஜெபி நட்டா நேற்று அறிவித்திருந்தார். இந்த நிலையில், கரூர் ஆட்சியர் பிரபு சங்கர் காரில் செல்லும்போது பாஜகவினர் பட்டாசு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மாநில தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டதை பட்டாசு […]

#Annamalai 3 Min Read
Default Image

தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து..!

தமிழ்நாட்டின் பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அண்ணாமலைக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சரவை பிரதமர் மோடி தலைமையில் மாற்றம் செய்யப்பட்டது. அதில் தமிழக பாஜக தலைவராக இருந்த எல்.முருகன் தற்போது இணை அமைச்சராக பொறுப்பேற்றார். இதன் பின்னர், பாஜக கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையை நியமித்தார். இவர் இதற்கு முன்னர் தமிழகத்தில் பாஜக துணைத்தலைவர் பதவியை வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பலரும் அண்ணாமலைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர். […]

#Annamalai 3 Min Read
Default Image

“அதிமுகவில் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே இல்லை” – சசிகலா..!

பெங்களூர் சிறையில் இருந்து விடுதலை ஆன பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்த சசிகலா அவர்கள்,கடந்த இரண்டு மாதங்களாக அவரது ஆதரவாளர்களிடேயே தொலைபேசி மூலமாக பேசி வருகிறார். அவ்வாறு பேசும்போது,தான் மீண்டும் கட்சிக்கு வருவதாகவும்,அம்மா ஜெயலலிதா போல ஆட்சியை நடத்துவதாகவும் தெரவித்தார். ஆனால்,இதற்கு அதிமுகவினர் மத்தியில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால்,சசிகலாவுடன் தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டனர்.இதனையடுத்து,அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில் “சசிகலா அவர்களுக்கும் அதிமுகவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை”,என்று கூறினார். […]

#ADMK 4 Min Read
Default Image

12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் – வானிலை மையம் எச்சரிக்கை!

காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை. தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. இந்த நிலையில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகுவதால் மீனவர்கள் 12 ம் தேதி வரை வங்க கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் […]

#Fishermen # 3 Min Read
Default Image

ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசம்…!

சென்னையிலுள்ள கடை ஒன்றில் 750 ரூபாய் பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறது.  நாடு முழுவதும் தற்பொழுது பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயுவின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. குறிப்பாக 1 லிட்டர் பெட்ரோல் விலை 100 க்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னையிலுள்ள பிரியாணி கடை ஒன்றில் ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் 1 லிட்டர் பெட்ரோல் இலவசமாக கொடுக்கப்படுகிறதாம். சென்னையிலுள்ள தொப்பி வாப்பா […]

#Petrol 3 Min Read
Default Image

“பெண்களை மதிக்கின்ற ஒருவரை பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும்” -ஓபிஎஸ் கோரிக்கை..!

தமிழ்நாடு பாடநூல் நிறுவனம்,கல்வியியல் பணிகள் மற்றும் கழக தலைவராக ஐ.லியோனி அவர்களை நியமனம் செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த புதன்கிழமையன்று உத்தரவிட்டார். இந்நிலையில்,பெண்களை மதிக்கின்ற ஒருவரை தமிழ்நாடு அரசு பாடநூல் கழக தலைவராக நியமிக்க வேண்டும் என்று முதல்வருக்கு ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது : இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன்: இந்தச் செயலை, இந்தக் கருவியால், இவன் முடிக்க வல்லவன் என்பதைத் தெரிந்து […]

#ADMK 10 Min Read
Default Image

#Breaking: மேகதாது அணை: 12ல் அனைத்துக்கட்சி கூட்டம் – முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு!!

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக வரும் 12 ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என்றும் முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு மேற்கொண்டு வரும் முயற்சிகள் தொடர்பாக, சட்டப்பூர்வமான அனைத்து நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழக முதலமைச்சர், பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மேகதாது அணை பிரச்சினை குறித்து தமிழ்நாட்டின் நிலைபாட்டை விளக்கி, நமது மாநில […]

#CMMKStalin 5 Min Read
Default Image

குறைந்த கட்டணத்தில் கேபிள் டிவி சேவை – குறிஞ்சி என். சிவக்குமார்..!

கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குறிஞ்சி என். சிவகுமார் அவர்களைத் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆணையிட்டார். இந்நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் முதல்வர் அவர்கள் […]

cable tv 4 Min Read
Default Image

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை மையம்..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தகவல். தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை பல மாவட்டங்களில் தீவிரமடைந்துள்ள நிலையில் வங்கக்கடலில் ஜூலை 11-ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என இந்திய வானிலை மையம் இன்று அறிவித்திருந்தது. இந்நிலையில், இன்று தமிழகத்தில் நீலகிரி, கோவை மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு […]

#Rain 3 Min Read
Default Image

வேலூரில் 144 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் – 4 பேர் கைது

வேலூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட 144 கிலோ வெள்ளிக்கட்டிகள் மற்றும் ரூ.32 லட்சம் பணம் பறிமுதல். வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையத்தில் கொல்லம் செல்லும் ரயிலில் போலீசார் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.05 கோடி மதிப்பிலான 144 கிலோ வெள்ளிக்கட்டிகள், ரூ.32 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விசாகப்பட்டினத்தில் இருந்து கொல்லம் சென்ற ரயில் காட்பாடி வந்தபோது போலீஸ் சோதனையில் சிக்கியுள்ளது. இந்த சோதனையில் சேலத்தை சேர்ந்த […]

Abduction 2 Min Read
Default Image

சென்னையில் தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசி போடும் பணிகள் நிறுத்தம் – சென்னை மாநகராட்சி

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், தற்போது தொற்று பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் 5, 6, 7 ஆகிய தேதிகளில் தடுப்பூசி முகாம்கள் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக செயல்படவில்லை. மூன்று நாட்களுக்கு பின் நேற்று 45 சிறப்பு முகாம்களில் தடுப்பூசி […]

Chennai Corporation 3 Min Read
Default Image

21 எழுத்தாளர்களுக்கு விருது வழங்கினார் முதல்வர் முக ஸ்டாலின்!!

21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருது மற்றும் ரூ.20,000 ஊக்கத்தொகை வாங்கினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில், ஆதிதிராவிடர் நலத்துறை சார்பாக 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான விருதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழகியுள்ளார். 2018-2019 மற்றும் 2019-2020ஆம் ஆண்டிற்கு தேர்வான 21 சிறப்பு படைப்புகளின் எழுத்தாளர்களுக்கு விருது வழங்கப்பட்டது. மேலும், 21 எழுத்தாளர்களுக்கு சிறந்த படைப்புக்கான ரூ.20,000 ஊக்கத்தொகையை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார். எழுத்தாளர்கள் அறிவரசன், வசந்தா, ஆடலரசு உள்ளிட்டோருக்கு […]

#CMMKStalin 2 Min Read
Default Image

சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு காரணம் பாமக – சி.வி.சண்முகம்

பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகள் கிடைக்கவில்லை அதிமுக முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம். சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பாமாவுடன் கூட்டணி அமைந்ததே முக்கிய காரணம் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாமாவுடன் கூட்டணி அமைத்ததால் பட்டியல் இனத்தவர்களின் வாக்குகளை அதிமுகவால் பெற முடியவில்லை என்றும் அதனால் பல தொகுதிகளில் தோல்வியை தழுவியதாகவும் கூறியுள்ளார். இதற்கு முன்னதாக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தான் […]

#AIADMK 2 Min Read
Default Image

தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.!

அதிமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் தோல்விக்கு பிறகு முதன்முறையாக அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4 மணிக்கு மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கூடுகிறது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ளது. தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் செப்டம்பர் 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவுட்டுள்ள […]

#AIADMK 4 Min Read
Default Image

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் பதவி;அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்….!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால்,1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். இதனையடுத்து,கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.அவருக்கு வயது 67 ஆகும். அரக்கோணத்தில் உள்ள சகோதரர் விஜயராகவன் வீட்டில் முன்னாள் […]

#ADMK 3 Min Read
Default Image

மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்!

மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணையால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், தமிழக நீர்வளத்துறை […]

CMStalin 4 Min Read
Default Image