தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அமைச்சரவையில் பதவி;அதிமுக முன்னாள் அமைச்சர் காலமானார்….!

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் கடந்த 1980ஆம் ஆண்டு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.விஜயசாரதி போட்டியிட்டு வெற்றிபெற்றார்.ஆனால்,1984-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அரக்கோணம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்டபோது தோல்வியுற்றார். இதனையடுத்து,கடந்த சில ஆண்டுகளாக ஆந்திர மாநிலம் சத்தியவேடு அருகே உள்ள பண்ணை வீட்டில் வசித்து வந்தார்.இந்நிலையில்,அவர் உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்தார்.அவருக்கு வயது 67 ஆகும். அரக்கோணத்தில் உள்ள சகோதரர் விஜயராகவன் வீட்டில் முன்னாள் […]

#ADMK 3 Min Read
Default Image

மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் – விஜயகாந்த்!

மேகதாதுவில் அணை கட்டப்படுவதற்கு முன்பே தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.  மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், அண்மையில் அம்மாநில முதல்வர் எடியூரப்பா தமிழக முதல்வருக்கு இது தொடர்பாக கடிதம் எழுதியிருந்தார். இதற்கு பதில் கடிதம் எழுதிய தமிழக முதல்வர் ஸ்டாலின் மேகதாது அணையால் தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். மேலும், தமிழக நீர்வளத்துறை […]

CMStalin 4 Min Read
Default Image

ஜூலை 9: இன்றைய பெட்ரோல்,டீசல் விலை நிலவரம்..!

சென்னையில் பெட்ரோல் ,டீசல் விலையில் எந்த மற்றுமின்றி விற்பனை. தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பல மாவட்டங்களில் பெட்ரோல் ரூபாய் 100 க்கு மேல் விற்பனையாகி வருகிறது.சென்னையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பெட்ரோல் ரூ.100 ஐ கடந்து விற்பனையாகி வருகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும் பெட்ரோல்,டீசல் விலையானது அதிகரித்து வருவது பொதுமக்களை சிரமத்துக்கு உள்ளாக்குகிறது. இன்று சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் மாற்றமின்றி நேற்றைய விலையில் விற்பனை […]

Petrol Diesel Price 3 Min Read
Default Image

இன்று முதல் கோவை – திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கம்..!

சேலம் வழியாக இன்று முதல் கோவை-திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு. இது குறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வருகின்ற ஜூலை 9 ஆம் தேதி முதல் வாரத்தில் நான்கு நாட்களுக்கு கோவை மற்றும் திருப்பதி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செவ்வாய், வியாழன், வெள்ளி மற்றும் ஞாயிறு ஆகிய 4 நாட்களுக்கு கோவை ரயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்படும் ரயில், பிற்பகல் […]

#Train 3 Min Read
Default Image

இன்று அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம்…!

அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று  நடைபெறவுள்ளது. திமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 9-ம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அதிமுக மாவட்ட செயலாளர் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில், உள்ளாட்சி தேர்தல், சசிகலா விவகாரம் […]

#ADMK 2 Min Read
Default Image

#Breaking: தமிழகத்தில் புதிதாக 3,211 பேருக்கு கொரோனா தொற்று..!-57 பேர் உயிரிழப்பு..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் 3,211 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 3,211 பேர் கொரோனாவால் புதிதாக பாதிப்படைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 25,10,059 பேர் ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் 189 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 57 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33,253 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இன்று மட்டும் கொரோனாவிலிருந்து 3,565 பேர் […]

#Chennai 3 Min Read
Default Image

#Breaking: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை நியமனம் – ஜெ.பி.நட்டா அறிவிப்பு

தமிழக பாஜக தலைவர் எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து புதிய தலைவராக அண்ணாமலை நியமனம். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய மத்திய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. பாஜக மாநில தலைவர் […]

#Annamalai 3 Min Read
Default Image

தமிழகத்துக்கு ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு!!

வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்திற்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி மத்திய அரசு ஒதுக்கீடு. வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு நான்காவது தவணையாக ரூ.183.67 கோடி விடுவித்தது மத்திய அரசு. 2021-22 ஆம் ஆண்டில் வருவாய் பற்றாக்குறை நிதியாக தமிழகத்துக்கு இதுவரை ரூ.734.67 கோடி விடுவித்துள்ளது மத்திய அரசு. 15-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையில் தகுதிவாய்ந்த 17 மாநிலங்களுக்கு மத்திய அரசு வருவாய் பற்றாக்குறை நிதியை மாதந்தோறும் ஒவ்வொரு தவணைகளாக விடுவித்து வருகிறது. இதில் நான்காவது […]

#CentralGovernment 2 Min Read
Default Image

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக மகேந்திரன் வந்துள்ளார் – திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

தேர்தலுக்கு முன்பு மகேந்திரன் போன்றோர் இணைந்திருந்தால் எதிர்பார்த்த வெற்றி கிடைத்திருக்கும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேச்சு. சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய மகேந்திரன், 78 ஆதரவாளர்களுடன் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மநீம-வில் இருந்து விலகிய பத்மப்ரியாவும் திமுகவில் இணைந்துள்ளார். இந்நிகழ்வில், நீர்வளத்துறை அமைச்சரும், தி.மு.க பொதுச் செயலாளருமான துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, […]

#CMMKStalin 4 Min Read
Default Image

பிளாஸ்டிக் பைகளில் பறவைகள் கூடுகட்டும் அவலநிலை..!

பிளாஸ்டிக் பைகளை கொண்டு நீர்பறவைகள் கூடு கட்டுவதால் பறவையினங்கள் அழியும் அபாயநிலை ஏற்படும் என்று சுற்றுசூழல் ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் உதகை பகுதிகளில் தற்போது இருக்கும் காலநிலையால் பல்வேறு பகுதியிலிருந்து பறவைகள் வருவது வழக்கம். பறவைகள் வந்து கூடுகட்டி இனப்பெருக்கம் செய்யும். இந்த நேரத்தில் இந்தியன் ரோலர், கார்மரண்ட், யுரேஷியன் கூட், மலபார் விஸ்லிங் திரஸ், கிங்பிஷர் ஆகிய பறவைகள் இந்த இடத்திற்கு வரும். இந்த பறவைகள் பொதுவாக தாமரை தண்டுகள், […]

birds 3 Min Read
Default Image

#BREAKING: தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் மகேந்திரன்!!

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் திமுக தலைவர் முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகிய மகேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் திமுக இணைந்தார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான முக ஸ்டாலின் முன்னிலையில் அக்கட்சியில் இணைத்துக்கொண்டார். சட்டமன்ற தேர்தல் தோல்வியை அடுத்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் துணை தலைவர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகிய நிலையில், தற்போது தனது ஆதரவாளர்கள் 78 […]

#CMMKStalin 3 Min Read
Default Image

பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது-உயர்நீதிமன்றம் கேள்வி?

பத்திரப்பதிவுத்துறையில் ஊழலை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழ்நாட்டு அரசிற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை வில்லிவாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் கோபாலகிருஷ்ணன் சார் பதிவாளராக பணியாற்றினார். அப்போது சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையில் சோதனை நடத்தியுள்ளனர். அங்கு 70 ஆயிரம் ரூபாய் கணக்கில் வராத பணம் இருந்துள்ளதால் அதை பறிமுதல் செய்து, சார்பதிவாளராக இருந்த கோபாலகிருஷ்ணனை தூத்துக்குடிக்கு இடமாற்றம் செய்துள்ளனர். தற்போது இவர் மீண்டும் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அதனால் […]

chennai high court 4 Min Read
Default Image

திமுகவில் இணையவுள்ளதாக ம.நீ.மவின் முன்னாள் துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் அறிவிப்பு!

மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகிய மகேந்திரன் இன்று மாலை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைகிறார். சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாமல் படுதோல்வியடைந்ததை தொடர்ந்து அக்கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் விலகுவதாக செய்தியாளர்களை சந்தித்து அறிவித்திருந்தார். இதனால் அக்கட்சியின் மீது பல விமர்சனங்கள் எழுந்த நிலையில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். கட்சியின் மீதும், கமல்ஹாசன் மீதும் மகேந்திரன் சில குற்றச்சாட்டுகளை […]

#CMMKStalin 3 Min Read
Default Image

“அதிமுக புதிய துணை நிர்வாகிகள்” – ஓபிஎஸ் & ஈபிஎஸ் அறிவிப்பு..!

அதிமுக புதிய துணை நிர்வாகிகளை அறிவித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பு அமைப்புகளின் துணை நிர்வாகிகளாகக் கீழ்க்கண்டவர்கள் கீழ்க்காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகிய இருவரும் இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது கழக எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் – திரு. […]

#ADMK 3 Min Read
Default Image

“சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும்” – சீமான்..!

சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா,”சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான் அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து,நீட்தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,ஒளிப்பதிவு […]

#Seeman 9 Min Read
Default Image

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக அமைச்சர் பொன்முடி நியமனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தியமைத்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறுப்பினர்களும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#CMMKStalin 2 Min Read
Default Image

மேகதாது அணை: தமிழக அரசுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!!

மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து […]

#DMDK 3 Min Read
Default Image

வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் பணமோசடி..!-அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது..!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.35 லட்சம் பணம் மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சரின் உறவினரை கைது செய்துள்ளனர்.  அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜாவின் அக்காள் மகன் ரமேஷ்பாபு. இவர் சென்னை அசோக் நகரை சேர்ந்தவர். இவரது வயது 45. விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரனுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலமாக ரமேஷ்பாபு அறிமுகமாகியுள்ளார். அப்போது ரமேஷ் […]

#ADMK 6 Min Read
Default Image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள்!!

புதிதாக இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் முருகனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் […]

#BJP 3 Min Read
Default Image

கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரி…!

கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 14 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தான், இந்த கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கி வருகிறது. அதாவது, இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும்  செலுத்த தேவையில்லை எனக் கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவுக்கு இடைநிற்றல் அதிகரித்துள்ளதோடு, உயர்கல்வி சேர்க்கை குறைந்துள்ளது. […]

#Corona 3 Min Read
Default Image