தமிழ்நாடு

“சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும்” – சீமான்..!

சூர்யாவை தனிநபரென நினைத்து பாஜகவினர் அச்சுறுத்தவோ, மிரட்டவோ முனைந்தால் எதிர்விளைவுகள் மோசமாக இருக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சமீபத்தில் மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவுக்கு நடிகர் சூர்யா,”சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தை காப்பதற்காகத்தான் அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல” எனக் கருத்து தெரிவித்திருந்தார். இதனையடுத்து,நீட்தேர்வு, குடியுரிமை திருத்த சட்டம், ஒளிப்பதிவு திருத்த சட்ட வரைவு ஆகியவற்றிற்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நடிகர் சூர்யாவுக்கு எதிராக பாஜக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில்,ஒளிப்பதிவு […]

#Seeman 9 Min Read
Default Image

தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக அமைச்சர் பொன்முடி நியமனம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழ்நாடு உயர்கல்வி மன்றத்திற்கு புதிய தலைவர், துணைத் தலைவர் நியமனம் செய்து முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். மாநில உயர்கல்வி மன்றத்தை திருத்தியமைத்து தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத் தலைவராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செயல்படுவார் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயர்கல்வி மன்றத்தின் துணை தலைவராக பேராசிரியர் அ.ராமசாமியும், உறுப்பினர் செயலராக பேராசிரியர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட உறுப்பினர்களும் நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

#CMMKStalin 2 Min Read
Default Image

மேகதாது அணை: தமிழக அரசுக்கு, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தல்!!

மேகதாதுவில் அணை கட்டாமல் தடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும் என்றும் தமிழ் மக்களின் நலன் கருதி மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தரக்கூடாது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல் இல்லாமல், மேகதாதுவில் அணை கட்டுவதற்கு முன்பாகவே, தமிழக அரசு உறுதியான நடவடிக்கை எடுத்து […]

#DMDK 3 Min Read
Default Image

வேலை வாங்கி தருவதாக ரூ.35 லட்சம் பணமோசடி..!-அதிமுக முன்னாள் அமைச்சரின் உறவினர் கைது..!

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 18 பேரிடம் ரூ.35 லட்சம் பணம் மோசடி செய்த முன்னாள் அதிமுக அமைச்சரின் உறவினரை கைது செய்துள்ளனர்.  அதிமுக ஆட்சியில் சமூக நலத்துறை அமைச்சராக இருந்த சரோஜாவின் அக்காள் மகன் ரமேஷ்பாபு. இவர் சென்னை அசோக் நகரை சேர்ந்தவர். இவரது வயது 45. விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தை சேர்ந்த குணசேகரனுக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு பொன்னங்குப்பத்தை சேர்ந்த பாக்யராஜ் என்பவர் மூலமாக ரமேஷ்பாபு அறிமுகமாகியுள்ளார். அப்போது ரமேஷ் […]

#ADMK 6 Min Read
Default Image

மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்கள்!!

புதிதாக இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் முருகனுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை நேற்று விவாக்கம் செய்யப்பட்டு, 43 புதிய அமைச்சரகள் பதவியேற்றனர். இதில் தமிழகத்தை சேர்ந்த பாஜக மாநில தலைவர் எல் முருகன் மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு மீன்வளத்துறை, கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை, தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை உள்ளிட்ட பதவி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய இணை மத்திய அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்ட எல் […]

#BJP 3 Min Read
Default Image

கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் பாலிடெக்னிக் கல்லூரி…!

கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி. ஈரோடு மாவட்டம் சென்னிமலையில், 14 ஆண்டுகளாக இயங்கி வரும் ராஜீவ் காந்தி தனியார் பாலிடெக்னிக் கல்லூரி தான், இந்த கட்டணமில்லா கல்வி சேவையை வழங்கி வருகிறது. அதாவது, இந்த ஆண்டு கல்லூரியில் சேரும் மாணவர்கள் படிப்பை முடிக்கும் வரை மூன்று ஆண்டுகளுக்கு எந்த கட்டணமும்  செலுத்த தேவையில்லை எனக் கூறியுள்ளது. கொரோனா ஊரடங்கால் எப்போதும் இல்லாத அளவுக்கு இடைநிற்றல் அதிகரித்துள்ளதோடு, உயர்கல்வி சேர்க்கை குறைந்துள்ளது. […]

#Corona 3 Min Read
Default Image

ஓ.பி.எஸ். கூறுவது சாத்தான் வேதம் ஓதுவது போல் உள்ளது – அமைச்சர் ராஜ கண்ணப்பன்

கடந்த 10 ஆண்டுகளாக போக்குவரத்து ஊழியர்களை துன்புறுத்தியது அதிமுக அரசு என்று போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் ஒபிஸ்க்கு கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கலைஞர் அவர்களால், அனைத்தும் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் மீது என்றும் அக்கறை கொண்ட திமுக அரசால், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் உருவாக்கப்பட்டது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் ஆட்சிக்கு வந்த இரு மாதங்களில், கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக, […]

#OPanneerselvam 8 Min Read
Default Image

கடலூரில் தடுப்பூசி தட்டுப்பாடு-ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற மக்கள்..!

கடலூரில் தடுப்பூசி தட்டுப்பாட்டால் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மருத்துவமனைக்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றுள்ளனர்.  கொரோனா பரவல் நாட்டில் அதிகரித்து வந்ததை அடுத்து தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. தற்போது தீவிரமாக தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி நடந்துகொண்டிருக்கிறது. பொது மக்களும் ஆர்வத்தோடு தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் கடந்த 2 நாட்களாக தடுப்பூசி தட்டுப்பாடு இருந்து வருகிறது. இதனை அடுத்து இன்று கோவாக்ஸின் தடுப்பூசி கடலூர் அரசு மருத்துவமனையில் போடப்படும் என்ற […]

#Corona 4 Min Read
Default Image

சானிடைசர் பாட்டில் வெடித்து உயிரிழந்த 13 வயது சிறுவன்..!

திருச்சியில் சானிடைசர் பாட்டில் வைத்து அடுப்பு எரிக்க முயற்சித்ததில் பாட்டில் வெடித்து 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி இ.பி ரோடு, விறகுப்பேட்டை பகுதியில் வசிப்பவர் பாலமுருகன். இவரது மகன் 13 வயது ஸ்ரீராம். இந்த சிறுவன் 8 ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் இந்த சிறுவன் தனது நண்பர்களுடன் நேற்று முன்தினம் கூட்டாஞ்சோறு செய்து சாப்பிட எண்ணியுள்ளார். அதனால் முருகேசன் என்பவர் வீட்டிற்கு முன்னால் கற்களை அடுக்கி வைத்து […]

#Blast 3 Min Read
Default Image

3 ஆண்டுகள் வெண்டிலேட்டர் உதவியுடன் இருந்த சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை..! – எம்ஜிஎம் மருத்துவமனை

ரஷ்யாவை சேர்ந்த மாஸ்டர் நாசவ் டயனோவ் என்ற சிறுவனுக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனை மருத்துவர்கள்.  ரஷ்யாவை சேர்ந்த மாஸ்டர் நாசவ் டயனோவ் என்ற சிறுவனுக்கு பிறந்த இரண்டு மாதத்திலேயே நுரையீரல் காற்று பிரிக்கும் திறன் பாதிப்பு நோய்  கண்டறியப்பட்டது. இதனையடுத்து சிறுவன் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின் சிறுவனுக்கு தொண்டை வழியாக குழாய் பொருத்தி செயற்கை சுவாசம் அளிக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் சிறுவனுக்கு நுரையீரல் […]

Lung transplant surgery 6 Min Read
Default Image

“மக்களின் வயிற்றுப் பசி போக்கும் விவசாயிகள்; தங்கள் வயிற்றுப் பசியைப் போக்க வழியில்லை” – எடப்பாடி பழனிச்சாமி..!

மக்களின் வயிற்றுப் பசி போக்கும் விவசாயிகள் தங்கள் வயிற்றுப் பசியைப் போக்க வழி தெரியாமல் தவிக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களில் இடைத்தரகர்கள் குறுக்கீடின்றி நெல் கொள்முதலை தீவீரப்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளிடம் குறைகளை கேட்ட முதல்வர்: தமிழக முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் 6.7.2021 அன்று மாலை திருவாரூர் செல்லும் வழியில், […]

#ADMK 9 Min Read
Default Image

“தமிழ்நாடு அரசு பாட புத்தகம்;மத்திய அரசு என்பதற்கு பதில் இனி இவை இடம் பெறும்” – ஐ.லியோனி..!

தமிழ்நாடு அரசு பள்ளிப்பாட புத்தகங்களில் மத்திய அரசு என்பதற்கு பதில் ‘ஒன்றிய அரசு’ என இடம்பெறும் என்று தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் ஐ.லியோனி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் (Tamilnadu Textbook and Educational Services Corporation) தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்குப் பாடப் புத்தகங்களைத் தயாரித்து, அச்சிட்டு விநியோகம் செய்வதற்காகத் தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்ட ஒரு அரசு நிறுவனம் ஆகும். இக்கழகம் மூலம் அச்சிடப்படும் பாடநூல்கள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் […]

I.Leoni 4 Min Read
Default Image

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம்

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை மையம் தகவல். தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று நீலகிரி, கோவை, தேனி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், நாளை மறுநாள் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இரண்டு நாட்களுக்கு சில இடங்களில் லேசானது […]

#TNRain 2 Min Read
Default Image

மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி – தமிழக அரசுக்கு, உயர்நீதிமன்றம் உத்தரவு!!

வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.  கொரோனா ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கக் கோரி மூன்று அமைப்புகளின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 மட்டும் நிவாரண உதவி வழங்கப்படும்என்றும் கூடுதல் தொகை வழங்குவதாக எந்த உறுதியும் அளிக்கவில்லை எனவும் மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கு […]

#TNGovt 4 Min Read
Default Image

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் கோரிக்கை..!

தமிழகத்தில் தியேட்டர்களை திறக்க முதல்வரிடம் தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.  தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால் சில திரைப்படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இந்நிலையில் தமிழகத்தில் திரையரங்குகளை  திறக்க உத்தரவிடுமாறு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை வைத்துள்ளார்.  சென்னை தலைமைச்செய்யலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டானிடம் கொரோனா நிவாரண நிதியாக 50 லட்சத்தை தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் […]

CM MK Stalin 3 Min Read
Default Image

பட்டியல் சமூகத்தினருக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் – திருமாவளவன்

ஆளுநரிடம் பட்டியல் சமூகத்தினருக்கு துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.  தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அவர்கள் சந்தித்து பேசினார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், துணை வேந்தர் பதவிக்கு பட்டியல் சமூகத்தை சார்ந்தவர்களும் விண்ணப்பித்துள்ளார்கள். எனவே பட்டியல் சமூகத்தினருக்கும் துணைவேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைத்தோம். அதற்க்கு ஆளுநர் அவர்கள், இடஒதுக்கீடு என்பது துணை வேந்தர் பதவியில்  […]

#Thirumavalavan 4 Min Read
Default Image

பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து – முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்

பாஜக பற்றி நான் கூறிய கருத்து எனது சொந்த கருத்து என்று முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ளார். விழுப்புரத்தில் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், பாஜகவுடன் கூட்டணி அமைத்தது தான் அதிமுகவின் தோல்விக்கு காரணம். பாஜகவுடன் கூட்டணி வைக்காமல் இருந்திருந்தால் சிறுபான்மையினர் நமக்கு வாக்களித்திருப்பார்கள் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி நடந்து இருக்கும் எனவும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து பதில் கருத்து கூறிய தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் கே.டி […]

#AIADMK 5 Min Read
Default Image

படகிலிருந்து அமைச்சரை தூக்கி சென்று கரை சேர்த்த மீனவர்…!

படகிலிருந்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை தூக்கி சென்று கரை சேர்த்த மீனவர். திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காட்டில், உப்பங்கழி ஏரியில் மண்ணரிப்பு ஏற்படுவது தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ஆட்சியர் மற்றும் எம்எல்ஏக்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது 7 பேர் மட்டுமே பயணிக்கக் கூடிய படகில் அமைச்சருடன் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர். இதனால் பாரம் தாங்காமல் படகு ஒரு புறமாக சாய தொடங்கியதால், படகில் பயணம் மேற்கொண்டவர்கள் அச்சம் அடைந்தனர். இதனையடுத்து அமைச்சர் பயணித்த படகில் […]

#Fisherman 2 Min Read
Default Image

ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டிய அவசியம் இல்லை – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்திற்கு ஆக்சிஜன் தேவை இருப்பதால் ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டிய அவசியமில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. சென்னை மருத்துவ கல்லூரி மருத்துவமனையின் சீரமைக்கப்பட்ட விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் சமீபத்தில் தினந்தோறும் 3,000 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஏன் உடனடியாக மூட வேண்டும் என்கிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை உருவாகும் என மருத்துவ வல்லுநர்கள் கூறப்படும் நிலையில், […]

#MinisterMaSubramanian 3 Min Read
Default Image

“மோடி அரசு பதவியேற்ற பின்,மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக உள்ளது” -அமைச்சர் எல்.முருகன்..!

மோடி அரசு பதவியேற்ற பின் மீனவர்கள் மீதான தாக்குதல் ஜீரோவாக உள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக 2வது முறையாக கடந்த  ஆட்சியைப் பிடித்த பிறகு,மத்திய அமைச்சரவை முதல் முறையாக நேற்று விவாக்கம் செய்யப்பட்டு,புதிய அமைச்சரவையில் 43 பேர் இடம்பெற்றனர். இதனையடுத்து,தேர்வு செய்யப்பட்ட அமைச்சர்களுக்கான பதவியேற்பு விழாவானது டெல்லி குடியரசு தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. அந்த வகையில்,மத்திய அமைச்சராக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பதவியேற்றார்.அவருக்கு […]

#BJP 5 Min Read
Default Image