கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் ராய், சிபிஐ வழக்கு விசாரணை வளையத்தில் இருக்கிறார். சந்தீப் ராய் மீது அதே கல்லூரியில் உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக கடத்திய புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அந்த புகாரில் […]
சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஓய்வு நேரங்களில் முதல்வர், ஓட்டுனரில்லாத காரில் பயணிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. சிகாகோ பயணத்தின் போது, அங்குள்ள சாலையில் மகிழ்ச்சியாக தனியே சைக்கிள் பயணம் செய்யும் வீடீயோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் இளம் […]
கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோவை கோவை மெட்ரோ – செங்கதுரை : செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். வடக்கு கோவை – சரவணம்பட்டி : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 06.09.2024) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை காமராஜ் சாலை, பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர், ஹோப் கல்லூரி முதல் சிவில் ஏரோ, வி.ஆர்.புரம், என்.கே. பாளையம், கிருஷ்ணாபுரம், ஹவுசிங் யூனிட், சிங்காநல்லூர், […]
சென்னை : தமிழக அரசு தேசிய கல்வி கொள்கையை இன்னும் ஏற்கவில்லை. பி.எம் ஸ்ரீ திட்டத்தில் இன்னும் தமிழக அரசு சேரவில்லை. அதனால், தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு மத்திய அரசு அளிக்க வேண்டிய உட்கட்டமைப்பு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அரசியல் களத்தில் இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளது. தேசிய கல்வி கொள்கையை தமிழக அரசு ஏற்காதது குறித்து முன்னாள் பாஜக மாநில தலைவர் தமிழிசை சௌந்தராஜன், தமிழக அரசு மீதான தனது விமர்சனங்களை முன்வைத்தார். அவர் […]
சென்னை : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 2, குரூப் 2 ஏ முதல்நிலைத் தேர்வுகள் வரும் 14ம் தேதி நடைபெற இருக்கிறது. 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2 தேர்வுக்கு 7.93 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். செப்டம்பர் 14ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்பொழுது இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களது ஹால் டிக்கெட்டுகளை http://tnpsc.gov.in மற்றும் http://tnpscexams.in என்ற இணைய தளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்து […]
விருதுநகர் : ராமநாதபுரம் மாவட்டம் பெருமாள் தேவன்பட்டியை சேர்ந்த காளிகுமார் (வயது 28) எனும் சரக்கு வாகன ஓட்டுநர், கடந்த திங்களன்று சரக்கு வாகனத்தில் சீர்காழி நோக்கி சென்றுள்ளார். அப்போது திருச்சுழி அருகே 2 இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் , காளிகுமார் வாகனத்தை வழிமறிந்து அவரை அரிவாள் போன்ற கூறிய ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயமடைந்த காளிகுமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். படுகாயமுற்றதால் சிகிச்சை […]
சென்னை : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் நேற்று 6-ஆம் நாளுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில், பாரா தடகளத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாகத் […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக 17 நாட்கள் பயணமாக அமெரிக்காவிற்கு சென்றுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முன்னதாக சான் பிரான்சிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு நேற்று சிகாகோ சென்றடைந்தார். சான் பிரான்சிஸ்கோ போலவே சிகாகோவிலும் உள்ள தமிழர்கள் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிரான்சிஸ்கோவில் தொழில் முதலீட்டாளர் மாநாடு, அங்குள்ள தமிழர்களுடனான சந்திப்பு உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஓய்வு இடையில் ஜாகுவார் நிறுவனத்தின் ஓட்டுநர் இல்லாத காரில் பயணம் செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அதே போன்று, தற்போது […]
சென்னை : பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி குடிசை மாற்றுவாரிய கட்டடப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. அப்போது, சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர். […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 05.09.2024) வியாழன் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்பிரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமிநகர், […]
திருச்சி : ஆப்பிரிக்க நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு சுகாதார அவசரநிலையை அறிவித்துள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் குரங்கம்மை குறித்த சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகள் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளன. மத்திய சுகாதாரத்துறை ஏற்கனவே குரங்கம்மை தடுப்பு நடவடிக்கைகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி மாநில அரசுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது. தமிழகத்திலும் பன்னாட்டு […]
கிருஷ்ணகிரி : பர்கூர் அருகே கந்திகுப்பம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியாக போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன் உட்பட பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், பயிற்சியாளர் உட்பட 11 பேர் கைதாகினர். இதே போன்று சிவராமன் வேறு எங்கெல்லாம் போலியாக என்சிசி முகாம் நடத்தினார் என போலீசார் மேற்கொண்ட விசாரணையில், கிருஷ்ணகிரியில் […]
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மிகவும் முக்கிய கேள்வியாக ‘மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு 17 நாட்கள் பயணமாக சென்றுள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் உள்ள பன்னாட்டு தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து, அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சிகாகோ வந்துள்ளார். சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோவில் முதலமைச்சருக்கு அங்குள்ள அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான் பிராசிஸ்கோவில் முதலீட்டாளர் மாநாடு, ஆப்பிள், […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டில் தொழில்வளர்ச்சி மேம்பட பன்னாட்டு தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுக்கும் வகையில் இந்த பயணத்தை முதல்வர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக சான் பிராசிஸ்கோ சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆரத்தி எடுத்து தமிழர் பரம்பரியதோடு அன்புடன் வரவேற்றனர். அதன் பின்னர், சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் முதலமைச்சர் கலந்து கொண்டு பன்னாட்டு தொழில் நிறுவன […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 04.09.2024) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் பெரம்பலூர் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், […]
சென்னை : கடந்த மாதம் (ஆகஸ்ட் 9) கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரையில் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படாத நிலையில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய […]