சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 04.09.2024) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை தெலுங்குபாளையம், பிள்ளையப்பன்பாளையம், கிருஷ்ணகவுண்டபுதூர், அண்ணாமலை நகர், வேலாயுதன்பாளையம், செம்மணிசெட்டிபாளையம், சந்தியா நகர் முதலிபாளையம், பூனாண்டம்பாளையம் பெரம்பலூர் திருமந்துறை, பெருமாத்தூர், வட்டக்கலூர், அத்தியூர் சின்னார், எரியு,.முருக்கன்குடி, வலிகண்டபுரம், […]
சென்னை : கடந்த மாதம் (ஆகஸ்ட் 9) கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரையில் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படாத நிலையில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய […]
சென்னை : ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கனமழை பெய்து வருவதன் விளைவாக ரயில் தண்டவாளங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பயணிகள் பலரும் அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். இப்படிப் பட்ட ஒரு சூழ்நிலையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள் தங்களது ரயில் ரத்தாகி உள்ளதா அல்லது அந்த ரயிலின் நேரம் மாற்றப் பட்டுள்ளதா? எனக் குழப்பத்திலிருந்து வருகின்றனர். இந்த குழப்பத்தை நீக்குவதற்கும், பயணிக்கும் ரயில் […]
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் (TNPSC ) நடத்தப்படும் குரூப் 1 முதல் நிலை தேர்வு முடிவுகள் இன்று மாலை வெளியாக இருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே தற்பொழுது வெளியாகியுள்ளது. துணை ஆட்சியர், டி.எஸ்.பி. உள்ளிட்ட 90 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஜூலை மாதம் நடைபெற்றது. குரூப் 1 தேர்வு தமிழ்நாடு முழுவதும் 797 மையங்களில் 2.38 லட்சம் பேர் எழுதினர். அதன் முடிவு இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு நடந்த […]
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த அரசியல் நகர்வாக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான். இது தொடர்பாக கடந்த, ஆகஸ்ட் 28-ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த அனுமதிக்கேட்டு, விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். முன்னதாக, செப்டம்பர் […]
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. சென்னை வடசென்னை : அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III வரை, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், […]
சென்னை : தமிழ்நாட்டில் பருவமழை தொடங்க உள்ளதால், அதற்கு முன்னதாக தொற்று நோய் தடுப்பு நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகிறார்கள். குறிப்பாக டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு அதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை தெரிவித்தார். அவர் கூறுகையில், ” கடந்தாண்டு தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக டெங்கு பாதிப்பு என்பது பெரியளவில் இல்லை. 80 நாடுகளில் டெங்கு […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 03.09.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை எம்.ஜி.சி.பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மண்ணிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர் சில பகுதிகள், ஊரைக்கல்பாளையம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். சென்னை அயப்பாக்கம் TNHB கட்டம் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். கடந்த வாரம் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பங்கேற்ற முதலமைச்சர் அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் முக்கிய அதிகாரிகள் மத்தியில் உரையாற்றி, தமிழகத்தில் தொழில் தொடங்க எதுவாக உள்ள சூழல் பற்றி விவரித்தார். இதனை அடுத்து, முதல் நாளிலேயே தமிழ்நாட்டில் முதலீடு செய்ய 6 முன்னணி பன்னாட்டு நிறுவனங்களுடன் சுமார் 900 கோடி ருபாய் முதலீட்டில் தோராயமாக 4000 பேருக்கு வேலை கிடைக்கும் […]
வாழை படம் வெளியான நாளிலிருந்து இப்போது வரை நம்மளைக் கண்ணீரில் கரைய வைத்துக்கொண்டு, இருக்கிறது என்றே சொல்லலாம். இயக்குனர் மாரி செல்வராஜ் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த மிகவும் சோகமான சம்பவத்தைத் தழுவி ‘வாழை’ படத்தினை இயக்கி இருக்கிறார். இந்த படம் மக்களைத் தாண்டி பல எமோஷனலான படங்களை இயக்கும் இயக்குநர்களுக்கே தாக்கத்தை உண்டு செய்துள்ளது. குறிப்பாக, சேது, பிதாமகன், அவன் இவன், போன்ற எமோஷனலான படங்களை இயக்கிய இயக்குனர் பாலவே வாழை படத்தைப் பார்த்துவிட்டு கண்ணீரைக் கட்டுப்படுத்தி, […]
சென்னை : ஃபார்முலா 4 கார் பந்தயம் சென்னை தீவுத்திடலில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 31) மற்றும் நேற்று (செப்டம்பர் 1) ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிகழ்வு கடந்தாண்டு அறிவிக்கப்பட்டு இருந்தது. அப்போது டிசம்பர் மாத கனமழை காரணமாக போட்டிகள் நடைபெறாமல் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர், ஒருவழியாக ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த போட்டிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்றது. இந்த போட்டிக்கான உரிய […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயத்திற்கு சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பு (F.I.A) முதற்கட்ட அனுமதி அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னை தீவுத்திடலில் இன்றும், நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெறும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது. அதற்கான முன்னேற்பாடுகளை தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பும் இணைந்து மேற்கொண்டன. ஆனால், இந்த ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த சர்வதேச ஆட்டோமொபைல் கூட்டமைப்பான FIA (International Federation of Automobile)விடம் இருந்து பாதுகாப்பு […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடத்த FIA தர சான்று பெற வேண்டும் என இரவு 8 மணி வரை கால அவகாசம் அளித்துள்ள்ளது சென்னை உயர்நீதிமன்றம். சென்னையில் இன்றும் நாளையும் ஃபார்முலா 4 கார் ரேஸிங் பந்தயம் நடைபெற உள்ளது. தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. சென்னை தீவுத்திடலை சுற்றி 3.5 கிமீ தூரம் அளவுக்கு 19 திருப்பங்களை கொண்ட இரவு நேர […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 02.09.2024) திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய இடங்களில் மரம் வெட்டுதல் மற்றும் பராமரிப்பு பணியின் காரணமாக 9 மணி […]
சென்னை : சென்னை – நாகர்கோவில், மதுரை – பெங்களூரு மற்றும் மீரட் – லக்னோ ஆகிய மூன்று வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்களை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதில், தமிழக மக்களின் நீண்டநாள் எதிா்பாா்ப்புக்கு மத்தியில், சென்னை எழும்பூா்- நாகா்கோவில், மதுரை – பெங்களூரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், அதிந வீன வசதிகளுடன் உருவாக்கப்பட்ட வந்தே பாரத் […]
சென்னை : ரேஷன் கடைகளில் ஆகஸ்ட் மாதத்திற்கான துவரம் பருப்பு, பாமாயிலை செப்டம்பர் 5ம் தேதி வரை கார்டுதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என உணவுப் பொருள் வழங்கல் துறை இயக்குநர் அறிவித்துள்ளார். ஏற்கனவே, தமிழகத்தில் இன்று அனைத்து ரேஷன் கடைகளும் செயல்படும் என, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. மாதத்தின் கடைசி பணி நாளில், அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே,ரேஷன் கடைகளில் இம்மாதத்திற்கான பொருட்களை இதுவரை […]
திருச்சி : தேசிய தொழில் நுட்பக் கழக விடுதியில் பணியாற்றி வந்த பெண் காப்பாளர் பேபி ராஜினமா செய்துள்ளார். திருச்சி மாவட்டம் துவாக்குடி பகுதியில் அமைந்துள்ள தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில், மாணவி ஒருவர் கடந்த ஆக 29-ஆம் தேதி, பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகியுள்ளார். விடுதியில், இன்டர்நெட் கனெக்டின் பழுது ஏற்பட்டிருந்த காரணத்தால் அந்த விடுதி நிர்வாகம், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் பணியாளரைச் சரி செய்து கொடுப்பதற்காக அழைத்துள்ளனர். அப்போது வேலை செய்துகொண்டிருந்த […]
சென்னை : தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நேற்று முதல் நாளில் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அந்த மாநாட்டில், பன்னாட்டு தொழிலதிபர்கள், தொழில் நிறுவன உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து நேற்று முதல் நாளில் 6 முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. இதன் மூலம் ரூ.900 கோடி அளவில் தமிழகத்துக்கு முதலீடு கிடைத்துள்ளது என்றும், சுமார் 4000க்கும் […]
திருச்சி : விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக வருத்தம் தெரிவித்து உள்ளது என்.ஐ.டி நிறுவனம். திருச்சியில் உள்ள என்ஐடி விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) காலை ஒப்பந்த ஊழியர்கள் 5 பேர் இணையதள சேவை அளிப்பதற்காகச் சென்றுள்ளனர். அப்போது ஒரு அறையில் மாணவி தனியாக இருக்கும் போது அங்கு வந்த ஊழியர்களில் ஒருவரான கதிரேசன் என்பவர் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியான அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் சாதுரியமாகச் சுதாரித்துக் கொண்ட அந்த […]
சென்னை : டிஎன்பிஎஸ்சி தொழில்நுட்ப பணிகளுக்கான தேர்வு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 கடந்த வாரம் வெளியிட்ட 2024-ம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையில் புதிய தேர்வுக்கான அறிவிப்பு ஒன்று இடம்பெற்றது. அதன்படி, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) 105 காலிப்பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவை (நேர்முகத் தேர்வு கொண்ட பணிக்கான) அறிவிப்பு வெளியாகியுள்ளது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் இப்பணிக்கான ஆட்கள் […]