சென்னை : அடுத்த வாரம் கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், விஜய்சீரடி சாய்பாபா கோயிலுக்கு சென்றுள்ளார். ‘GOAT’ படத்தின் வெளியீடு மற்றும் அரசியல் மாநாடு நெருங்கி வருவதால், விஜய் மற்றும் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றன. அடுத்த வாரம் (செப்.5) ‘தி கோட்’ திரைப்படம் வெளியாக உள்ளது. அதைத்தொடர்ந்து, தவெக கட்சி மாநாடும் செப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனிடையே, கடந்த 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் கட்சி […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும் வகையில் இந்த 17 நாட்கள் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்படியாக இன்று நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 பன்னாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. சான் பிராசிஸ்கோவில் […]
சென்னை : ஃபார்முலா 4 கார் ரேஸிங் நடைபெற இருப்பதால் இன்று முதல் செப்டம்பர் 1ஆம் தேதி வரையில் சென்னையில் போக்குவரத்துத்துறை மாற்றம் செய்யப்படுகிறது என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறை அமைச்சகம் மற்றும் தனியார் அமைப்பு இணைந்து சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயத்தை நடத்துகிறது. சென்னை தீவுத்திடலைச் சுற்றி 3.5 கி.மீ சுற்றளவில் இதற்கான பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கார் பந்தயம் நாளை ஆகஸ்ட் 31 பிற்பகல் 2.30 மணியளவில் தொடங்கி […]
சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை மேற்படிப்பிற்காக லண்டன் சென்றுள்ளதால், மாநில கட்சிப் பணிகளை மேற்கொள்ள 6 பேர் கொண்டக் குழுவை கட்சித் தலைமை நியமித்துள்ளது. பாஜக மாநிலத் தலைவராக செயல்பட்டு வரும் அண்ணாமலை, தானது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் (செப்டம்பர், அக்டோபர், நவம்பர்) படிக்க உள்ளார். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை 3 மாத காலம் அரசியலில் இருந்து […]
திருச்சி : என்.ஐ.டி விடுதியில் மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சி மாவட்டம் துவாக்குடியில் அமைந்திருக்கும் தேசிய தொழில் நுட்பக் கழக (என்ஐடி) விடுதியில் நேற்று (வியாழக்கிழமை) மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நேற்று இரவு முழுவதும் விடிய விடிய மாணவ, மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். என்ஐடி மாணவிகள் விடுதி […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்காக அமெரிக்காவில் பன்னாட்டு நிறுவனங்களான நோக்கியா, பேபால், மைக்ரோசிப் உள்ளிட்ட நிறுவனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன. தமிழ்நாடு தொழில்வளர்ச்சியில் முன்னேற்றம் காண, வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்த தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 2030ஆம் ஆண்டுக்குள் மாநிலத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து அதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுவருகிறார். முன்னதாக, துபாய், சிங்கப்பூர், ஜப்பான் […]
சென்னை : நா.த.க ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆவடி காவல் ஆணையரகத்திற்கு மாநில எஸ்.சி, எஸ்.டி ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பரப்புரையின் போது தமிழக முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியை ‘சண்டாளன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தி இழிவுபடுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகன் பாடல் பாடி இருந்தார். இது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், இதன் விளைவாகச் […]
சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. மேற்கு தாம்பரம் புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) மங்களபுரம் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். […]
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 31.08.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. சென்னை புதிய ஸ்டேட் பாங்க் காலனி, கக்கன் தெரு, லோகநாதன் தெரு, சர்வீஸ் சாலை (முடிச்சூர் பாலம்) படேல் நகர், ஜிஎஸ்டி சாலையின் ஒரு பகுதி (இரும்புலியூர்) […]
மதுரை : எய்ம்ஸ் எப்போது கட்டிமுடிக்கப்டும் என்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை செயலாளர் எழுத்துப்பூர்வமாக பதில் அளிக்க வேண்டுமென மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படுவதாக மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அறிவித்தது. பின்னர், 2018ஆம் ஆண்டு மதுரை தோப்பூர் பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பிரதமர் மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது. அதனை அடுத்து , தற்போது (2024) வரையில் மதுரை எய்ம்ஸ் கட்டிமுடிக்கப்படவில்லை. இதுகுறித்து, மாநில அரசு (திமுக) பலமுறை மத்திய அரசிடம் […]
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அமெரிக்காவில் உள்ள சான் பிராசிஸ்க்கோவிற்கு சென்றுள்ளார். அவருக்கு அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் அமெரிக்க பயணமாக சான் பிராசிஸ்கோ மற்றும் சிகாகோ சென்றுள்ளார். நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் எமிரேட்ஸ் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் வழியாக சான் பிராசிஸ்க்கோ புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அவர் நேற்று அதிகாலை 2 மணியளவில் துபாய் சென்றடைந்தார். பின்னர், துபாயில் இருந்து […]
டெல்லி : 234 புதிய நகரங்களுக்கான தனியார் எஃப்எம் ரேடியோவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் 234 புதிய நகரங்களில் தனியார் FM ரேடியோ சேவைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதில், தமிழ்நாட்டில் குன்னூர், திண்டுக்கல், காரைக்குடி, கரூர், கன்னியாகுமரி உள்ளிட்ட 11 நகரங்களில் ஒப்புதல் அளிக்கப்பட்டள்ளது. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இது பற்றி கூறுகையில், எஃப்எம் சேனலின் வருடாந்திர உரிமக் கட்டணத்தை (ஏஎல்எஃப்) ஜிஎஸ்டி தவிர்த்து மொத்த வருவாயில் […]
சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் வெள்ளிக்கிழமை (30-08-2024) அதாவது அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை துரைநல்லூர் : துரைநல்லூர், ஆரணி, கவரப்பேட்டை, சோம்பட்டு, ராளபாடி, சின்னம்பேடு ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை : சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் திமுக எம்பி ஜெகத்ரட்சகனுக்கு அமலாக்கத்துறை ரூ.908 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் அரக்கோணம் தொகுதி திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகனுக்கு, ரூ.908 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கடந்த சில மாதங்களுக்கு முன் ஜெகத்ரட்சகன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தியது. அதன் அடிப்படையில், ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல், சிங்கப்பூர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதில் சட்டவிதிகள் […]
மதுரை : மதுரையில் புத்தக கண்காட்சி செப்.6ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். மதுரை மாவட்டம் தல்லாகுள தமுக்கம் மைதானத்தில் உள்ள மதுரை மாநாட்டு மையத்தில், மாவட்ட நிர்வாகம் சார்பாக, வருகின்ற 06.09.2024 முதல் 16.09.2024 வரையில் புத்தகத் திருவிழா 2024 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார். 11 நாட்கள் புத்தகக் காட்சி நடைபெறும் இந்த புத்தகக் காட்சிக்கு 200க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டு லட்சக்கணக்கான […]
சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் செயல்படும் தனியார் பள்ளி ஒன்றில், இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானார். இந்த புகாரில் முக்கிய குற்றவாளியான போலி என்சிசி பயிற்சியாளர் சிவராமன், தவறை மறைக்க முயற்சித்த பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என […]
விக்கிரவாண்டி : த.வெ.க மாநாடு நடத்த அனுமதிக்கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் முதல் மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பதற்காக தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், கட்சியின் கொடி அறிமுக விழாவில் விஜய் குறைவான நேரம் மட்டுமே பேசினார். எனவே, பேச வேண்டிய பல விஷயங்களை கட்சியின் முதல் மாநாட்டில் பேசுவார் […]
சென்னை : தமிழ்நாடு அரசின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் இருமொழி கல்விக்கொள்கை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மாநில அரசுகளின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதி வழங்கி வருகிறது. […]
சென்னை : 150 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக சென்னையில் 150 அதிநவீன இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட சொகுசு பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். சென்னை பல்லவன் சாலையில் உள்ள பேருந்து பணிமனையில் ரூ.90.52 கோடி மதிப்பில், BS VI 150 புதிய பேருந்துகள் சேவை தொடங்கி வைக்கும் நிகழ்வில், அமைச்சர்கள் […]
சென்னை : எந்த துறையாக இருந்தாலும் பாலியல் தொல்லைகளால் பாதிக்கப்பட்டவர்கள் புகாரளிக்க முன்வர வேண்டும் என பாஜகவை சேர்ந்த குஷ்பு வேண்டுகோள் வைத்துள்ளார். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் அத்துமீறல்கள் குறித்த ஹேமா கமிஷன் அறிக்கை வெளியானதிலிருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் தொந்தரவு பற்றி வெளிப்படையாகவே பேசியும், புகார் அளித்தும் வருகிறார்கள். பாலியல் புகார் எதிரொலியாக, மலையாள நடிகர் சங்கமும் கலைக்கப்பட்டது. இந்த சூழலில், சக நடிகைகள் மற்றும் அரசியல் தலைவர்கள் […]