சென்னை : பிரபல நடிகை ரேகா நாயரின் கார் மோதி மஞ்சன் (வயது 55) என்பவர் உயிரிழந்தார். சென்னை ஜாஃபர்கான்பேட்டையில் உள்ள அன்னை சத்யா நகர் பகுதியைச் சேர்ந்தவர் மஞ்சன். இவர் நேற்று இரவு ஜாஃபர்கான்பேட்டை சாலையில் படுத்துக்கிடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது, அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாலையில் படுத்திருந்த மஞ்சன் மீது ஏறி இறங்கியுள்ளது. கார் ஏறிய வேதனையில் மஞ்சன் அலறியுள்ளார். அவருடைய அலறல் சத்தம் கேட்டும் கூட கார் நிற்காமல் வேகமாகச் […]
சென்னை : நேற்றிரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவிற்கு பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்றிரவு 11 மணியளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார். அவர் புறப்பட்ட சில நிமிடங்களுக்கு முன்னர் முதல்வர் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் செய்தி இ-மெயில் வாயிலாக வந்துள்ளது. இந்த விமான நிலைய ஆணையத்திற்கு வந்த இந்த மிரட்டல் செய்தி பற்றிய தகவலானது விமானம் புறப்பட்ட பின்னர் தான் சென்னை […]
சென்னை : நாளை முதல் செப்டம்பர் 12ஆம் தேதி வரையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள உள்ள பயண விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு அமெரிக்காவுக்கு புறப்படுகிறார். அவர் அங்கு முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு, தொழில் நிறுவன முதலீட்டர்களுடன் ஆலோசனை நடத்தியும் தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்க்க உள்ளார். இதற்கு முன்னதாகவே, தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமெரிக்க பயணம் மேற்கொண்டு முதல்வர் வருகைக்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டுள்ளார். இன்று (ஆகஸ்ட் 27) […]
கோவை : அண்ணாமலையை அரசியலில் ஓர் ஆளாகவே மதிக்கவில்லை. அதனால் தான் அவருக்கு எதிராக நாங்கள் எதுவும் செய்யவில்லை என கோவையில் சிங்கை ராமச்சந்திரன் கூறியுள்ளார். அதிமுக மற்றும் பாஜகவினர் இடையேயான வார்த்தை மோதல் என்பது தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்கு எப்போது தான் முற்றுப்புள்ளி அல்லது ஓர் இடைவெளி இருக்கும் என்று காத்திருந்த வேளையில் தான், இன்று இரவு அண்ணாமலை வெளிநாடு செல்வதாக அறிவிப்பு வெளியானது. இதனால் இந்த வார்த்தை மோதல் சற்று குறையும் எனக் […]
சென்னை : நடிகர் விஜய் அறிமுகப்படுத்தியுள்ள கட்சி கொடிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் ஆணையத்திடம் பகுஜன் சமாஜ் கட்சியினர் மனு அளித்துள்ளனர். நடிகரும், அரசியல்வாதியுமான விஜய், தமிழக வெற்றிக் கழகக் கட்சி தொடங்கியதிலிருந்து தமிழக அரசியலில் ஓர் பரபரப்பை உண்டாக்கியுள்ளது என்றே சொல்லலாம். இதனை பலர் வரவேற்றாலும், சிலர் குறிப்பிட்ட கருத்துக்களோடு எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர். கடந்த 22ம் தேதி சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் தனது கட்சியின் கொடி மற்றும் கொடியின் பாடலை […]
சென்னை : லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் 3 மாதங்கள் படிக்க உள்ளதாகவும், அதற்காக இன்று இரவு வெளிநாடு செல்ல உள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளர். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது மேற்படிப்பிற்காக இங்கிலாந்து செல்ல உள்ளதாகவும் அதனால் 3 மாதங்கள் அரசியலில் இருந்து சிறிய இடைவெளி எடுக்கப்போவதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகி வந்தன. அதனை இன்று அண்ணாமலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இன்று சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர்,” லண்டனில் உள்ள […]
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 29.08.2024) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை நல்லட்டிபாளையம், மேட்டுபாவி, பனப்பட்டி பகுதி, கொத்தவாடி கடலூர் ஊமங்கலம், அரசகுழி, முத்தனை, கோபாலபுரம், இருப்பு, சாத்தமங்கலம் செம்மங்குபம், சிப்காட் பகுதி, ஓபூண்டியாங்குப்பம், ஆலப்பாக்கம், குடிகாடு மேலப்பாளையூர், […]
மதுரை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பற்றி பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவதூறாக பேசியதாக காவல் ஆணையர் அலுவலகத்தில் அதிமுகவினர் புகார் அளித்துள்ளனர். கடந்த சில நாட்களாகவே அதிமுக மற்றும் பாஜக அரசியல் தலைவர்களிடையே வார்த்தை மோதல் என்பது அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்த மோதலானது, மேடைப் பேச்சுக்களில் கூட சில கடுமையான சொற்களை பேசும் அளவுக்கு வலுத்து வருகிறது. இதனால் உட்கட்சியில் இருப்பவர்களே “கடுமையான சொற்களை பயன்படுத்த வேண்டாம்” என அறிவுரை கூறி […]
சென்னை : குடும்ப சூழ்நிலை காரணமாக மூடை தூக்கும் வேலைக்கு செல்வதாக மாணவன் கூறிய வீடியோ வைரலான நிலையில், தவெக தலைவர் விஜய் அவருக்கு தேவையான உதவிகளை செய்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நியா நானா’ நிகழ்ச்சியில் சமீபத்தில் வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவ, மாணவிகளின் தங்களுடைய வாழ்வில் சந்திக்கும் சிரமங்கள் மற்றும் வலிகள் குறித்த விவாதம் நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியில் கோவில்பட்டியைச் சேர்ந்த ஒரு மாணவன் தனது அம்மாவுடன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார். […]
சென்னை : நடிகை நமீதாவிடம் இந்து மத சான்றிதழ் கேட்ட விவகாரம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு இன்று செய்தியாளர்களிடம் கூறினார். தமிழகத்தில் உலகப்புகழ் பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு, நடிகை நமீதா மற்றும் அவரது கணவர் ஒன்றாக சாமி தரிசனம் செய்ய நேற்று சென்றிருந்தனர். அப்போது அங்குள்ள அதிகாரி ஒருவர் நமீதா மற்றும் அவரது கணவரிடம், அவர்கள் இந்து மதத்தை […]
திருச்சி : அதிமுக மற்றும் தவெக-வுடன் கூட்டணியா? நடப்பதைப்பற்றி பேசுங்கள் என நிருபரின் கேள்விக்கு நகைப்புடன் பதிலளித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான். அரசியல் என வந்துவிட்டாலே அரசல் புரசலாக புரளி கிளம்புவது வழக்கம். அதற்கு தூபம் ஏற்றுவதுபோல் கட்சி தலைவர்களின் பேச்சும் சில நேரங்களில் சிதறித்தான் விடுகிறது. அந்த வகையில், சீமான் விஜயின் தவெக கட்சி மற்றும் கூட்டணி குறித்த கேள்விகளுக்கு பதில் அளித்த விதம், கூட்டணிக்கான சம்மதத்தை தெரிவிக்கும் தோணியில் இருந்ததாக அரசியல் […]
சென்னை : விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில், தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. நெற்றியை தினம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாளை தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாடினர். அவரது நினைவாக கோயம்பேட்டில் இருக்கும் தேமுதிக தலைமை அலுவலகத்தில், அவரது முழு உருவச் சிலையை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்துவைத்தார். இதனிடையே, கடலூரில் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவில் தேமுதிக நிர்வாகி வெங்கடேசன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டம் […]
சென்னை : தலைவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்க வேண்டும். வார்த்தைகள் கடுமையாக இருக்க வேண்டாம் என தமிழிசை சவுந்தராஜன் கருத்து கூறியுள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரே கூட்டணியில் இருந்து கொண்டு மேடைகளை பகிர்ந்து கொண்ட அதிமுக – பாஜக தலைவர்கள், தற்போது, கடுமையான வார்த்தை மோதல்களில் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த மோதல்கள் மேடைகளில் கடுமையான சொற்களை வீசும் அளவுக்கு தற்போது விமர்சனங்கள் முற்றியுள்ளது. இ.பி.எஸ் விமர்சனம் : அண்மையில் அதிமுக பொதுச்செயலாளர் […]
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 28.08.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மிலாம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம். பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வேதவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திர்பாளையம். குனியமுத்தூர், சுந்தராபுரம் கட்சி, கோபித்தூர், புட்டுவிக்கி கரூர் சிட்கோ, […]
சென்னை : ஒரு சில பராமரிப்புப் பணிகளுக்காக சென்னையில் உள்ள சில இடங்களில் வரும் செவ்வாய்க்கிழமை (27-08-2024) அதாவது நாளை காலை முதல் மாலை வரை மின் தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. வடசென்னை கொளத்தூர் : ஜெயராம் நகர், வெங்கடேஸ்வரா நகர், தென்பழனி நகர், ஆதி வடக்கு, அம்பேத்கர் நகர், ராஜன் நகர், சுப்பிரமணியபுரம், அசோகா அவென்யூ, கம்பர் நகர், புதர் தெரு, ஜி.கே.எம்.காலனி (பகுதி), ராஜ் ராஜேஸ்வரி நகர் ஆகிய […]
சென்னை : துரைமுருகன் என்னுடைய நீண்ட கால நண்பர் அவர் என்ன சொன்னாலும் எனக்கு வருத்தம் கிடையாது என நடிகர் ரஜினிகாந்த் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு எழுதிய கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் அமைச்சர் துரைமுருகன் பற்றி பேசிய விஷயம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. விழாவில் பேசிய அவர் ” ஒரு கட்சியில் தலைவர் மறைந்த பிறகு […]
சென்னை : வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்கிறது. நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்க கட்டணமானது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் சுங்கச் சாவடிகளில் இருந்து வசூல் செய்யப்படுகிறது. இருசக்கர வாகனங்கள் தவிர்த்து இலகுரக […]
பழனி : இரண்டாம் நாளாக களைகட்டும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் இரண்டாவது இன்றும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அறநிலையத்துமுத்தமிழ் முருகன்றை அதிகாரிகள், நீதியரசர்கள், சமயப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், ஆன்மீக அன்பர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள், முருக பக்தர்கள் கழகத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு […]
கடலூர் : தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலியானார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு சிலையை திறந்து வைத்தார். இதனிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் […]