பழனி : இரண்டாம் நாளாக களைகட்டும் ‘முத்தமிழ் முருகன்’ மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்து சமய அறநிலையத்துறை சார்பில், பழனி அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரியில் இரண்டாவது இன்றும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு கோலாகலமாக நடைபெற்று வருகிறது. நேற்று தொடங்கிய இந்த மாநாட்டில் அறநிலையத்துமுத்தமிழ் முருகன்றை அதிகாரிகள், நீதியரசர்கள், சமயப் பெரியவர்கள், தமிழறிஞர்கள், ஆன்மீக அன்பர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், அரசு அலுவலர்கள், முருக பக்தர்கள் கழகத்தினர் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, […]
சென்னை : அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டணம் உயர்வு இல்லை என அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். அண்ணா பல்கலை.யின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக்கட்டணம் 50% வரை உயர்வதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. அதன்படி, தன்னாட்சி கல்லூரிகளில் பட்டப்படிப்பு சான்றிதழ், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் கட்டணமும் ரூ.1000-ல் இருந்து ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது. தன்னாட்சி பெறாத கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுக் கட்டணம், இளநிலை பட்டங்களுக்கு ரூ.150ல் இருந்து ரூ.225 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பட்டங்களுக்கு […]
கடலூர் : தேமுதிக கொடிக்கம்பம் நடும்போது மின்சாரம் பாய்ந்து தேமுதிக நிர்வாகி பலியானார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் தேமுதிகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு சிலையை திறந்து வைத்தார். இதனிடையே, கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் […]
சென்னை : விஜயகாந்தின் பிறந்தநாள் விழாவில் திடீரென மயக்கமடைந்த சண்முக பாண்டியன் கீழே விழுந்தார். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. இதனை முன்னிட்டு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்தின் உருவச்சிலை திறப்பு விழா நடந்தது. இதில், விஜயகாந்தின் இளைய மகனும், நடிகருமான சண்முக பாண்டியன் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்த் உருச் சிலை திறப்பு விழாவின் போது, நிர்வாகிகள் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது. இந்த கூட்ட […]
சென்னை : மறைந்த ‘கேப்டன்’ விஜயகாந்தின் பிறந்தநாளை ஒட்டி, தேமுதிக தலைமை அலுவகலத்தில் அவரது உருவ சிலையை திறந்து வைத்தார் பிரேமலதா விஜயகாந்த். மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 72வது பிறந்தநாள் இன்று. மதுரையில், ஆகஸ்ட் 25, 1952ம் ஆண்டு அழகர்சாமி-ஆண்டாள் தம்பதிக்கு பிறந்த அவர், தமிழ் சினிமாவின் கேப்டனாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். அதுமட்டுமின்றி அரசியலிலும் தனக்கென ஒரு சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி கருப்பு எம்ஜிஆர் என பெயரெடுத்தவர். குறிப்பாக, அனைவருக்கும் பசியாற்றும் குணம் கொண்ட அவரது புகழ், […]
சென்னை : வாழை படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ் வீட்டுக்கே நேரில் சென்று வாழ்த்தினார் தொல். திருமாவளவன். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ‘வாழை’ படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரிய வரவேற்பை பெற்றது. முக்கிய பிரமுகர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்டோர் இப்படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விடாத குறையாக புகழ்ந்து, தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் தொடர்ந்து தெரிவித்த வண்ணம் உள்ளார்கள். அந்த வரிசையில், திருமாவளவன் வாழை படத்தை பார்த்துவிட்டு, இயக்குனர் மாரி செல்வராஜ் […]
திருச்சி : வெள்ளாளர் சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் விஜய் குடும்பத்தில் இருக்கிறார்கள். எங்கள் சமுதாயத்தைச் சார்ந்த ஒருவர் கட்சி ஆரம்பித்து இருப்பது எங்களுக்குப் பெருமை என வெ.மு.க அமைப்பினர் செய்தியாளர் சந்திப்பில் கூறினர். தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் நேற்று முன்தினம் தனது கட்சிக்கொடி, கட்சிப் பாட்டு ஆகிவற்றை அறிமுகம் செய்தார். அந்த கொடியின் நிறம் ஸ்பெயின் நாட்டுக் கொடி போல உள்ளது. யானைகள் – சமாஜ்வாடி கட்சி சின்னம், நடுவில் உள்ளது வாகை மலர் […]
சென்னை : மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதில் எவ்விதத் தாமதமும் இல்லை என உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாடு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் சார்பில், புதியதாக குடும்ப அட்டை விண்ணப்பித்த இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு புதிய அட்டை வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், புதிய அட்டை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகார்கள் எழுந்தன. இது குறித்து பா.ம.க நிறுவனர் ராமதாஸ் நேற்றைய தினம், […]
சென்னை : அரசியல்வாதியாக பார்த்தால் விஜய்யை விட உதயநிதி ஸ்டாலின் தான் பெரிய ஆள் என கருணாஸ் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்கிடையில், அண்மையில் தன்னுடைய கட்சிக்கொடியையும் அறிமுகம் செய்திருந்தார். இந்த சூழலில், விஜயின் அரசியல் வருகை பற்றி அரசியல் தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலருடைய தங்களுடைய கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், தனியார் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த […]
சென்னை : நடிகர் விஜய் உடனான சந்திப்பு குறித்து பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விளக்கம் அளித்துள்ளார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு, ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் விஜயகாந்த் உருவத்தை கையில் ‘டாட்டூ’ போடும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வை கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று காலை பார்வையிட்டார். அதன்பின், செய்தியாளர்களை சந்தித்து பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, விஜய் உடனான சந்திப்பு குறித்தும், தவக கட்சியின் கொடி […]
திருவாரூர் : புதிதாகக் கட்சி தொடங்கிய விஜய்க்காகப் பேசுவதற்கு அண்ணனாக நான் இருக்கிறேன் எனப் பத்திரிகையாளர்களைச் சந்தித்த போது சீமான் பேசி இருக்கிறார். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி திருக்கொள்ளிக்காடு அருகே அமைந்துள்ள “அருள்மிகு பொங்கு சனீஸ்வரர்” ஆலயத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் இன்று சாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் தமிழக மீனவர்கள், உக்ரைன் போர் மற்றும் விஜய் கட்சியின் கோடி அறிமுகத்தைப் பற்றியும் சீமான் பேசி இருந்தார். தமிழக மீனவர்கள் பற்றிய கருத்து ..! தமிழக மீனவர்களைப் பற்றிய கேள்வி எழுந்த நிலையில், […]
குன்றத்தூர் : சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் தாயை இழந்த கன்று குட்டிக்கு, வளர்ப்பு நாய் பால் கொடுத்த நெகிழ்ச்சி செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை எவ்வளவு அழகானது என்பதை காண்பிக்கும் விதமாக சிறுகளத்தூரில் ஒரு ஆச்சரியமான சம்பவம் நடந்து இருக்கிறது. அது என்னவென்றால், சிறுகளத்தூரில் உள்ள ஒரு வீட்டில் வீட்டின் உரிமையாளர்கள் மாடுகள், நாய்கள் வளர்த்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் ஒரு மாடு ‘மடி நோய்’ ஏற்பட்டு உயிரிழந்துள்ளது. உயிரிழந்த அந்த மாட்டுடைய கன்றுக்குட்டி […]
சென்னை : தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து “முத்தமிழ் முருகன் மாநாடு” துவக்க நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார். இந்துக் கடவுள் முருகனின் 3ஆம் அறுபடை வீடு அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனியில் “முத்தமிழ் முருகன் மாநாடு” இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
சென்னை : தமிழகத்தில் (ஆகஸ்ட் 27.08.2024) செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் […]
திண்டுக்கல் : அறநிலையத்துறை சார்பில் இன்றும் (ஆகஸ்ட் 24) நாளையும் (ஆகஸ்ட் 25) பழனியில் நடைபெறும் முத்தமிழ் முருகன் மாநாடு கொடியேற்றத்துடன் தொடங்கியது. தமிழ்க் கடவுள் என போற்றப்படும் முருகன் புகழை போற்றும் விதமாக “முத்தமிழ் முருகன் மாநாடு” எனும் நிகழ்வு தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் இன்றும், நாளையும் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் தொடங்கி உள்ளது. இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் […]
சென்னை : யானை ஒரு மாநிலத்திற்கோ, ஒரு கட்சிக்கோ சொந்தமில்லை என விஜய்க்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கருத்து தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல், உறுதிமொழி ஆகியவற்றை வெளியிட்டார். த.வெ.க கட்சிக்கொடியில் இடம்பெற்றுள்ள யானைகள், வாகை மலர், கொடியின் நிறம் பற்றிய விளக்கங்களை மாநாட்டில் அறிவிப்பதாகஅவர் கூறினார். அதற்குள், இணையவாசிகள் முதல் அரசியல் பிரமுகர்கள் வரையில் த.வெ.க கட்சிக்கொடி பற்றி […]
சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சிவராமன், பள்ளி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர் , பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் மீது போக்ஸோ […]
வேலூர் : த.வெ.க கட்சிக்கொடியை அக்கட்சிதலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தது பற்றிய கேள்விக்கு அமைச்சர் துரைமுருகன் நகைச்சுவையாக பதில் அளித்துள்ளார். அமைச்சர் துரைமுருகன் எப்போதுமே தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு நக்கலாக நையாண்டியுட பதில் சொல்லி சிரிக்க வைத்துவிடுவார். அதற்கு உதாரணமாக சமீபத்தில் கூட இதெல்லாம் நமக்கு கைவந்த கலைப்பா” என்கிற வகையில், பிரபல யூடியூபரின் வீடியோவிற்கு கீழே ” “அய்யா எனக்கும் உதவி பண்ணுங்க அய்யா” என கமெண்ட் செய்திருந்தார். அவர் செய்திருந்த அந்த கமெண்ட் […]
சென்னை : விஜயின் த.வெ.க கட்சி கொடியில் கேரள மாநில சின்னம் இருக்கிறது, ஸ்பெயின் நாட்டின் கொடி போல உள்ளது என குறிப்பிட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நடிகரும் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய் நேற்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல் மற்றும் உறுதிமொழி ஆகியவற்றை அறிமுகம் செய்தார். இந்த நிகழ்வு நேற்று சென்னை பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது. த.வெ.க கட்சிக் […]
சென்னை : பாலியல் வழக்கில் கைதாகி இருந்த சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழப்பில் சந்தேகம் இருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியாக நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமன் கைது செய்யப்பட்டார். மேலும், இந்த குற்றச் சம்பவத்தை மறைக்க முயன்றதாக பள்ளி தாளாளர், பள்ளி தலைமை ஆசிரியர் என மொத்தம் […]