சென்னை : மத்திய அரசின் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இன்னும் இணையவில்லை. இதனால் பி.எம் ஸ்ரீ திட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு கல்வி உட்கட்டமைப்புகளுக்காக வழங்கப்படும் நிதி இன்னும் மத்திய அரசால் வழங்கப்படவில்லை என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், பிஎம் ஸ்ரீ திட்டமானது மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையையை போன்றுள்ளது. மும்மொழி கொள்கையை நடைமுறைப்படுத்த கோருகிறது என்றும் அதனால், பிஎம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையவில்லை என்றும் பள்ளிக்கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த மாற்றுத்திறனாளி ஆசிரியரை மகா விஷ்ணு இழிவு படுத்தி பேசியதும் வன்மையாக கண்டிக்கத்தக்கது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று கோவில்பட்டியில் செய்தியாளர் சந்திப்பில் கூறினார். மேலும், ” ஆண்டவனால் தன நீங்கள் மாற்றுத்திறனாளியாக படைக்கப்பட்டுள்ளீர்கள் என்று அந்த ஆசிரியரை நோக்கி கடுமையான சொல்லை மகா விஷ்ணு பயன்படுத்தி உள்ளதும் கண்டிக்கத்தக்கது. மாற்றுத்திறனாளிகளிடம் மனிதநேயதுடன் நடந்துகொள்ள […]
சென்னை : மாற்றுத்திறனாளிகளை குறித்து சர்ச்சைக்குரிய பேச்சை மேற்கொண்ட மகா விஷ்ணுவை சென்னை விமான நிலையத்தில் வைத்து காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவரை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க சைதாப்பேட்டை காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னையில் உள்ள அசோக்நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப்பள்ளியில், மூடநம்பிக்கையை விதைக்கும் வகையிலும், மாற்று திறனாளிகளை காய படுத்தும் வகையிலும் சொற்பொழிவு ஏற்றிருந்தார். இவர் பேசும் போதே இது மதரீதியாக மாணவர்களிடம் பேச வேண்டாம் என […]
கொல்கத்தா : ஆர்.ஜி கர் மருத்துவமனை கல்லூரி பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கை, சிபிஐ விசாரணை குழுவினர் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் தன்னார்வலர் சஞ்சய் ராய் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை கொல்கத்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் தரப்பு, சஞ்சய் ராய்க்கு ஜாமீன் கேட்டு மனு அளித்து இருந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நீதிபதி பமீலா […]
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, சான் பிராசிஸ்கோ பயணத்தை முடித்துக்கொண்டு தற்போது சிகாகோவிற்கு முதலமைச்சர் பயணம் மேற்கொண்டுள்ளார். சிகாகோவில் பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பிரபல தொழில் நிறுவன உயர் அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் அவர்கள் தொழில் தொடங்க அழைப்பு விடுத்தது வருகிறார். இதுவரையில் 1500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் இருந்தாலும், தமிழ்நாட்டில் […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 09.09.2024) வெள்ளிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக கீழே வரும் மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. எனவே, எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. கோவை எம்.ஜி. சாலை, எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, காவேரி நகர், ஜே.ஜே.நகர் துடியலூர் பகுதிகள் முழுவதும் மன்னம்பாளையம், வோலாபாளையம் மற்றும் அய்யப்பநாயக்கன்பாளையம் சென்னை மேடூர், புலிகோட், அவ்வூரிவாக்கம், கொல்லூர், […]
மதுரை : மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தாண்டு புத்தக கண்காட்சியானது நேற்று தொடங்கியது. மதுரை தமுக்கம் மைதானத்தில் மாநாட்டு மையத்தில் நேற்று அமைச்சர் மூர்த்தி இந்த புத்தக கண்காட்சியை தொடங்கிவைத்தார். அமைச்சர் புத்தக கண்காட்சியை தொடங்கி வைத்து சென்ற பிறகு, கிராமப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மதுரை அரசு இசைக்கல்லூரி சார்பில் கிராமப்புற இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த சமயத்தில் “அங்கே இடி முழங்குது” என்ற கருப்பசாமி பாடல் பாடப்பட்டது. […]
சென்னை : நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து, கொழுக்கட்டை மற்றும் விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள் படைத்து மக்கள் வழிபடுகின்றனர். இந்நன்னாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி முதல் எடப்பாடி கே.பழனிசாமி வரை வாழ்த்து செய்திகள் […]
சென்னை : அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே, மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் உரையாற்றினார். இதில், தன்னை உணர்தல் என்று அவர் ஆற்றிய சொற்பொழிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு : தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு ஆன்மீக தேடல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார், மேலும், அங்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார். அங்குப் பேசிய […]
விக்கிரவாண்டி : அரசியலில் அடுத்த நகர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான, ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். காவல்துறை வைத்த முக்கிய கேள்விகள் மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி […]
சென்னை : அசோக் நகர் அரசு பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற நிகழ்வில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர் முன்ஜென்மம், மாற்று திறனாளிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தற்போது பள்ளிக்கல்வித்துறையில் பூதாகரமாக மாறியுள்ளார். மேலும், மகா விஷ்ணு அங்குள்ள மாற்றுத்திறனாளி ஆசிரியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதும் பல்வேறு கண்டங்களை எதிர்கொண்டுள்ளது. Read more – “மகா விஷ்ணுவை சும்மா விடமாட்டேன்.” ஆவேசமான அமைச்சர் அன்பில் மகேஷ்.! இதுகுறித்து 3,4 […]
சென்னை : அசோக் நகர் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்மையில் தன்னம்பிக்கை சொற்பொழிவு எனும் பெயரில் ஆன்மீக பேச்சாளர் மகா விஷ்ணு என்பவர் மாணவர்கள் மத்தியில் பேசினார். அப்போது அவர், முன் ஜென்மத்தில் செய்த பாவங்கள் அடிப்படையிலே தற்போது பிறப்பு அமைகிறது என்றும் மாற்று திறனாளிகள் குறித்த சர்ச்சை கருத்தையும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார். மகா விஷ்ணு பேசிக் கொண்டு இருக்கும் போதே, பார்வைதிறனற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர், மகா விஷ்ணு பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். […]
சென்னை : அசோக் நகரில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆன்மீக சொற்பொழிவு நிகழ்வு தற்போது தமிழகம் முழுக்க பேசுபொருளாக மாறியுள்ளது. முன் ஜென்மம், மாற்றுத்திறனாளிகள் பற்றி ஆன்மீக சொற்பொழிவாளர் பேசிய சர்ச்சைக் கருத்துக்கள் தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. இது குறித்து அப்பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமென பள்ளிக்கல்வித்துறை […]
சென்னை : நகரில் உள்ள அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கை சொற்பொழிவு என்ற பெயரில் ஆன்மிகம் சார்ந்த கருத்துக்கள், முன்ஜென்மம், பாவ புண்ணியம் என மாற்றுத்திறனாளிகள் குறித்து சர்ச்சை கருத்தை ஆன்மீக சொற்பொழிவாளர் ஒருவர் மாணவர்கள் மத்தியில் கூறியுள்ளார். அரசுப் பள்ளியில் ஆன்மீக சொற்பொழிவு நடைபெற்றது குறித்தும், அதில் சர்ச்சை (விஷப் பேச்சுக்கள்) கருத்துக்கள் கூறப்பட்டதும் மாநிலம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அரசுப்பள்ளி தலைமை ஆசிரியை விளக்கம் அளிக்க பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்ட கல்வி […]
சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் கீழே வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்…. சென்னை பொன்னேரி டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
கொல்கத்தா : கடந்த மாத தொடக்கத்தில் ஆர்.ஜி கர் மருத்துவமனையில் 31 வயதான பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக தன்னார்வலர் சஞ்சய் ராய் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மருத்துவ கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் ராய், சிபிஐ வழக்கு விசாரணை வளையத்தில் இருக்கிறார். சந்தீப் ராய் மீது அதே கல்லூரியில் உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக கடத்திய புகார் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதியப்பட்டு அந்த புகாரில் […]
சென்னை : விஜய் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள G.O.A.T திரைப்படத்தை அவரது ரசிகர்கள் திரையரங்குகளில் திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். படத்திற்க்கு நல்ல விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், தற்போது ஓர் ‘சனாதன’ விமர்சனம் அரசியல் களத்தில் இருந்து வந்தது, பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. G.O.A.T பட தலைப்பு சனாதன கொள்கையை உயர்த்தி பிடிப்பது போல உள்ளது என அரசியல் களத்தில் இருந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி ரவிக்குமார் விமர்சனம் செய்து பரபரப்பை கிளப்பியுள்ளார். G.O.A.T படைத்தலைப்பின் […]
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார். முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 […]
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதலமைச்சர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின் போது ஓய்வு நேரங்களில் முதல்வர், ஓட்டுனரில்லாத காரில் பயணிப்பது, சைக்கிள் ஓட்டுவது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வைரலானது. சிகாகோ பயணத்தின் போது, அங்குள்ள சாலையில் மகிழ்ச்சியாக தனியே சைக்கிள் பயணம் செய்யும் வீடீயோவை தனது எக்ஸ் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த வீடியோவுக்கு பதிலளிக்கும் விதமாக காங்கிரஸ் இளம் […]
கோவை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் கோவையில் உள்ள சில பகுதிகளில் வரும் வியாழக்கிழமை (05.09.2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கோவை கோவை மெட்ரோ – செங்கதுரை : செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்படும். வடக்கு கோவை – சரவணம்பட்டி : சரவணம்பட்டி, அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, […]