ராமநாதபுரத்தில் பிப்ரவரி 21ம் தேதி அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க உள்ளதாக கூறிய கமல்ஹாசன், பிப்ரவரி 24ம் தேதி மாநாடு நடத்தப்படாது என தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் தமது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் கமல்ஹாசன் ஆலோசனை நடத்தினார். பின்னர், தமது இல்லத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களிடையே உரையாற்றிய நடிகர் கமல்ஹாசன், மக்களை நோக்கி செல்லும் நிலைக்கு தாம் தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். தமது அரசியல் பயணத்தில் இன்னும் பலர் இணைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்த அவர், […]
அரசு பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.தமிழக அரசு முன்னறிவிப்பின்றி அரசு பேருந்து கட்டண உயர்த்தப்பட்டதாகவும்,அரசின் இந்த முடிவால் தமிழக மக்கள் பெரிதளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வழக்கறிஞர் ஜார்ஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேருந்துகளின் கட்டண உயர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் கடும் கோபத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பேருந்து கட்டணம் தமிழகம் முழுவதிலும் உள்ள மக்களை வெகுவாக பாதித்துள்ளது. இதன் காரணமாக பேருந்துகளில் பயணிப்பதற்கு பதிலாக மக்கள் அதிகமாக மின்சார ரயில்களை நோக்கி வர தொடங்கியிருக்கிறார்கள். இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் திருவள்ளூர் மாவட்டம் ஒண்டிகுப்பத்தில் சென்னை-திருப்பதி சாலையில் பேருந்துகளை சிறைபிடித்து, மறியல் நடந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அடுத்து, போலீசார் தடியடி நடத்தி, கூட்டத்தை கலைத்தனர். அதே போல் […]
தமிழகத்தில் இன்றைய (22.01.2018) பெட்ரோல், டீசல் விலை நிலவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை பெட்ரோல் 1 லிட்டரானது ரூ.73.48 ஆக உள்ளது.இது நேற்றையை பெட்ரோல் விலையை விட சுமார் 0.15 பைசா உயர்ந்துள்ளது.அதேபோல் டீசல் 1 லிட்டரானது ரூ.64.67 ஆக உள்ளது. இது நேற்றைய டீசல் விலையை விட சுமார் 0.19 பைசா உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், கடந்த 19ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. மாற்றியமைக்கப்பட்ட பேருந்துகளின் கட்டண உயர்வு தனியார் பேருந்துகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டது. அரசு அறிவித்துள்ள விலையுயர்வின்படி கட்டணங்கள் கீழ்கண்டவாறு உயரும்: புறநகர் பேருந்து கட்டணம் குறைந்தபட்சம் ரூ.5-லிருந்து ரூ.6 ஆக உயர்வு மாநகர குளிர்சாதன பேருந்து குறைந்தபட்ச கட்டணம் ரூ.25 ஆக உயர்வு புறநகர் விரைவுப்பேருந்து அதிகபட்ச கட்டணம் ரூ.17 லிருந்து ரூ.24 […]
அதிமுகவில் இருந்து 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர். இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுகவின் கொள்கை மற்றும் கோட்பாடுகளுக்கு முரணாக செயல்பட்டதால், அவர்கள் நீக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர். அதிமுகவின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டதால், விழுப்புரம் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான வானூர் கணபதி உள்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும், கடலூர் கிழக்கு மாவட்டத்தில் சுமார் 40 நிர்வாகிகளும் […]
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஐந்நூறு மதுக்கடைகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், உயர்வகை மதுபானங்களை வீடுதேடிச் சென்று விற்க முடிவு செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார். அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து விட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு மதுவணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து நிதி நெருக்கடியையும் தீர்ப்பதற்கு மது விற்பனையை அதிகரிப்பது தான் தீர்வு என்று தமிழக அரசு […]
ஜெயலலிதா இறப்பதற்கு ஒருநாள் முன்னதாகவே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து வரும்படி 4-ம் தேதி நள்ளிரவே அதிமுக தலைமை கழகத்தில் இருந்து உத்தரவு வந்ததாகவும், அன்றையே தினமே புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கை தொடங்கிவிட்டதாகவும், தெரிவித்துள்ளார். இதனால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
பேருந்துகளின் கட்டண உயர்வு என்பது தவிர்க்க முடியாதது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், “பேருந்துகள் கடும் இழப்பை சந்தித்துள்ளது. பேருந்துகள் மக்களுடையது, இதை மக்கள் தான் சரிசெய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார். மேலும் இதுகுறித்து திண்டுக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்ற மாநிலங்களிலேயே தமிழகத்தில் தான் பேருந்து கட்டணம் குறைவு என்று கூறியுள்ளார். அதனை தொடர்ந்து, நாகப்பட்டினத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கைத்தறித் துறை […]
ம.தி.மு.க. கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி இருப்பதைத் தமிழக அரசு எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகச் சீர்கேடுகள், போக்குவரத்துத் துறையில் நடைபெற்று வரும் ஊழல்கள் ஆகியவற்றால்தான் போக்குவரத்துக் கழகங்கள் நட்டம் அடைவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். காலாவதியான பேருந்துகளை இயக்குவதில் பீகாருக்கு அடுத்த இடத்தைத் தமிழ்நாடு பெற்றுள்ளதாகவும், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் 78 விழுக்காடு பேருந்துகள் காலாவதி ஆனவை என்றும் வைகோ சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் […]
ஆண்டாளை பற்றி அவதூறாக பேசியதற்காக வைரமுத்துவை அனைவரும் விமர்சித்துள்ளனர். இதனால் பல்வேறு பிரெச்சனைகளை அவர் சந்தித்து வருகிறார். இதனை குறித்து அவர் அண்மையில் ஒரு விடியோவை பதிவு செய்துள்ளார். அதில் அவர் மிகவும் மனம் வருத்தத்தில் இருப்பதாகவும் இதை அவர் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும், “ஆண்டாளை தேவதாசி என உயர்வாக சொன்னதை தாசி, வேசி என மதம் கலந்த அரசியலுக்காக திரித்துவிட்டனர்; வருத்தம் தெரிவித்த பின்னரும் இன, மத கலவரத்துக்காக திரிகிறார்கள்” என கவிஞர் வைரமுத்து உருக்கமாக விளக்கம் தந்துள்ளார். ஆண்டாளை பற்றி […]
தமிழகம் முழுவதும் அரசு பஸ் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி தமிழக அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. சாதாரண பஸ்களில் குறைந்தபட்சம் ரூ.7 ஆகவும், நகர பேருந்துகளில் ரூ.6 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் விரைவு, சொகுசு பஸ்களிலும் கட்டணம் மேலும் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ள இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.நேற்று அறிவிக்கப்பட்ட பேருந்து கட்டண உயர்விற்கான அரசாணையை தமிழக அரசு இன்று வெளியிட்டது. அதில், இனிமேல் ஆண்டுதோறும் பேருந்து கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் உயர்மட்டக்குழு அறிக்கைப்படி […]
முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதாவின் சொந்தமான ஜீ தீபாவும் தீபக்கும் சொத்துக்களை சட்டப்பூர்வமாக நிர்வாகிப்பதற்காக சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகினர். இதற்காக போயஸ் கார்டன் வீட்டிற்கு சட்டபூர்வ உரிமை பெற சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு பதிவு செய்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின் படி, அவர்கள் இரண்டாம் வகுப்பு சட்ட வாரிசுகளாக இருக்கிறார்கள் என்றும் இதன்மூலம் அவர்கள் ஜெயலலிதாவின் சொத்துக்களிற்கு வாரிசு ஆக உரிமை இருபதாவாகும் கூறியுள்ளனர்.இந்த விஷயத்தை அடுத்த வாரம் சென்னை உயர்நீதிமன்றம்? எடுத்துக் கொள்ளலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அரசுப் பணிக்கான அடிப்படை பயிற்சி பெறுவதில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், பார்வை?, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி அரசுப்பணியாளர்கள் அடிப்படை பயிற்சி பெற வேண்டாம். பவானிசாகர் அரசு அலுவலர் பயிற்சி நிலையத்தில் பார்வை, செவித்திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி பயிற்சி பெற வேண்டாம் என்றும் அதே சமயம் ஊன்றுகோல் உதவியுடன் நடப்போர், சக்கர நாற்காலி உதவியுடன் நடப்போர் பயிற்சி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் திமுக எம்.பி கனிமொழி திருப்பதியை பற்றி அவதூறாக பேசியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்ய தெலுங்கானா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னர் அவர் ஒரு மேடையில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் திருப்பதியில் உள்ள உண்டியலுக்கு கடவுள் இருக்கும் பொழுது எதற்கு காவலாளி..? என்றும் பேசியுள்ளார். இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிபிடிக்கத்தக்கது.
கரூரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 2011ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும், கடும் நிதி நெருக்கடியால் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளதாகவும் கூறினார். கட்டண உயர்வுக்கு பிறகும் ஆண்டுக்கு 950 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்படும் என்றும் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்தார்… இன்று முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகரிக்கப்பட்டுள்ள இந்த கட்டணம், நாளை முதல் அமலுக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. […]
தனியார் பேருந்துகள் பல நேரங்களில் மற்ற வாகன ஓட்டிகள் பயப்படும் அளவிற்கு தறிகெட்டு வேகமாக செல்கின்றன. அதனால் பல நேரங்களில் விபத்துக்குள்ளகின்றன. அப்படி அடிக்கடி நடக்கிறது. ஆப்படி ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது. வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள பந்தாரபள்ளியில் தனியார் பேருந்து தனது கட்டுபாட்டை இழந்து ஒரு வீட்டுக்குள் புகுந்தது. அதில் 3 பேர் காயமடைந்தனர். உடனே காயமடைந்த அந்த 3 பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதி போலிசாருக்கு […]
குரூப் ‘பி’ – குரூப் ‘சி’ – குரூப் ‘டி’ பணியிடங்களுக்கான போட்டித் தகுதித் தேர்வு வினாத்தாள்கள் பாரபட்சமாக ஆங்கிலம் மற்றும் இந்தியில் இருப்பதால் தமிழக மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆயிரக்கணக்கில் தேர்வாவதாகவும், 2016-ல் 111 தமிழக மாணவர்களே ஒருங்கிணைந்த பட்டதாரிஅளவிலான தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் குறப்பிட்டுள்ளார். தமிழகத்தின் மத்திய துறைகளில் 3 ஆண்டுகள் வரை பணியாற்றிய பின், வட மாநிலத்தவர்கள் சொந்த ஊர்களுக்கு பணிமாறுதலில் செல்வதால் […]
நீலகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்த டி.டி.வி தினகரனின் ஆதரவாளரான தங்கத்தமிழ் செல்வன் மேட்டுப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது, “தனிக்கட்சி துவங்கவுள்ளதாக தினகரன் தெரிவித்தவுடன் ஓ.பி.எஸ் உடனடியாக பணம் இருக்கும் வரை அவர் கட்சி நடத்துவார், இறுதியில் அவருடன் 10 பேர் கூட இருக்கமாட்டார்கள் என கூறியுள்ளார். பணம் வைத்துக்கொண்டா ஓ.பி.எஸ் தனது தர்மயுத்தத்தை தொடங்கினார், அந்த பணம் தீர்ந்தவுடன் இ.பி.எஸ் உடன் இணைந்து கொண்டாரா. தினகரன் இல்லையென்றால் இவர் யார் […]
சொகுசு கார் வாங்கிய வழக்கில் அமலபால் போலீசில் சரணடைந்தார் .. யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் மற்ற மாநில சொகுசுகார்களை பதிவு செய்வது அதிகரித்து வந்தது. சொகுசு கார்களை வாங்கும் பிரபலங்கள், அதனை வேறொருவரின் பெயரில் புதுச்சேரியில் பதிவு செய்வதாக கிடைத்த தகவலை அடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மலையாளர் நடிகரும் எம்.பி-யுமான சுரேஷ்கோபி, நடிகர் ஃபகத் பாசில், நடிகை அமலாபால் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருவனந்தபுரம் குற்றப்பிரிவு […]