தமிழ்நாடு

இது வரை போராட்டம் செய்யாத காவலர்கலும் போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு!

தமிழ்நாட்டை பொறுத்தவரை போராட்டம் நடத்தாத ஒரே ஒரு அரசு ஊழியர்கள் காவல் துறை மட்டும் தான் .ஆனால் அதற்கே அடி சறுக்க  போகிறது . 7வது ஊதிய கமிஷன் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போலீசார் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து உள்ளனர். ஏற்கனவே போலீஸ் சங்கம் அமைக்க அனுமதிக்க வேண்டும் என பலமுறை போலீசார் போராட முன்வந்துள்ளனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதமும் மெரினாவில் குடும்பத்துடன் திரண்டு போலீசார் போராடப்போவதாக அறிக்கை வெளியானதை தொடர்ந்து மெரினா […]

4 Min Read
Default Image

6 லட்சம் மதிப்புள்ள நகைக் கொள்ளை தூத்துக்குடியில் கைவரிசை.

தூத்துக்குடி; நிகிலேசன்நகரைச் சேர்ந்தவர் காந்திமதி இவர் தூத்துக்குடி மாநகராட்சியில் துணைப் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இரவில் வீட்டுக்குள் ஏ.சி அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது,  பீரோ உடைக்கப்பட்டு ரூ.6 லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் 10 ஆயிரம் ரொக்கப் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது .இதையடுத்து   சிப்காட் போலீஸார் கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தது கொள்ளையர்களை தேடிவருகின்றனர்.

#Thoothukudi 2 Min Read
Default Image

காவல் நிலையத்தை காணவில்லையாம் !படத்தின் பாணியில் அரங்கேறிய சம்பவம்….

நாம் கிணத்தை காணவில்லை என்று வடிவேலு படத்தில்  தான் பார்த்தோம். ஆனால் இங்கு  காவல் நிலையம் காணவில்லை !!!திருநெல்வேலி  மாவட்டதில் பச்சிளம் குழந்தைகள் உயிருடன் எரிந்த சம்பவத்திற்கு நியாயம் வேண்டி, அந்த துயர சம்பவத்திற்கு காரணமான மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கொடுத்த புகாரை ஏற்காமல் திருப்பி அனுப்பப்பட்டது. அதைவிட கொடுமை  என்னவென்றால் பாளையம்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் பதிவு தபாலில் அனுப்பிய எனது மனுவை பிரித்து படித்துவிட்டு அதன்பின் தவறான […]

3 Min Read
Default Image

இலவச ஐ.ஏ.எஸ். பயிற்சி !முழு நேரம் பயிற்சி இலவசமாக அளிக்கும் பாரதியார் பல்கலைகழகம்….

இந்திய குடிமை பணி என்பது மிகவும் அரிதாக படிக்கும் ஒன்றாகும் . இந்திய குடிமைப்பணி (ஐ.ஏ.எஸ்.,) தேர்வை மூன்று நிலைகளாக உள்ளது. யு.பி.எஸ்.சி., என்று அழைக்கப்படும், மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது. 2018ம் ஆண்டு முதல் நிலை தேர்வுக்கான, முழு நேர இலவச பயிற்சி அறிவிப்பை, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. இலவசம்: தங்கும் இடம், இணையதள வசதி, நுலக வசதி மற்றும் உணவு. உதவித்தொகை: மாதம் இரண்டாயிரம் ரூபாய். சேர்க்கை முறை: நுழைவுத்தேர்வு மூலம் […]

job 2 Min Read
Default Image

விமானத்தில் பறவை மோதியதால் திடீர் தரையிறக்கம்.

கோயம்புத்தூர்; விமான நிலையத்தில் இருந்து ஏர் அரேபியா என்ற விமானம் , ஓடுதளத்தில் பறந்து வந்த மயில் மீது மோதி விமானம் சேதம்  அடைந்தது. இந்த விபத்தையடுத்து,விமானி பயணிகளை பத்திரமாக தரை இறங்கினார். ஷார்ஜா செல்ல வேண்டிய இந்த விமானத்தில் 163 பயணிகள் இருந்தனர்.தற்போது இந்த பயணிகள்  ஓட்டலில் தங்க வைக்கபட்டு உள்ளனர். விமானத்தை சரிசெய்ய, சென்னையில் இருந்து தொழில்நுட்ப குழு கோவை விரைந்துள்ளது.

#Coimbatore 2 Min Read
Default Image

பசும்பொன்னில் குவியும் அரசியல் தலைவர்கள் : தேவர் ஜெயந்தி விழா

முத்துராமலிங்கதேவர் அவர்களின்  110-வது ஜெயந்தி விழா மற்றும் 55-வது குருபூஜை ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள  பசும்பொன் கிராமத்தில்  அக்டோபர்  28-ந்தேதி தொடங்கப்பட்டது. முதல் நாள்  ஆன்மீக விழாவாகவும், 2-ஆம்  நாள்  அரசியல் விழாவாகவும் கொண்டாடப்பட்டது. 3-வது நாளான இன்று                           (30-அக்டோபர்), தேவரின் குருபூஜை நடைபெற்றது. நினைவாலய பொறுப்பாளர் காந்தி மீனாள் நடராஜன் தலைமையில் நிர்வாகிகள் பழனி, தங்கவேல், ராமச்சந்திரன் […]

#Politics 6 Min Read
Default Image

1032-வது தஞ்சை ராஜராஜ சோழரின் சதய விழா.

தஞ்சாவூர்;தமிழகத்தின் மிகச்சிறந்த மாமன்னர் என்று போற்றப்படும் ராஜராஜ சோழரின் 1032-வது ஆண்டு சதய விழா இன்று கொண்டாடப்படுகிறது.  இதனை  முன்னிட்டு தஞ்சை மாவட்ட ஆட்சியர் மற்றும் பல அரசியல்தலைவர்கள்,பொதுமக்களும் ராஜராஜ  சோழரின் சிலைக்கு மரியாதை செய்தார்.இவர் தஞ்சை பெரியக்கோவிலை கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது இதனால் தஞ்சை பெரிய கோவிலும் சிறப்பு  பூஜைகள் நடைபெற்று வருகிறது.

thanjai 2 Min Read
Default Image

தாலுகா அலுவலுகம் கட்டுவதற்கு எதிர்ப்பு !ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு !

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகம் மிகவும் பழமையாக உள்ளது .அதனால் அதை புதியதாக கட்ட தேவை வந்துள்ளது.  இந்நிலையில் அதற்க்கு அடிக்கள்  நாட்டப்பட்டது   ஸ்ரீவைகுண்டத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்படும் இடம்,அரசு மருத்துவமனையின் விரிவாக்கத்திற்குதேவைப்படுகிறது. இதனால், புதிய வசதிகளுடன்நெல்லை திருச்செந்துார் சாலையில் ஆதிச்சநல்லுார் அருகே தாலுகா அலுவலகம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. மாவட்ட  கலெக்டர் வெங்கடேஷ்,  எம்.எல்.ஏ.,சண்முககநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 2 கோடியே 39 லட்சம் ரூபாய் செலவில் இரண்டு தளங்களுடன் […]

தூத்துக்குடி செய்திகள் 3 Min Read
Default Image

பொறியியல் பட்டதாரிகள் குறித்து கவலை தெரிவித்த அமைச்சர் பாண்டியராஜன் !

பொறியியல் பட்டதாரிகள் தமிழகத்தில் எண்ண முடியாத  அளவில் உள்ளனர்.வேலை இல்லாமல் 90% மேல் உள்ளனர்.சமீபத்தில் உயர்நீதிமன்றம் கூட இது பற்றி தீர்ப்பு வழங்கி இருந்தது .இன்று ஸ்ரீபெரும்புதூர் அருகே தண்டலத்தில் இயங்கி வரும் தனியார் பொறியியல் கல்லூரியில்  நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர்பேசியதாவது பொறியியல் பட்டதாரிகள் 40 % பேர் வேலை கிடைக்காமல் அவதிபட்டுவருகின்றனர்.இது மிகவும் கவலையாக உள்ளது என்றும் கூறி உள்ளார் .அதே சமயம் பொறியியல் துறையில் புகுத்தப்பட்டுள்ள  புதிய தொழில்நுட்பங்கள் மூலம் பட்டதாரிகளுக்கு புதிய […]

#Politics 2 Min Read
Default Image

தற்கொலை செய்ய முயன்றவரை காப்பாற்றிய செய்தியாளர்

கோவையை சேர்ந்த குமார் ஆனா இவர் , நகைக்கடை உரிமையாளருக்கு ரூ.10 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.  மூன்று ஆண்டுகள் ஆகியும்  கடனை திருப்பித் தராமல் ஏமாற்றியுள்ளார்.  இதுபற்றி, புகாரளிக்க வந்த குமாரை காவலர்கள்புறக்கணித்ததால், இதனால் பதிக்கப்பட்ட குமார் தீக்குளிக்க முற்பட்டார். அப்போது அருகில் இருத்த கலைஞர் டி.வி செய்தியாளர், சொர்ணகுமார் அவர் கையில் இருத்த தீப்பெட்டியைப் பிடுங்கி அவரை காப்பாற்றினார்.

2 Min Read
Default Image

துறைமுகங்களை முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் கிளர்ந்தெழுந்த தூத்துக்குடி துறைமுக தொழிலாளர்…!

துறைமுகங்களை கார்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்க்க சட்டத் திருத்தம் செய்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.இதனால் நாட்டின் பொருளாதார சுயசார்பு, பாதுகாப்பு தொடர்பானது என்பதால் மக்கள் கறமிறங்க வேண்டும் என்று கூறி தூத்துக்குடி மாவட்ட வ.உ.சி துறைமுக தொழிற்சங்கங்களான மார்க்சிஸ்ட் கட்சியின் சி.ஐ.டி.யூ, காங்கிரஸ் கட்சியின் INTUC,DMK தொழிற்சங்கம் , கம்யூனிஸ்ட் கட்சியின் AITUC ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. இப்போராட்டத்தில் துறைமுக தொழிலாளர் ட்ரஸ்டி கதிர்வேல் ( INTUC),துறைமுக தொழிலாளர் மற்றொரு ட்ரஸ்டியான ரசல் (CITU) ஆகியோர் பங்கேற்றனர்.

#Politics 2 Min Read
Default Image

காதலன் கைவிட்டதால் தற்கொலை செய்த பெண்!

காதல் தற்கொலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து  வரும் நிலையில் இன்று சேலத்தில் ஒரு பெண் தற்கொலை.சேலம் அருகே உள்ள பழைய சூரமங்கலத்தை சேர்த்த பட்டதாரி பெண் தற்கொலை செய்தார் .அவர் காதலித்தது அவரது   உறவினர்   என்று கூறினர்.அவர் ஆயுத படை காவலராக பணியாற்றிவருபவர் ஆவார்.அவர் பெயர் ஸ்ரீனிவாச முருகன் என்பவரை காதலித்ததாக கூறப்படுகிறது .அவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்ததால் மனமுடைத்து தற்கொலை செய்து கொண்டார் .அவர் கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.இது குறித்து போலீசில் […]

2 Min Read
Default Image

சிறுமியை வன்கொடுமை செய்த வழக்கு !சிறை தண்டனை வழங்கியது நீதிமன்றம் ….

கரூர் அருகே இளம்பெண் விஜயகுமார் என்பவரால் வான் கொடுமை செய்யப்பட்டார் .இதில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கரூர் அருகே 16 வயது இளம்பெண்ணை கடத்தி வன்கொடுமை செய்த விஜயகுமார் என்ற இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை வழங்கியது கரூர் நீதிமன்றம்.  

1 Min Read
Default Image
Default Image

சென்னையில் மேலும் ஒருவர் தீவிபத்தில் உயிரிழப்பு..

சென்னை கொடுங்கையூரில் ஏற்பட்ட  தீவிபத்தில் சிகிச்சை பெற்று வந்த மேலும் ஒருவர் உயிரிழந்ததால், விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.சென்னை கொடுங்கையூர் முத்தமிழ்நகரை சேர்ந்தவர் வெங்கடபிரகாஷ் இவர் ரயில்வேயில் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே கடந்த  23ம்  தேதி அன்று சமையல் எரிவாயு கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது.இதில் வெங்கடபிரகாஷ் அவரது மனைவி கீதா, மகள் சர்மிளா, மகன் கிஷோர் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து அவர்களுக்கு சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில்   சிகிச்சை அளிக்கப்பட்டு […]

3 Min Read
Default Image

சென்னையில் ஏ.டி.எம்.மில் பணம் கொள்ளை!தூத்துக்குடியை சேர்ந்த ஓட்டுனரை தேடும் பணியில் போலீஸ் ..

  சென்னையில் உள்ள ஏ.டி.எம்.மில்  பணம் நிரப்ப சென்ற வேனில் இருந்து சுமார் 28 லட்சம் மதிப்புள்ள பணத்துடன் வேனின் டிரைவர் மாயமானார்.அவரை தேடும் பாணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.சென்னையில் நந்தனத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது .வேனை ஓட்டியவர் உதயகுமார் .இவர்  தூத்துக்குடியை சேர்த்தவர் அவர் .போலீஸ் தீவிர தேடுதல் .

1 Min Read
Default Image

நெல்லை அருகே தாழ்த்தப்பட்ட மக்கள் வழிபட தடை !வருவாய் வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை !

திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகு உள்ள திருமலாபுரம்.அங்கு ஒரு கோவில் உள்ளது .இங்கு வழிபாடு செய்ய அனைவருக்கும் சம உரிமை உண்டு இருந்தாலும் அங்கு தலித் மக்கள்  வழிபாடு செய்யகூடாது  என்று வட்டாச்சியர் கூறுவதாக அங்கு வழிபட  முடியாமல் உள்ளனர் .இந்நிலையில் அதை கண்டித்து அந்த ஊர் மக்கள் அனைவரும் முற்றுகையிட்டனர். அவர்கள்  திருமலாபுரம் தலித் மக்களின் வழிபாட்டு உரிமையை முடக்கும் வகையில் செயல்பட்டுவரும் மானூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர் .பின்பு அவர்கலுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு […]

2 Min Read
Default Image

தொடரும் உயிர் பலி !என்னதான் செய்கிறது அரசு?

தமிழகத்தை ஆட்டிபடைக்கும்  ஒரு நோய்தான் டெங்கு .இது ஒரு வகையான காய்ச்சல் ஆகும்.நாளுக்கு நாள் இது உயிர் பலி வாங்கி கொண்டு தான் இருக்கிறது.ஆனால்  இன்று ஒரு நாள்  மட்டும் இது வரை மூன்று  பேர்  உயிரிழந்து உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .இதற்கு தீர்வு எப்போது தான் கிடைக்கும் நாளுக்கு  நாள் உயிர் மட்டும் பலியாகி   கொண்டே இருக்கிறது.தமிழக அரசு என்னதான் செய்கிறது ?   

health 1 Min Read
Default Image

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு !வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் காலநிலை மாறி மாறி  வரும் நிலையில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு  மையம்  கூறியுள்ளது .இன்று அல்லது நாளையாவது வடகிழக்கு கனமழை தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா ,ராயலசீமா,தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவ மலை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சிமையம் தகவல். 

#Weather 1 Min Read
Default Image

மற்றொரு உயிரும் பிரிந்தது !நெல்லை சம்பவம் ….

நெல்லையில் நடத்து தமிழ்நாட்டையே அதிர வைத்த  சம்பவம் கந்து வட்டி கொடூரம் .இதில் நான்கு பேர் சில்லேச்ட்டர் அலுவலகம் முன் தீக்குளித்தனர்.அதில் மூன்று பேர் மரணம் அடைந்த நிலையில் இசக்கி முத்து மட்டும் அவசர பிரிவில் இருந்தார் .இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார் .ஆகவே நெல்லையில் தீக்குளித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆனது. கந்துவட்டி காரணமாக நெல்லையில் தீக்குளித்த 4 பேரும் உயிரிழந்தனர். இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுதிள்ளது . 

2 Min Read
Default Image