தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு. தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்துக்கு ரூ.27.50 கோடி ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. கத்திரி, மிளகாய், தக்காளி, மஞ்சள், கொத்தமல்லி உள்ளிட்ட பயிர்களுக்கான விதைகள், நடவுகன்றுகளை 40% மானியத்தில் வழங்க தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. விதைகள், நடவுகன்றுகளை மானிய விலையில் வழங்க ரூ.8.44 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தோட்டக்கலை திட்டத்திற்கு பதிவு செய்ய தமிழக அரசு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, tnhorticulture.tn.gov.in […]
தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. ஒவ்வொரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று. அப்படித்தான் தற்போது தமிழக அரசு, 6 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது. அவர்களை வெவ்வேறு துறைக்கு முக்கிய பொறுப்பில் அமர்த்தியுள்ள்ளது தமிழக அரசு. மாற்றப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், ஜவகர், கார்த்திக், மணிவாசன், மங்கத்ராம் சர்மா, ஆனந்த், மதுமதி ஆகியோர் தான் இடமாற்றம்செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் செயலாளராக ஐ..ஏ.எஸ் […]
நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும் மற்ற குறிப்பிட்ட மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் பெரும்பாலும் நிரம்பி வருகின்றன. இந்நிலையில், தற்போது, வானிலை ஆய்வு மையம் தெரிவித்த தகவலின் படி, நீலகிரி மாவட்டத்தில் கனமழை முதல் கனமழையும், கோவை, தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. \ மேலும், […]
தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு வரும் அக்டோபர் 1-ம் தேதி தேர்வு நடைபெறும் என அறிவிப்பு. தமிழ் மொழி இலக்கிய திறனறிவுத் தேர்வு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழ் மொழி திறனறிவுத் தேர்வுக்கு தமிழ் தெரிந்த 11-ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம் என்றும் http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 22 முதல் செப்டம்பர் 9 வரை விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 1,500 மாணவர்கள் […]
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 137.5 அடியை எட்டியுள்ள நிலையில், கேரளாவிற்கு உபரி நீர் திறப்பு. முல்லை பெரியாறு அணையில் இருந்து நீரை திறக்கக் கோரி முதல்வர் முக ஸ்டாலினுக்கு, கேரளா முதல்வர் பினராயி விஜயன் கடிதம் எழுதிருந்தார். முல்லை பெரியாறு அணை 137 அடியை கடந்த நிலையில், படிப்படியாக நீரை இப்போதிலிருந்தே திறக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில், முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவிற்கு உபரி நீர் திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு […]
பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித் தொகையினை 3 ஆயிரமாக உயர்வு. பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர்களுக்கான திருமண உதவித்தொகையினை 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. செய்தித்துறை அமைச்சர் அவர்கள், 2021-22-ஆம் ஆண்டிற்கான சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடரில், செய்தி மற்றும் விளம்பரம் தொடர்பான மானியக் கோரிக்கையின் விவாதம் நடைபெற்றது. அப்போது, பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அனைத்துத் திட்டங்களையும் ஒருங்கிணைத்து, நலவாரிய உதவித் தொகைகள் மற்றும் நலத் […]
சர்வதேச சந்தை நிலவரத்தை படி கச்சா எண்ணெய் விலையை அடிப்படையாக கொண்டு பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன இந்த நிலையில்,76-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலையில் எந்த மாற்றமும் இன்றி அதே விலையில் தொடர்கிறது. சென்னையில் இன்று(ஆகஸ்ட் 5) பெட்ரோல் 1லிட்டர் ரூ.102.63க்கும், டீசல் 1லிட்டர் ரூ.94.24க்கும் விலை மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவு ரத்து. கருமுட்டை விவகாரத்தில் ஈரோடு சுதா மருத்துவமனைக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்றம். கருமுட்டை விவகாரத்தில் இராசு சுதா மருத்துவமனைக்கு வைத்த சீலை அகற்ற தனி நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில், தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்தது சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு. சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு […]
கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு. கச்சநத்தத்தில் கடந்த 2018ல் நடந்த மோதலில் பட்டியலினத்தவர் 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 27 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து சிவகங்கை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2018ல் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட மோதலையடுத்து ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் கச்சநத்தம் கொலை வழக்கில் 27 பேர் குற்றாவளிகள் […]
பெண் பணியாளர்களுக்கு குழந்தை பராமரிப்பு விடுப்பு தொடர்பாக தமிழ்நாடு அரசு அரசாணை வெயிட்டுள்ளது. வாடகை தாய் மூலம் குழந்தை பெறும் அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் பெண் பணியாளர்களுக்கு 270 நாட்கள் குழந்தை பராமரிப்பு விடுப்பு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகள் பெறுவது தற்போது அதிகரித்து வருகிறது. இந்த சமயத்தில் தத்தெடுக்கும் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் தத்தெடுப்பு விடுப்பிற்கு நிகராக மாற்று கருவறை தாய் மூலம் குழந்தைகளை […]
தகுதியான ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும் என தலைமை செயலாளர் உத்தரவு. அரசு ஊழியர்கள் அனைவருக்கும் உரிய காலத்தில் முறையான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், தகுதியுள்ள அரசு ஊழியர்கள் பதவி உயர்வு பெறாமல் ஓய்வு பெறுவதை தவிர்க்க வேண்டும். ஓய்வுபெறும் நாளென்று செயற்கை பணியிடங்களை ஏற்படுத்தி பதவி உயர்வு மேற்கொள்ளப்படுவதாகவும், இதனால் பதவி உயர்வு பெற்று முழு […]
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல். தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 7ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. […]
ஏலத்தில் ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்பட்ட சில நாட்களில், கியர் தயாரிப்பாளர்களான எரிக்சன், நோக்கியா மற்றும் சாம்சங் ஆகியவற்றுடன் 5ஜி நெட்வொர்க் ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக பாரதி ஏர்டெல் இன்று அறிவித்தது. சுனில் மிட்டல் தலைமையிலான நிறுவனம் சமீபத்தில் 900 மெகா ஹெர்ட்ஸ், 1800 மெகா ஹெர்ட்ஸ், 2100 மெகா ஹெர்ட்ஸ், 3300 மெகா ஹெர்ட்ஸ் மற்றும் 26 ஜிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகா ஹெர்ட்ஸ் ஸ்பெக்ட்ரம் வாங்கியது. நடந்து முடிந்த ஏலத்தில் ₹ 43,084 கோடி மதிப்பிலான ஸ்பெக்ட்ரம் […]
புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தகவல். சென்னையின் 2 வது விமான நிலையம் பரந்தூரில் அமைய உள்ளது. இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரந்தூரில் புதிய விமான நிலையம் அமையும் பட்சத்தில் ஸ்ரீபெரம்பத்தூர் பகுதியில் இரண்டாம் தொழிற்புரட்சி ஏற்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க தற்போது 4,000 ஏக்கர் நிலம் தயாராக உள்ளது என்றும் விமான […]
சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் […]
அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை. அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்து, தனி நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தலைமை நீதிபதி […]
கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ள்ளது. தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது, நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அரசு பாதுகாப்பு கருதி அவசர எண்களை அறிவித்துள்ள்ளது. […]
ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ஹோண்டா இந்தியாவில் வரையறுக்கப்பட்ட பதிப்பான டியோ ஸ்போர்ட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது மற்றும் விலை ரூ.68,317 (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) தொடங்குகிறது. ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிசன் வாகனத்தை அருகிலுள்ள ஹோண்டா ரெட்விங் ஷோரூமில் அல்லது இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்ட் வேரியன்டின் விலை ரூ.68,317 ஆகவும், டீலக்ஸ் வேரியன்ட்டின் விலை ரூ.73,317 […]
நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார். ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , […]
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரையில் பணம் இழந்ததால், ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் எனும் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார். ஆன்லைன் தமிழ் விளையாடி அதிக பணம் ஈட்ட முடியும் என ஓர் கற்பனை உலகத்தில் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்து அதிக கடனையும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் இது தொடர் கதையாக நின்று கொண்டே போகிறது தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு இடம் யார் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இவர் […]