முடங்குகிறதா தமிழகம் !தாகத்தில் தமிழகம் !தண்ணீரை தேடி அலையும் மக்கள்

Published by
Venu

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு என்ற வள்ளுவனின் குறல் தமிழர்கள்  அனைவரும் அறிந்த ஒன்றே.அந்த வகையில் நீர் என்பது மனிதனின் வாழ்க்கையில் மிகவும் முக்கியமான காரணி ஆகும்.நம் முன்னோர்கள் கூட அந்த காலத்தில் கூறுவார்கள்,உணவு இல்லாமல் கூட நாம் ஒரு சில தினங்கள் வாழ முடியும்,ஆனால்  தண்ணீர் மட்டும் இல்லை என்றால் மனிதன் ஒரு நாள் உயிர் கூட வாழ முடியாது என்று..
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கடும் வறட்சி நிலவி வருகிறது.இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது மழைக்காலங்களில் மழைநீரை சேமித்து வைக்காததுதான்.ஆம் அதுவும் ஒரு முக்கிய காரணியாக உள்ளது.மேலும் தமிழகத்தை வெளுத்து வாங்கிய அக்னி நட்சத்திரமும் ஒரு காரணம் ஆகும்.
இந்த வகையில் தென் மாவட்டங்களை காட்டிலும்  வட மாவட்டங்கள் வறட்சியால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தின் முக்கிய நீர் நிலைகளும் வறண்டு காணப்படுகிறது.இதன்விளைவாக ஓட்டல்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளது.
அன்றாட குடிநீருக்கு தண்ணீர் லாரிகளையே நம்பியுள்ளனர்  மக்கள்.ஆனால் தற்போது அந்த லாரிகளுக்கே தண்ணீர் நிரப்ப தண்ணீர் இல்லை.  உணவை சமைக்க கூட போதிய தண்ணீர் இல்லை என்று புலம்புகிறார்கள் சென்னையில் ஹோட்டல் வைத்துள்ளவர்கள்.இதனால் வாடிக்கையாளர்களிடம் தங்களது வருத்தத்தை தெரிவித்து வருகின்றது.ஒரு சிலர் தங்களது உணவகங்களை முடியும் வருகின்றனர்.

அதற்கு ஒரு படி மேலே ஐ.டி.நிறுவனங்கள் தண்ணீர் தட்டுப்பாட்டால் தங்களது ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுரை வழங்கியுள்ளது.தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக தலைநகர் சென்னையில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கியுள்ளன.
மேலும் கால்நடைகளை வைத்துள்ளவர்களும் இதற்கு தப்ப வில்லை.தங்களது கால்நடைகளுக்கு உணவிற்கு பின் தண்ணீர் வைக்க சிரமப்பட்டு வருகின்றனர்.பல ஊர்களில் தண்ணீருக்காக பல மணிநேரங்கள் காத்திருந்தும் ,பல கிலோமீட்டர் தூரங்கள் நடந்து சென்று வாங்கி வருகின்றனர்.

Published by
Venu

Recent Posts

எங்களுடைய கூட்டணி ஆட்சியமைக்ககும் என்றுதான் அமித்ஷா சொன்னார்..இபிஎஸ் விளக்கம்!

சென்னை : அடுத்த ஆண்டு (2026) நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவிருக்கிறது. தேர்தலுக்கான வேலைகளில் இரண்டு…

31 minutes ago

நல்லா விளம்பரம் பண்றீங்க..ரொம்ப நன்றி! இபிஎஸ்க்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த பதிலடி!

சென்னை : மக்களின் குறைகளை விரைவாகத் தீர்க்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை ஜூலை 15-ஆம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின்…

1 hour ago

நிமிஷா பிரியா வழக்கு : “கொலையை நியாப்படுத்த முடியாது..தண்டிக்கப்படணும்” இறந்தவரின் சகோதரர் பேச்சு!

டெல்லி : ஏமனில் கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மஹ்தி என்பவரைக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியாகக் கருதப்பட்டு கேரளாவைச்…

2 hours ago

மதுரை : விஜயகாந்தின் பிறந்தநாள் அன்று த.வெ.க 2-வது மாநில மாநாடு?

மதுரை :தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு…

3 hours ago

இனிமே ரூ.200 தான் டிக்கெட் விலை…குட் நியூஸ் சொன்ன கர்நாடக அரசு!

கர்நாடகா : இனிமேல் கர்நாடகாவில் வெளியாகும் அனைத்து மொழி படங்களுக்கு டிக்கெட் விலை ஒவ்வொரு திரையரங்குகளில் ரூ.200 ஆக இருக்கவேண்டும்…

3 hours ago

ரோஹித் – கோலி ஓய்வு பெற அழுத்தம் கொடுக்கப்பட்டதா? விளக்கம் கொடுத்த பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் 2025 மே மாதத்தில் டெஸ்ட்…

5 hours ago