முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என முதல்வர் பழனிசாமி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.
தமிழகத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காணொலிக்காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே பொதுமுடக்கம் மே 3ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது, பேரூராட்சி, நகராட்சிக்குள் கொரோனா கட்டுக்குள் வந்தாலும், மாநகராட்சிக்குள் கட்டுக்குள் வரவில்லை என்றும் தமிழகத்தில் சென்னையைத் தவிர்த்து கொரோனா பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய தேவையான நடவடிக்கைகளை ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும். இதன்பின் ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் தேதி மற்றும் நேரத்தை பொதுமக்களிடம் தெளிவாக சொல்ல வேண்டும் என கூறியுள்ளார். வேளாண் சார்ந்த தொழில்கள் மற்றும் விளைபொருட்கள் கொண்டு செல்வதை யாரும் தடுக்கக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முகக்கவசம், தனிநபர் இடைவெளியுடன் 100 நாள் வேலைத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அதிக ஆட்கள் இருந்தால் 2 அல்லது 3 ஆக பிரித்து பணியை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக 100 நாள் வேலைத்திட்டத்தில் 55 வயதுக்கு மேற்பட்டவர்களை தவிர்த்து, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு பணி தரலாம் எனவும் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…
சென்னை : கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே பள்ளி வேன் மீது ரயில் மோதி 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்திற்கு…