சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் கைது..!

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வந்தார். துணைவேந்தராக பணியாற்றும் அதே வேளையில் வர்த்தக ரீதியான நிறுவனத்தை பெரியார்

Featured image

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக ஜெகநாதன் பணியாற்றி வந்தார். துணைவேந்தராக பணியாற்றும் அதே வேளையில் வர்த்தக ரீதியான நிறுவனத்தை பெரியார் பல்கலைக்கழகத்தில் தொடங்கியதாக இன்று அவர் மீது புகார் ஒன்று கொடுக்கப்பட்டது.

அதில், பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ள ஜெகநாதன் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து போலி ஆவணங்கள் தயாரித்து பூட்டர் என்ற தனி நிறுவனத்தை தொடங்கியுள்ளார் என சேலம் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் இளங்கோவன் புகார் அளித்தார்.

அந்தபுகாரின் பெயரில் அரசு செலவில் அலுவலர்களை பயன்படுத்தியது, தனி  நிறுவனங்களை தொடங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டில் துணைவேந்த ஜெகன்நாதனை போலீசார் கைது செய்துள்ளனர். துணைவேந்தர் ஜெகநாதனை கைது செய்து சேலம்  கருப்பூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.