திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.
தமிழகத்தில் 10 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு முதலாம் திருப்புதல் தேர்வு (return exam) ஜனவரி 19 முதல் தொடங்குகிறது என்று அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிவித்திருந்தார். 10ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 – 27 வரையிலும், 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21- 26 வரை நடைபெறும்.
இதுபோன்று 12ம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் திருப்புதல் தேர்வு ஜனவரி 19 முதல் 28 வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான 2ம் திருப்புதல் தேர்வு மார்ச் 21 முதல் 29 வரை நடைபெறும் என்று தேர்வுத்துறை அறிவித்திருந்தது.
இதனிடையே தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் தொற்று நாள்தோறும் அதிகரித்து வரும், ஜனவரி 31 வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீட்டித்து தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும். கூடுதல் கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது.
இதனால், திட்டமிட்டபடி 10, 12 வகுப்புகளுக்கும் திருப்புதல் தேர்வு நடைபெறுமா? என்று மாணவர்கள் மத்தியில் சந்தேகம் இருந்து வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் 10 மற்றும் 12- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டமிட்டபடி ஜனவரி 19-ஆம் தேதி திருப்புதல் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சண்டிகர் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் முதல் குவாலிஃபயர் போட்டி இன்று மகாராஜா யாதவிந்திர சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
கர்நாடகா : கமல்ஹாசன் நடித்துள்ள தக்லைஃப் திரைப்படம் வரும் ஜூன் 1-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக…
நோர்வேயில் : நார்வே செஸ் போட்டியில் இந்தியாவின் உலக சாம்பியன் டி. குகேஷ் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்து…
மக்கா : விமானத்தைத் தவறவிட்ட நபரை மீண்டும் விமானமே அழைத்து சென்ற அதிசிய சம்பவம் ஒன்று நடந்துள்ளது. லிபியாவைச் சேர்ந்த அமீர்…
சென்னை : பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அதனை இன்னும் பெரிய அளவில்…