தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 வரை நடைபெறும் என்பதால், அதுவரை காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தின் 16 ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் துவக்க உரையாற்றி,தொடங்கி வைத்தார்.
மேலும்,நேற்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத்தொடர் வருகின்ற ஜூன் 24 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அதன்படி,பேரவையின் 2 வது நாள் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது.
இந்நிலையில்,தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறுவதால், அதுவரை காவலர்கள் அனைவருக்கும் விடுமுறை கிடையாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்,இது தொடர்பாக,டிஜிபி அலுவலகம் கூறியதாவது
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் வரும் ஜூன் 24ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.அவ்வாறு கூட்டம் நடைபெறும்போது,ஏதேனும் சட்ட, ஒழுங்கு சிக்கல்கள் ஏற்பட்டால், அவை சட்டப்பேரவையில் எதிரொலிக்கும் என்பதால்,அவற்றை தடுக்கும் விதத்தில் காவல்துறையினர் அனைவரும் மிகக் கவனமுடன் இருக்க வேண்டும்.எனவே,மாநிலம் முழுவதும் எவ்வித குற்றச்செயல்களும் ஏற்படாமல் பாதுகாக்க வேண்டிய கட்டாயம், காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் காவல்துறையில் உள்ள அனைத்து அதிகாரிகள், காவலர்களுக்கு விடுமுறை வழங்க கூடாது என டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து காவல்நிலைய அதிகாரிகளும் கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…