போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் – காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம்

nlc

என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்த ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், பணி நிரந்தரம் செய்யும் வரை மாதம் ரூ.50 ஆயிரம் ஊதிய வழங்க வேண்டும் உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  பல்வேறு கட்டங்களில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி முதல் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் என்எல்சி
ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடந்தது. இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர்களின் கோரிக்கைகளை தற்போதைக்கு ஏற்க இயலாது என என்எல்சி தெரிவித்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இதனை தொடர்ந்து, தற்போது போராட்டக்காரர்களை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கடலூர் மாவட்ட காவல்துறைக்கு என்எல்சி நிர்வாகம் கடிதம் எழுதியுள்ளது. போராட்டத்தால் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்க வேறு இடத்திற்கு மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai