Pudukottai Loksabha Constituency [File Image]
NOTA : புதுக்கோட்டை தொகுதி மீட்பு குழுவினர் நோட்டாவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது பெரும்பாலும் மாவட்ட ரீதியிலும், சட்டமன்ற தொகுதி மக்கள் தொகை கணக்கிட்டும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போதும், இன்னும் திருச்சி மாவட்ட மக்களவை தொகுதியுடன் தான் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.
இதனால், புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டு எடுக்க வேண்டும் என தொகுதி மீட்பு குழு ஒன்று அப்பகுதியினரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழு 2009ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல்களில் நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
இந்த குழுவினரின் பிரச்சார எதிரொலியாக கடந்த 2009 ஆம் ஆண்டு தேர்தலில் நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 51,000 வாக்குகள் NOTAவுக்கு கிடைத்தன. கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 43,000 வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.
இந்த முறையும், புதுக்கோட்டை தொகுதி மீட்புக்குழுவினர், புதுக்கோட்டை தொகுதியை மீட்க, NOTA விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். எப்படியாயினும் புதுக்கோட்டை தனி மக்களவை தொகுதியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
சென்னை : கைதி திரைப்படத்தின் முதல் பாகம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து…
சென்னை : நேற்று ஒரிசா கடலோரப்பகுதிகளை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று (28-05-2025) காலை 05.30…
ரஷ்யா : 2022 முதல் ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்க முயல்கிறது, இதனால் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது.…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணியும், லக்னோ அணியும் ஏகானா கிரிக்கெட் மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் 23 அன்று ஒரு மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான…