தேர்தல் களத்தில் நோட்டா பிரச்சார குழு.. புதுக்கோட்டையில் நூதன போராட்டம்.!

Published by
மணிகண்டன்

NOTA : புதுக்கோட்டை தொகுதி மீட்பு குழுவினர் நோட்டாவுக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மொத்தம் 39 மக்களவை தொகுதிகள் உள்ளன. இது பெரும்பாலும் மாவட்ட ரீதியிலும், சட்டமன்ற தொகுதி மக்கள் தொகை கணக்கிட்டும் தொகுதிகள் பிரிக்கப்பட்டன. ஆனாலும், புதுக்கோட்டை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்ட போதும், இன்னும் திருச்சி மாவட்ட மக்களவை தொகுதியுடன் தான் இணைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறது.

இதனால், புதுக்கோட்டை மக்களவை தொகுதியை மீட்டு எடுக்க வேண்டும் என தொகுதி மீட்பு குழு ஒன்று அப்பகுதியினரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த குழு 2009ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற தேர்தல்களில் நோட்டாவிற்கு வாக்களிக்க கோரி பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இந்த குழுவினரின் பிரச்சார எதிரொலியாக கடந்த  2009 ஆம் ஆண்டு தேர்தலில் நோட்டாவிற்கு 15 ஆயிரம் வாக்குகள் பதிவாகின. 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 51,000 வாக்குகள் NOTAவுக்கு கிடைத்தன. கடைசியாக நடைபெற்ற 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சுமார் 43,000  வாக்குகள் நோட்டாவில் பதிவாகின.

இந்த முறையும், புதுக்கோட்டை தொகுதி மீட்புக்குழுவினர், புதுக்கோட்டை தொகுதியை மீட்க, NOTA விற்கு வாக்களிக்க வேண்டும் என்று தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். எப்படியாயினும் புதுக்கோட்டை தனி மக்களவை தொகுதியாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Recent Posts

படப்பிடிப்பில் ஆக்ஷன் காட்சியின்போது ஷாருக் கானுக்கு பலத்த காயம்.?

மும்பை : மும்பையில் உள்ள கோல்டன் டொபாக்கோ ஸ்டூடியோவில் ‘கிங்’ படத்தின் படப்பிடிப்பின்போது நடிகர் ஷாருக்கான் ஒரு தீவிரமான ஆக்‌ஷன்…

6 minutes ago

கும்மிடிப்பூண்டியில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்.., சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மாணவன் கைது.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே சமீபத்தில் நடந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து, ஜூலை 19, 2025 அன்று வெளியான தகவல்களின்படி,…

30 minutes ago

மு.க.முத்துவின் உடலுக்கு துணை முதல்வர் உதயநிதி நேரில் அஞ்சலி.!

சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மூத்த சகோதரரும், முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் மூத்த மகனுமான மு.க.முத்து (வயது 77)…

3 hours ago

கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்து மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்.!

சென்னை : முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க. முத்து (வயது 76) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள…

3 hours ago

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை – குற்றவாளி புகைப்படம் வெளியீடு.., தேடும் பணி தீவிரம்.!

திருவள்ளூர் : கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கம் பகுதியில், கடந்த சனிக்கிழமை (12.07.2025) 10 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்து பாட்டி…

3 hours ago

திருச்செந்தூர் அருகே இரண்டு பள்ளி வாகனங்கள் மோதி 3 மாணவர்கள் காயம்.!

தூத்துக்குடி : திருச்செந்தூர் அருகே உள்ள சேதுக்குவாய்த்தான் பகுதியில் நேற்று (ஜூலை 18) மாலை இரண்டு பள்ளி வாகனங்கள் நேருக்கு…

4 hours ago