ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கை : தேதி குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்

Published by
Venu
  • ராதாபுரம் தொகுதியில்  கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்தது.
  • ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட தடை கோரிய வழக்கின் விசாரணையை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

அதிமுக வேட்பாளர் இன்பதுரை 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற  தேர்தலில் பெற்ற வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் அப்பாவு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.அவரது  வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம்,கடைசி மூன்று சுற்று வாக்குகளையும், தபால் வாக்குகளை மட்டும் எண்ண உத்தரவு பிறப்பித்தது.இந்த உத்தரவுக்கு எதிராக அதிமுகவின் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வருகின்ற 11-ஆம் தேதி வரை வெளியிட தடையை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. டிசம்பர் 11ஆம் தேதி இறுதி விசாரணை நடைபெறும் என்றும் தெரிவித்தது.ஆனால் தற்போது மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கை ஒத்திவைக்குமாறு, இன்பதுரை தரப்பு வழக்கறிஞர்  முறையீடு செய்ததை தொடர்ந்து ,அதனை ஏற்று நீதிபதிகள் விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஜனவரிக்கு ஒத்திவைத்தனர்.

Recent Posts

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

உயிரிழந்த பெண் யானை.., வயிற்றில் ஆண் குட்டி.! காக்கத் தவறியது ஏன்?

கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…

18 minutes ago

உள்ளாட்சி இடைத்தேர்தலை நடத்த தடை – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.!

மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…

1 hour ago

விவாகரத்து வழக்கு: ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி.!

சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…

2 hours ago

MI vs DC: பிளே ஆஃப் செல்ல கேள்வி குறி? குறுக்கை வரும் மழை.., போட்டி நடக்குமா?

மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…

2 hours ago

இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம்! குவியும் வாழ்த்துக்கள்!

சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…

10 hours ago

போஸ் கொடுப்பது மட்டும்தான் பிரதமரின் வேலையா? – மல்லிகார்ஜுன கார்கே கேள்வி!

டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…

10 hours ago