வேலூர் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் நிறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்பட்டு உள்ள கடும் குடிநீர் தட்டுப்பாட்டு காரணமாக ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலமாக சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல தமிழக அரசு ரூ .65 கோடி நிதி ஒதுக்கியது.ஜோலார்பேட்டையில் உள்ள மேட்டு சக்கரகுப்பம் பகுதியில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் தரைமட்ட நீர்த்தேக்க தொட்டியில் இருந்து ரயில் நிலையத்திற்கு ராட்சத குழாய் மூலம் தண்ணீர் எடுத்து செல்லப்பட்டு அங்கு 50 வேகன்கள் கொண்ட ரயில் மூலமாக சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு விநியோகம் செய்யப்பட்டது.
தற்போது சென்னை ஏரிகளில் உள்ள நீர் இருப்பு மேலும் அதிகரித்து வரும் நிலையில் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் தண்ணீர் கொண்டுவரும் பணிகள் இன்றுடன் நிறுத்தப்படுகிறது .ரயில் மூலம் இதுவரை 39.25 கோடி லிட்டர் தண்ணீர் சென்னைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…
டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…
சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…
டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் வெளியுறவுத்துறை, பாதுகாப்புத்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த வெளிவுறவு துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி, பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோபியா குரேஷி,…