நாளை பரோலில் வெளிவருகிறார் ரவிச்சந்திரன் – சிறைத்துறை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை அறிவிப்பு.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், ரவிச்சந்திரன் மதுரை மத்திய சிறையில் உள்ளார். ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோல் வழங்க வேண்டும் என முதல்வரிடம் ரவிச்சந்திரன் தாய் தரப்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதையடுத்து, ரவிச்சந்திரனுக்கு 30 நாள் பரோலில் வெளியே செல்ல தமிழக சிறைத்துறை உத்தரவை வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று மதுரை மத்திய சிறையில் இருந்து ரவிச்சந்திரன் பரோலில் வெளியே வருகிறார் என கூறப்பட்டது.
இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் நாளை பரோலில் வெளிவருகிறார் என்று சிறைத்துறை தெரிவித்துள்ளது. மழை, வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் மதுரை வழியாக குமரி சென்றதால் பாதுகாப்பு காரணங்களுக்காக சிறை நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025