தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி ஆகிய 4 மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதியில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி படி படியாக புயலாக மாற வாய்ப்புள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில், நாளை முதல் தமிழகம், கேரளா மற்றும் கர்நாடகாவில் 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்றும், தேனி, கோவை, திண்டுக்கல், நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதால் இந்த 4 மாவட்டங்களு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேலும் அடுத்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, தேனி, கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, நீலகிரி, நெல்லை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 40 கிமீ வேகத்தில் இடி மின்னல் சூறை காற்றுடன் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் ஏனைய மாவட்டங்கள் பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாப்புள்ளதாகவும், அரபிக் கடலில் 50 கிமீ முதல் 60 கிமீ வரை காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…
புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நேற்று இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் எனும் பெயரில் பாகிஸ்தான்…
டெல்லி : ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று நேற்றுடன் 4 ஆண்டுகள் நிறைவு பெற்று 5ஆம்…
பஞ்சாப் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் உள்ள…