கோவை மாநகராட்சியை இழிவுபடுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு வெளியே பேனர் வைத்த ஹோப் கல்லூரி சந்திப்பில் வசிப்பவரை சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் கொரோனா இல்லாத 4 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்து அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது கோவை மாநகராட்சி. மாநகராட்சியை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அக்குடும்பத்தினர் பேனர் வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைத்த குடும்பத்தினர் மீது மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பேனர் வைத்த ஜி. இளவரசன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவு தடுப்பு) சட்டத்தின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் தனது வீட்டிற்கு வெளியே தடுப்புகளைத் தூக்கி COVID-19 தனிமைப்படுத்தலை மீறியதாகவும், பேனரை அகற்றச் சென்ற கார்ப்பரேஷன் தொழிலாளர்களைத் தடுக்க முயன்றதாகவும் போலீசார் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…