கோவை மாநகராட்சியை இழிவுபடுத்தி, தனிமைப்படுத்தப்பட்ட வீட்டிற்கு வெளியே பேனர் வைத்த ஹோப் கல்லூரி சந்திப்பில் வசிப்பவரை சிங்கநல்லூர் போலீசார் கைது செய்தனர்.
கோயம்புத்தூரில் உள்ள ஹோப் கல்லூரி பகுதியைச் சேர்ந்த ஒரு வீட்டில் கொரோனா இல்லாத 4 பேருக்கு கொரோனா இருப்பதாக தெரிவித்து அப்பகுதியை கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்தது கோவை மாநகராட்சி. மாநகராட்சியை கண்டித்து சில தினங்களுக்கு முன்பு அக்குடும்பத்தினர் பேனர் வைத்தனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பேனர் வைத்த குடும்பத்தினர் மீது மாநகராட்சி நிர்வாகம் புகார் அளித்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் பேனர் வைத்த ஜி. இளவரசன் என்பவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் பிரிவு 4 தமிழ்நாடு திறந்தவெளி (சிதைவு தடுப்பு) சட்டத்தின் கீழ் சிங்காநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவர் தனது வீட்டிற்கு வெளியே தடுப்புகளைத் தூக்கி COVID-19 தனிமைப்படுத்தலை மீறியதாகவும், பேனரை அகற்றச் சென்ற கார்ப்பரேஷன் தொழிலாளர்களைத் தடுக்க முயன்றதாகவும் போலீசார் குற்றம் சாட்டினர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் கைது செய்யப்பட்டார், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…