தகுதியுள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ரூ.1000 உரிமைத்தொகை – அமைச்சர் சக்ரபாணி

Published by
பாலா கலியமூர்த்தி

தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 கட்டாயம் வழங்கப்படும் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்றது. இதில், தமிழக அரசின் மாநில பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதம்  நடைபெற்றது. அப்போது, ஏழ்மை குடும்பம் மட்டுமல்லாமல் தகுதியுள்ள அனைத்து இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் கண்டிப்பாக செய்லபடுத்துவார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இதனிடையே, திமுகவின் தேர்தல் அறிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது இல்லத்தரசிகளுக்கான ரூ.1000 வழங்கும் திட்டம். தங்களது ஒவ்வொரு செலவுக்கும் கணவரையோ, மகனையோ அல்லது வேறு யாரையேனும் எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களை கவுரவிக்கும் விதமாக மாதந்தோறும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படும் என திமுக வாக்குறுதியாக அறிவித்திருந்தது.

தமிழகத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் திட்டம், தமிழக அரசின் பட்ஜெட் தாக்கலில் கூட இடம்பெறவில்லை. திமுக  ஆட்சிக்கு வந்து 100 நாட்களை கடந்தும், இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இந்த திட்டத்தை தொடங்கவில்லை என அதிமுக, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

இதனிடையே, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை பெற ரேஷன் அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும் என பல்வேறு தவறான கருத்துகள் உலா வந்தன. இதுகுறித்து பட்ஜெட் தாக்கலின்போது நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறுகையில், இந்த திட்டத்தின் நோக்கமே குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி வழங்கவேதான். இதற்காக யாரும் குடும்பத் தலைவரின் பெயரை மாற்றத் தேவையில்லை என தெரிவித்திருந்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

சாத்தான்குளம் கிணற்றுக்குள் மூழ்கிய வேன் மீட்பு – 5 பேர் பலி.! முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.!

தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…

10 hours ago

RCB vs KKR : ரசிகர்ளுக்கு ஷாக்!! மழையால் கைவிடப்பட்ட போட்டி.., வெளியேறியது நடப்பு சாம்பியன்.!

பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…

10 hours ago

சென்னை சாலையில் திடீர் பள்ளம்.., உள்ளே சிக்கிய கார்.! மெட்ரோ நிர்வாகம் விளக்கம்!

சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…

13 hours ago

பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த ஹரியானா பெண் யூடியூபர் கைது.!

ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…

13 hours ago

RCB vs KKR: வெளுத்து வாங்கும் மழையால் டாஸ் போடுவதில் தாமதம்.!

பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…

14 hours ago

சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் பரவும் கொரோனா.., சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…

15 hours ago