தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
வீரமரணமடைந்த தமிழகத்தை சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக முதல்வர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். சிஆர்பிஎப் வீரர் சந்திர சேகர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்கவும் முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டையில் சந்திர சேகர் வீரமரணமடைந்தார். மேலும் சந்திர சேகரின் குடும்பத்திற்கு நேரில் ஆதரவு கூறவும், அரசு சார்பில் மரியாதையை செலுத்தவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதனிடையே, நேற்று ஜம்மு காஷ்மீர் பகுதி குப்ராவிலுள்ள கிரால்குண்ட் வங்கம்-காசியாபாத் என்ற இடத்தில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டாலும், சிஆர்பிஎஃப் படையினரிலும் 3 வீரர்கள் உயிரிழந்தனர். இதில், தமிழகத்தின் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திர சேகர் மற்றும் வெளிமாநிலத்தை சேர்ந்த அஷ்வினி குமார் யாதவ், சந்தோஷ்குமார் ஆகிய மூவர் வீரமரமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…