தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோர் கைது.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், இன்று ‘சக்கா ஜாம்’ என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘சக்கா ஜாம்’ என்பது மற்ற வாகனங்களை ஓட விடாமல் செய்யும் சாலை மறியல் போராட்டமாகும்.இந்த நிலையில், தமிழகம், புதுச்சேரி உள்பட நாடு முழுவதும் சக்கா ஜாம் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் உள்ளிட்டோரை காவல்துறை கைது செய்து வருகிறது.
ராஜஸ்தான் – ஹரியானா எல்லையான ஷாஜகான்பூரில் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொகாலி உள்ளிட்ட இடங்களிலும் சாலை மறியலில் ஈடுபட்டு உள்ளனர். இதுபோன்று தமிழகத்தில் ராஜபாளையம் அருகே சேத்தூர், கடலூர், தஞ்சை, சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து, சக்கா ஜாம் என்ற சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி புதுச்சேரி அண்ணாசாலை அருகே சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளை காவல்துறை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, விவசாயிகளின் சக்கா ஜாம் டெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்டில் இதுவரை நடைபெறவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…