தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் கருத்து.
தமிழகத்தில் மதுரை மருத்துவக் கல்லூரியில் ஹிப்போக்ரடிக் உறுதிமொழிக்கு மாறாக, சமஸ்கிருதத்தில் மாணவர்களை உறுதிமொழி எடுக்க வைத்த விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த சமஸ்கிருத உறுதிமொழி சர்ச்சையில் கல்லூரி முதல்வர் ரத்தினவேல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இதுபோன்று ராமநாதபுரம் மருத்துவக்கல்லூரியில் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே, இதுதொடர்பாக விசாரணை மேற்கொள்ளுவோம் என மருத்துவக்கல்வி இயக்குனர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், சமஸ்கிருதம் உறுதிமொழி குறித்த சர்ச்சை வலுத்து வரும் நிலையில், இதுகுறித்து பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறுகையில், தமிழை போன்று சமஸ்கிருதம் உன்னதமான மொழிகளில் ஒன்று என தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து பேசிய அவர், இலங்கை தமிழர்களின் நலனில் பாஜக எப்போதும் அக்கறை கொண்டுள்ளது. கச்சத்தீவை மீட்பது பாஜகவின் கொள்கைகளில் ஒன்று, விரைவில் கச்சத்தீவு இந்திய எல்லைக்குள் ஒன்றாகும் என குறிப்பிட்டார்.
சென்னை: அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் விஜய்யுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில்…
காசா : கடந்த இரண்டு ஆண்டுகளாக தினமும் சராசரியாக 28 குழந்தைகள் காசாவில் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள்…
சென்னை : தமிழ் திரைப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளரும், நடிகருமான வேலு பிரபாகரன் (வயது 68), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள…
நெல்லை : மாவட்டம் வீரவநல்லூரில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்த 17 வயது…
கூகுளின் Find My Device இப்போது Google Find Hub ஆக மாறி, ஆண்ட்ராய்டு ஃபோன்கள், இயர்பட்ஸ், புளூடூத் டிராக்கர்கள்…