திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர் – அமைச்சர் ஜெயக்குமார்.!

Published by
பாலா கலியமூர்த்தி

திமுகவின் B-டீமாக சசிகலாவும், தினகரனும் செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

சென்னையில் அம்மா மினி க்ளினி தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய மீன்வளத்துறை அமைச்சர், முதல்வர் பழனிசாமியின் அம்மா மினி க்ளினிக் திட்டம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று சென்னையில் பல்வேறு இடங்களில் 12 அம்மா மினி க்ளினிக் திறக்கப்படவுள்ளது. மக்களுக்காக அயராத உழைத்து வரும் அரசு அதிமுக தான். விருதுகளை அள்ளிக்குவிக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சசிகலா வருகையால் அதிமுகவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்பட்டு வருவதாக பேசப்படுகிறது என்று  செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்றைக்கு பார்த்தேன் டிடிவி தினகரன் கூட போட்டுருக்கார் பதற்றத்தில் அமைச்சர்கள் என்று, எங்களுக்கு தெரிந்து டிடிவி தான் இப்போது பதற்றத்தில் உள்ளார். ஏனென்றால், சசிகலா வெளியே வந்ததால், கணக்கு வழக்குகளை கேட்பார். சசிகலாவின் பணத்தை எல்லாம் டிடிவி தினகரன்  கொள்ளையடித்துவிட்டார். அந்த பதற்றத்தில் தான் தற்போது இருக்கிறார்.

இதன் காரணமாகத்தான் அதிமுகவை பார்த்து பதற்றத்தில் உள்ளார்கள் என கூறுகிறார். 100 சதவீதம் சசிகலாவை அதிமுகவில் இணைத்துக்கொள்ள வாய்ப்பு இல்லை என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். நாங்கள் தெளிவான முடிவை எடுத்துள்ளோம். ஆகையால், நாங்கள் தெளிவாக இருக்கும்போது, எதற்கு எங்களுக்கு பதற்றம் வரப்போகிறது. அதற்கு அவசியமே இல்லை. அதிமுகவை பொறுத்தவரை ஒரே நிலைதான். சசிகலா, தினகரன் மற்றும் அவர்கள் சார்ந்தவர்களுக்கு அதிமுகவில் இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு தொண்டன் என்ற அடிப்படையிலும், கட்சியின் அடிப்படையிலும் தான் புகார் அளித்தோம். பதவி அதிகாரத்தில் கொடுக்கவில்லை. எங்களுக்கு பதவி இரண்டாவது தான். கட்சியை காப்பாத்துவதற்கு பதவியை கூட தூக்கி எறிந்துவிட்டு, கட்சியா, ஆட்சியா என நினைத்தால், முதலில் எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என்றும் அதன்படியே புகார் அளிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார். சசிகலாவும், தினகரனும் திமுகவின் B-டீமாக செயல்படுகின்றனர் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago