கஜாவிற்கு கரம் நீட்டிய ராம்ராஜ் காட்டன்......!!45 லட்சம் மதிப்பிலான உடைகள் அனுப்பி வைப்பு..!!

கஜாவால் 4 மாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.புயலாக வந்த கஜா மக்களை மீள துயரை ஏற்படுத்தி விட்டு சென்றது.இதனால் 4 மாவட்ட மக்கள் உணவு,உடை,இருப்பிடம்

கஜாவால் 4 மாவட்ட மக்களின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.புயலாக வந்த கஜா மக்களை மீள துயரை ஏற்படுத்தி விட்டு சென்றது.இதனால் 4 மாவட்ட மக்கள் உணவு,உடை,இருப்பிடம் என அனைத்தும் இழந்து தவித்து வருகின்றனர்.

பல்வேறு தன்னார்வ நிறுவனங்களும்,இளைஞர்களும்,நடிகர்களின் மக்கள் மன்றங்களும்,உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் மாற்று துணிக்கூட இல்லாமல் தவித்து  வரும் மக்களுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனம் உதவிகரம் நீட்டியுள்ளது.

இந்த கொடூர கஜா புயலில் சிக்கிய மக்கள் மாற்று உடை அணிய  திருப்பூர் ராம்ராஜ் காட்டன் நிறுவனம் 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான பின்னலாடைகள் மற்றும் வேட்டி, சட்டைகள் மற்றும் சேலைகள் இவைகள் அனைத்தும் 3 லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு அனுப்பி வைத்தனர்.

DINASUVADU

கஜாவிற்கு கரம் நீட்டிய ராம்ராஜ் காட்டன்......!!45 லட்சம் மதிப்பிலான உடைகள் அனுப்பி வைப்பு..!!