இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு.
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டு காலத்திற்கு மேலாக பள்ளிகளில் நேரடியாக வகுப்புகளை நடத்த முடியாத சூழ்நிலை இருந்த நிலையில், பிப்ரவரி 1 முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு, மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றனர்.
பள்ளிகளில் பொதுத் தேர்வுக்கு முன்னதாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 27ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன. 19 முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெற்றது.
மேலும், 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு வருகிற 28-ந் தேதி முதல் தொடங்கி நடைபெற இருக்கிறது. முதற்கட்ட திருப்புதல் தேர்வில் வினாத்தாள் கசிவு ஆன விவகாரம் போல், மீண்டும் எந்த சம்பவமும் நடந்துவிடக் கூடாது என்பதில் பள்ளிக்கல்வித்துறை தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
இந்த நிலையில், 10, 12ம் வகுப்புகளுக்கான இரண்டாம் கட்ட திருப்புதல் தேர்வு விடைத்தாள்களை அந்தந்த பள்ளிகளிலேயே மதிப்பீடு செய்ய கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல்கட்ட திருப்புதல் தேர்வுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதன் காரணமாக முதன்மை கல்வி அலுவலர்கள் ஆணையிட்டுள்ளனர்.
ஏதேனும் ஒன்று லீக் ஆனாலும், மற்றொன்றைக் கொண்டு தேர்வு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 28-ம் தேதி தொடங்க உள்ள 10, 12-ம் வகுப்பு 2-ம் கட்ட திருப்புதல் தேர்வுக்கு 2 வகையான வினாத்தாள்களை தேர்வுத்துறை பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…