அது குட்டை தான்.. வளரவே செய்யாது.! பாஜக மீது செல்லூர் ராஜு கடும் விமர்சனம்.!

Published by
மணிகண்டன்

மதுரை: மதவாதத்தை முன்னிறுத்தும் பாஜக என்றுமே தமிழகத்தில் வளராது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

மக்களவை தேர்தலில் அதிமுக தமிழகத்தில் போட்டிட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை தழுவியது. சில இடங்களில் மூன்றாம் மூன்றாம் இடம் பிடிக்கும் அளவுக்கு தோல்வி கண்டது. பாஜக சில இடங்களில் அதிமுகவை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. இருந்தும், தமிழகத்தில் 39 தொகுதிகளும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது.

இந்த தேர்தல் தோல்வி குறித்தும், பாஜக குறித்தும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பாஜக குறித்து பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். அவர் கூறுகையில்,  அம்மாவின் (ஜெயலலிதா) கொள்கையை மீறி முன்னர் பாஜகவுடன் கூட்டணி வைத்ததற்கு நாங்கள் வருந்துகிறோம்.

மத்தியில் பாஜக ஆட்சி அமைத்து இருந்தாலும், அது ஓரு மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்து வரும் கட்சி. எப்போதும் நாடாளுமன்ற தேர்தலில் இரண்டு பார்வை உண்டு.  நாங்கள் மாநில உரிமை மீட்க கோரி மக்களிடம் வாக்கு சேகரித்தோம். அது மக்கள் மத்தியில் சரியாக சென்றடையவில்லை.மோடியை ஆதரித்தவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தனர். மோடியை எதிர்த்தவர்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்தனர். அவ்வளவு தான்.

இந்தியாவை ஆளும் கட்சி என்றாலும் மதத்தை வைத்து ஆட்சி செய்யும் பாஜக ஓர் குட்டை தான். தமிழகத்தில் பயணம் செய்து ஒரு விதமாக பேசும் பிரதமர் மோடி ஒடிசாவில் தமிழர்களை இழிவுபடுத்தி பேசுகிறார். ஓட்டுக்காக தமிழனை (வி.கே.பாண்டியன்) விமர்சிக்கிறார். தமிழக மக்கள் மதவாத அரசியலை ஏற்க மாட்டார்கள். மதவாதத்தை தூக்கி நிறுத்தும் பாஜக என்றுமே தமிழகத்தில் வளராது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

தங்கக் கடத்தல் வழக்கு: நடிகை ரன்யா ராவின் ரூ.34 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்.!

டெல்லி : தங்கக் கடத்தல் மற்றும் பணமோசடி வழக்கு தொடர்பாக கன்னட நடிகை ரன்யா ராவுக்குச் சொந்தமான ரூ.34.12 கோடி…

6 hours ago

இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!

பர்மிங்காம் : இந்திய அணிக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. ஷுப்மான் கில்லின் இரட்டை சதத்தால்…

6 hours ago

மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!

பொள்ளாச்சி : பொள்ளாச்சியைச் சேர்ந்த குருதீப் என்ற 10ஆம் வகுப்பு மாணவர், தனியார் பள்ளியில் பயின்று வந்த நிலையில், 2025ஆம்…

7 hours ago

தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி மணிமாறன் வெட்டிக் கொலை.!

காரைக்கால் : மயிலாடுதுறை அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் காரைக்கால் மாவட்ட நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை…

8 hours ago

5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!

பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 587 ரன்களை குவித்துள்ளது. இந்திய அணிக்கு தூணாக நின்று…

9 hours ago

“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!

சென்னை : திருப்புவனம் இளைஞர் மரணத்தை கண்டித்து நாளை (ஜூலை 3, 2025) எழும்பூர், ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற இருந்த…

9 hours ago